ETV Bharat / state

திருச்சியில் மதுபாட்டில் கடத்தி விற்க முயன்ற வழக்கு - பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

author img

By

Published : Apr 20, 2020, 5:03 PM IST

மதுரை: திருச்சி அருகே மதுபாட்டில்களை கடத்தி விற்க முயன்ற வழக்கில் 5 பேரின் பிணை மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுபாட்டில் கடத்தி விற்க முயன்ற வழக்கு
மதுபாட்டில் கடத்தி விற்க முயன்ற வழக்கு

தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் மதுபாட்டில்களை திருடி விற்க திட்டமிட்ட ரவிச்சந்திரன், கோவிந்தராஜ், திருப்பதி ஆகியோரிடமிருந்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 15 மது பாட்டில்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல் அவர்களது கூட்டாளிகளான சரத்குமார், தனபால் இருவரிடமிருந்தும் 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஐந்து பேரையும் விடுவிக்கக் கோரி அவர்களது குடும்பத்தினர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், பிணை வழங்க மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 20 கோடி ரூபாய் செலவில் புற்றுநோயை குணமாக்கும் கருவிகள்! - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் மதுபாட்டில்களை திருடி விற்க திட்டமிட்ட ரவிச்சந்திரன், கோவிந்தராஜ், திருப்பதி ஆகியோரிடமிருந்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 15 மது பாட்டில்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல் அவர்களது கூட்டாளிகளான சரத்குமார், தனபால் இருவரிடமிருந்தும் 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஐந்து பேரையும் விடுவிக்கக் கோரி அவர்களது குடும்பத்தினர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், பிணை வழங்க மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 20 கோடி ரூபாய் செலவில் புற்றுநோயை குணமாக்கும் கருவிகள்! - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.