ETV Bharat / state

வைகை அணையில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி - collector pallavi baldev,

தேனி: வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக ஆயிரத்து 130 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

vaigai dam water open
author img

By

Published : Oct 9, 2019, 1:28 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. 71 அடி நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரமாகத் திகழ்கிறது. முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீர், வருசநாடு அருகே உள்ள மூலவைகை ஆகியவற்றிலிருந்து வரும் தண்ணீர் வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இருக்கிறது.

வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர்

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த பருவமழையினால் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், வைகை அணையின் நீர் மட்டம் 60 அடியை எட்டியது. இதனையடுத்து ஒருபோக சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் கோரிக்கைவைத்தனர்.

இவர்களது கோரிக்கையை ஏற்று, அணையிலிருந்து செப்டம்பர் 9ஆம் முதல் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதனடிப்படையில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று நவதானியங்களைத் தூவி தண்ணீரை திறந்துவைத்தார். மதகுப்பகுதியில் அணையின் பிரதான ஏழு கண் பெரிய மதகுகள் திறக்கப்பட்டன.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. 71 அடி நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரமாகத் திகழ்கிறது. முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீர், வருசநாடு அருகே உள்ள மூலவைகை ஆகியவற்றிலிருந்து வரும் தண்ணீர் வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இருக்கிறது.

வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர்

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த பருவமழையினால் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், வைகை அணையின் நீர் மட்டம் 60 அடியை எட்டியது. இதனையடுத்து ஒருபோக சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் கோரிக்கைவைத்தனர்.

இவர்களது கோரிக்கையை ஏற்று, அணையிலிருந்து செப்டம்பர் 9ஆம் முதல் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதனடிப்படையில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று நவதானியங்களைத் தூவி தண்ணீரை திறந்துவைத்தார். மதகுப்பகுதியில் அணையின் பிரதான ஏழு கண் பெரிய மதகுகள் திறக்கப்பட்டன.

Intro: மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 3மாவட்டத்தில் உள்ள 1.05லட்சம் ஏக்கர் ஒரு போக பாசன நிலத்திற்கு தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு.
குறுகிய கால பயிர் சாகுபடிக்காக திறக்கப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திட ஆட்சியர் வேண்டுகோள்.


Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. 71 அடி நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட இவ்வணையினால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாராகமாகத் திகழ்கிறது. முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீர், மற்றும் வருசநாடு அருகே உள்ள மூலவைகை ஆகியவற்றில் இருந்து வரும் தண்ணீர் ஆகியவை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும்.
இந்நிலையில் கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் தீவிரமடைந்த பருவமழையினால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டும் 60அடியை எட்டியது. இதனையடுத்து ஒரு போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின்கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து செப்டம்பர் 9 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன்படி தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று அணையின் மதகுகளை இயக்கி தண்ணீர் திறந்து வைத்தார். மதகுப்பகுதியில் பூஜை செய்து வழிபட்டு அணையின் பிரதான 7 கண் பெரிய மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் நவதானியங்கள் மற்றும் பூக்கள் தூவி வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள 85,563ஏக்கர் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள 19,439 ஏக்கர் ஆக மொத்தம் 1,05,002 ஒரு போக நிலங்களுக்கு குறுகிய கால சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்வரத்து மற்றும் இருப்பை பொறுத்து இன்று முதல் 120 நாட்களுக்கு திறக்கப்படும் இந்த தண்ணீரால் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகி 3மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள். மேலும் சாகுபடிக்காக திறக்கப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றார்.



Conclusion: இந்நிகழ்வில் பொதுப்பணி, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.