ETV Bharat / state

டிப்பர் லாரி - டாட்டா சுமோ நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

மதுரை: திருமங்கலம் அருகே டிப்பர் லாரியும் சுமோவும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் படுகாயமடைந்தனர்.

author img

By

Published : Jul 3, 2020, 4:50 PM IST

விபத்து
விபத்து

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கட்டட வேலை பார்ப்பதற்காக டாட்டா சுமோ காரில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது கல்லணை குவாரியிலிருந்து கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி கல்லணை விலக்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக டாட்டா சுமோ மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் சுமோவில் இருந்த 13 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கல்லணையை சேர்ந்த ராசு என்பவர் உயிரிழந்தார். பின் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கூடக்கோவில் காவல் துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கட்டட வேலை பார்ப்பதற்காக டாட்டா சுமோ காரில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது கல்லணை குவாரியிலிருந்து கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி கல்லணை விலக்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக டாட்டா சுமோ மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் சுமோவில் இருந்த 13 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கல்லணையை சேர்ந்த ராசு என்பவர் உயிரிழந்தார். பின் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கூடக்கோவில் காவல் துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.