ETV Bharat / state

தமிழ்நாடு மீனவர்கள் 12 பேருக்கு 8ஆம் தேதி வரை சிறை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Jul 5, 2022, 10:00 AM IST

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 12 பேருக்கு ஜூலை 8ஆம் தேதி வரை சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12 தமிழ்நாடு மீனவர்களுக்கு வரும் 8ஆம் தேதி வரை சிறைக்காவல்
12 தமிழ்நாடு மீனவர்களுக்கு வரும் 8ஆம் தேதி வரை சிறைக்காவல்

கொழும்பு: தமிழ்நாட்டிலிருந்து இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள், வழக்கமான மீன்பிடிப்பு பகுதியில் ஜூலை 3ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இரண்டு விசைப்படுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் விசாரணைக்காக மயிலிட்டி துறைமுகம் கொண்டுசெல்லப்பட்டனர். முதல்கட்ட தகவலில், இவர்கள் காரைக்காலை சேர்ந்த இளையராஜா, பிரேம்குமார், கணேசன் உள்பட 5 மீனவர்கள், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த விக்னேஷ், ஜெகதீஷ், ராமநாதன் உள்ளிட்ட ஏழு மீனவர்கள் என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, 12 பேரும் நேற்று (ஜூலை 4) பிற்பகல் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிரிசாந்த் பொன்னுத்துரை, அனைவரையும் ஜூலை 8ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

கொழும்பு: தமிழ்நாட்டிலிருந்து இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள், வழக்கமான மீன்பிடிப்பு பகுதியில் ஜூலை 3ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இரண்டு விசைப்படுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் விசாரணைக்காக மயிலிட்டி துறைமுகம் கொண்டுசெல்லப்பட்டனர். முதல்கட்ட தகவலில், இவர்கள் காரைக்காலை சேர்ந்த இளையராஜா, பிரேம்குமார், கணேசன் உள்பட 5 மீனவர்கள், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த விக்னேஷ், ஜெகதீஷ், ராமநாதன் உள்ளிட்ட ஏழு மீனவர்கள் என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, 12 பேரும் நேற்று (ஜூலை 4) பிற்பகல் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிரிசாந்த் பொன்னுத்துரை, அனைவரையும் ஜூலை 8ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.