ETV Bharat / state

இருசக்கர வாகனங்களை திருடிய முதியவர் கைது - Theft of Nagai Motorcycles

நாகை: பொறையார் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய முதியவரை காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இருசக்கர வாகனங்களை திருடிய  முதியவர் கைது
இருசக்கர வாகனங்களை திருடிய முதியவர் கைது
author img

By

Published : Jan 22, 2020, 6:59 AM IST

நாகை மாவட்டம் பொறையார் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் திருக்கடையூர் பேருந்து நிறுத்தம் அருகில் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் முதியவர் காரைக்காலை சேர்ந்த டி. சில்வா (62) என்பதும், அவர் கடந்த சில மாதங்களாக பொறையாறு, காரைக்கால் , திருக்கடையூர், தரங்கம்பாடி, ஆயப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.

இருசக்கர வாகனங்களை திருடிய முதியவர் கைது

அதனைத் தொடர்ந்து முதியவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


இதையும் படிங்க: தொடர் மணல் திருட்டு - மூன்று பேர் கைது!

நாகை மாவட்டம் பொறையார் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் திருக்கடையூர் பேருந்து நிறுத்தம் அருகில் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் முதியவர் காரைக்காலை சேர்ந்த டி. சில்வா (62) என்பதும், அவர் கடந்த சில மாதங்களாக பொறையாறு, காரைக்கால் , திருக்கடையூர், தரங்கம்பாடி, ஆயப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.

இருசக்கர வாகனங்களை திருடிய முதியவர் கைது

அதனைத் தொடர்ந்து முதியவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


இதையும் படிங்க: தொடர் மணல் திருட்டு - மூன்று பேர் கைது!

Intro:பொறையார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடிய முதியவர் கைது. நான்கு வாகனங்கள் பறிமுதல்:-Body:நாகை மாவட்டம் பொறையார் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த பல மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடுவதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. இந்நிலையில்
திருக்கடையூர் பேருந்து நிறுத்தம் அருகில் காவல் ஆய்வாளர் செல்வம்
தலைமையில் பொறையார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இல்லை என்பதும் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காரைக்காலை சேர்ந்த
ரிச்சர்ட் பான்ட்லே டி-சில்வா ( வயது62) என்பதும் இவர் கடந்த பல மாதங்களாக பொறையாறு, காரைக்கால் , திருக்கடையூர், தரங்கம்பாடி ,ஆயப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து
டி-சில்வா மீதுவழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் 4 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி பொறையார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.