நாகை மாவட்டத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு வருகிறார். முன்னதாக, வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடுசெய்த முதலமைச்சருக்கு, பேராலய அதிபர் பிரபாகர் மாதாவின் திருவுருவச் சிலையை பரிசளித்தார்.
![Chief Minister inspects flood affected areas in Nagai Cm Visiting Nagapattinam நாகையில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு நாகை வெள்ள பாதிப்பு நாகையில் முதலமைச்சர் ஆய்வு CM Edapadi Palanisamy Flood Areas Inspection](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9815125_ngp1.jpg)
இதைத் தொடர்ந்து, நாகூரில் அமைந்துள்ள 460 ஆண்டுகள் பழமையான நாகூர் தர்காவின் தீர்த்தக்குளத்தில் சுற்றுச்சுவர் மழையில் சேதமடைந்ததைப் பார்வையிட்டு தர்கா ஆண்டவர் சன்னிதியில் இஸ்லாமிய முறைப்படி, தொப்பி அணிந்து சிறப்புத் தொழுகையில் பங்கேற்றார்.
![Chief Minister inspects flood affected areas in Nagai Cm Visiting Nagapattinam நாகையில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு நாகை வெள்ள பாதிப்பு நாகையில் முதலமைச்சர் ஆய்வு CM Edapadi Palanisamy Flood Areas Inspection](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9815125_ngp.jpg)
பின்னர் மகிழி, கருங்கண்ணி, பலங்கள்ளி மேடு பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்களைப் பார்வையிட உள்ளார். அதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடச் செல்ல இருக்கிறார்.
இதையும் படிங்க: புயல் பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய குழுவிடம் முதலமைச்சர் கோரிக்கை!