ஸ்ரீராகவேந்திரா சுவாமிகளின் 348ஆம் ஆண்டு ஆராதனை விழா பஜனை, கர்நாடக இசை நிகழ்ச்சியுடன், பக்தர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.
ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் சித்தியடைந்து 348 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது ஆராதனை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் நடைபெறுகிறது.
அதன்படி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், ராகவேந்திர சுவாமிகள் 24ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் சுவாமி படத்திற்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பாகவத பஜனை, கர்நாடக இசை பஜனை நடைபெற்றன. இறுதியாக, சுவாமிகள் படத்திற்கு மஹாதீபாராதனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பரவசமாக நடனமாடி, தரிசனம் செய்தனர்.