ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை கொள்ளை

author img

By

Published : Jul 25, 2021, 4:02 PM IST

திருவாலங்காடு கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் தங்க நகை, ரூ.3 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நகை கொள்ளை
நகை கொள்ளை

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் திருவாவடுதுறை ஆதினத்தில் கணக்காளராக பணிபுரிகிறார்.

வீட்டில் கொள்ளை

திருக்கோடிக்காவல் கிராமத்தில் இவரது தாயார் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (ஜூலை. 24) ராஜேந்திரன் தாயாரை பார்ப்பதற்காக தனது மனைவியை அழைத்துக்கொண்டு சென்றார்.

இன்று (ஜூலை. 25) அதிகாலை மீண்டும் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர்.

நகை கொள்ளை

அதில் அடையாளம் தெரியாத நபர்கள் சுவர் ஏறி குதித்து, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 34 பவுன் தங்க நகை, ரூ.3 ஆயிரம் பணம், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

தற்போது மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: அப்டேட் இல்லையென்றால் வங்கிக்கணக்கு முடக்கம் என்னும் குறுஞ்செய்தியை நம்பாதீர்கள் - காவல் துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் திருவாவடுதுறை ஆதினத்தில் கணக்காளராக பணிபுரிகிறார்.

வீட்டில் கொள்ளை

திருக்கோடிக்காவல் கிராமத்தில் இவரது தாயார் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (ஜூலை. 24) ராஜேந்திரன் தாயாரை பார்ப்பதற்காக தனது மனைவியை அழைத்துக்கொண்டு சென்றார்.

இன்று (ஜூலை. 25) அதிகாலை மீண்டும் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர்.

நகை கொள்ளை

அதில் அடையாளம் தெரியாத நபர்கள் சுவர் ஏறி குதித்து, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 34 பவுன் தங்க நகை, ரூ.3 ஆயிரம் பணம், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

தற்போது மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: அப்டேட் இல்லையென்றால் வங்கிக்கணக்கு முடக்கம் என்னும் குறுஞ்செய்தியை நம்பாதீர்கள் - காவல் துறை எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.