ETV Bharat / state

'தல' காய்ச்சல்: 'நேர்கொண்ட பார்வை' பாக்கப் போறேன்... ப்ளீஸ் லீவு கொடுங்க!

author img

By

Published : Aug 7, 2019, 5:03 PM IST

நாகை: நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு செல்ல அனுமதி கேட்டு கல்லூரி மாணவர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதிய சம்பவம் வைரலாகிவருகிறது.

nerkonda paarvai

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' படம் நாளை வெளியாகிறது. இந்தியில் வெளியான 'பிங்க்' திரைப்படத்தின் தமிழ் வெர்ஷனே நேர்கொண்ட பார்வை.

இந்நிலையில், நாகையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி துறைத் தலைவருக்கு தான் நாளை வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தைக் காண செல்வதால் தனக்கு விடுமுறை அளிக்குமாறு விடுப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

nerkonda paarvai
விடுப்பு கடிதம்

இதனைக்கண்ட துறைத் தலைவர் அக்கடிதத்தில் மாணவரின் பெற்றோரை அழைத்துக் கொண்டு தன்னை வந்து சந்திக்குமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இக்கடித்தை பார்த்த இணையதளவாசிகள் ஆதாரவளித்தும் சிலர் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வியை உதாசீனப்படுத்தியும் கல்லூரி-பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என பலரையும் சினிமா எவ்வாறு சீரழித்துவருகிறது என்பதற்கு இந்தக் கடிதம் உதாரணமாக திகழ்கிறது என்று பலரும் வேதனை தெரிவித்துவருகின்றனர்.

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' படம் நாளை வெளியாகிறது. இந்தியில் வெளியான 'பிங்க்' திரைப்படத்தின் தமிழ் வெர்ஷனே நேர்கொண்ட பார்வை.

இந்நிலையில், நாகையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி துறைத் தலைவருக்கு தான் நாளை வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தைக் காண செல்வதால் தனக்கு விடுமுறை அளிக்குமாறு விடுப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

nerkonda paarvai
விடுப்பு கடிதம்

இதனைக்கண்ட துறைத் தலைவர் அக்கடிதத்தில் மாணவரின் பெற்றோரை அழைத்துக் கொண்டு தன்னை வந்து சந்திக்குமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இக்கடித்தை பார்த்த இணையதளவாசிகள் ஆதாரவளித்தும் சிலர் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வியை உதாசீனப்படுத்தியும் கல்லூரி-பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என பலரையும் சினிமா எவ்வாறு சீரழித்துவருகிறது என்பதற்கு இந்தக் கடிதம் உதாரணமாக திகழ்கிறது என்று பலரும் வேதனை தெரிவித்துவருகின்றனர்.

Intro:Body:சினிமாவிற்கு செல்ல அனுமதி கேட்டு கடிதம் எழுதிய மாணவன் - கடுப்பான ஆசிரியர்.


தமிழக சினிமா துறையில் முக்கிய கதாநாயகனாகவும், இளைய தலைமுறை ரசிகர்களை அதிகம் கொண்ட திரைப்பட நடிகர் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நாகையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி துறைத் தலைவருக்கு தான் நாளை வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தைக் காண செல்வதால் தனக்கு விடுமுறை அளிக்குமாறு விடுப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இதனைக்கண்ட துறைத்தலைவர் அக்கடிதத்தில் மாணவரின் பெற்றோர் அழைத்துக் கொண்டு தன்னை வந்து சந்திக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பலரின் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வியை உதாசீனப் படுத்தும் விதமாக சினிமா, கல்லூரி, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என பலரையும் எவ்வாறு சீரழித்து வருகிறது என்பதற்கு இந்தக் கடிதம் உதாரணமாக திகழ்கிறது என்று பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.