ETV Bharat / state

குழந்தைகளை ஆட்டோக்கள் மூலம் பள்ளிக்கு அழைத்துச்செல்வதை ஏற்க இயலாது!

author img

By

Published : Oct 28, 2022, 6:12 PM IST

குழந்தைகளை பள்ளிக்குப் பெற்றோர் ஆட்டோ, ரிக்சா போன்றவற்றில் அனுப்புவதை பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றன என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: நாகர்கோயிலைச் சேர்ந்த சுயம்புலிங்கம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கல்வி நிறுவன வாகன விதிகள் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தங்கள் வாகனங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டுக்கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பல்வேறு விதிகள் உள்ளன.

ஆனாலும், கல்வி வாகனங்களில் அதிகளவில் மாணவர்களை ஏற்றுவது, வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, வாகனங்களில் பள்ளியின் பெயர் குறிப்பிடாமல் இருப்பது, மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துநர் இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.

இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டு அதில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் தற்போது வரை தனியார் பள்ளிகளில் முறையாக, வாகனங்களைப் பராமரிக்காமல் இருப்பது போன்ற நடைமுறைகள் தற்போதும் இருந்து வருகிறது. எனவே, பள்ளி நிறுவனங்கள் விதிகளை முறையாகப்பின்பற்றவும் உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,

* அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆகியவற்றில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும்.

* குழந்தைகளைப் பள்ளிக்கு பெற்றோர்கள், ஆட்டோக்கள் மற்றும் ரிக்சாக்கள் மூலம் எவ்வாறு அனுப்புகின்றனர்? இதனைப் பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றன? இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் ஏற்காது.

*பள்ளி வாகனங்களுக்கு எனப் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஆட்டோ, ரிக்சாக்கள் மூலம் என்ன விதிமுறை உள்ளது. இது மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது எனக்கூறி,

வழக்கு குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: இயற்கை புகையிலை விற்பனைக்குத் தடையில்லை - உயர் நீதிமன்றக்கிளை

மதுரை: நாகர்கோயிலைச் சேர்ந்த சுயம்புலிங்கம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கல்வி நிறுவன வாகன விதிகள் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தங்கள் வாகனங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டுக்கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பல்வேறு விதிகள் உள்ளன.

ஆனாலும், கல்வி வாகனங்களில் அதிகளவில் மாணவர்களை ஏற்றுவது, வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, வாகனங்களில் பள்ளியின் பெயர் குறிப்பிடாமல் இருப்பது, மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துநர் இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.

இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டு அதில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் தற்போது வரை தனியார் பள்ளிகளில் முறையாக, வாகனங்களைப் பராமரிக்காமல் இருப்பது போன்ற நடைமுறைகள் தற்போதும் இருந்து வருகிறது. எனவே, பள்ளி நிறுவனங்கள் விதிகளை முறையாகப்பின்பற்றவும் உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,

* அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆகியவற்றில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும்.

* குழந்தைகளைப் பள்ளிக்கு பெற்றோர்கள், ஆட்டோக்கள் மற்றும் ரிக்சாக்கள் மூலம் எவ்வாறு அனுப்புகின்றனர்? இதனைப் பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றன? இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் ஏற்காது.

*பள்ளி வாகனங்களுக்கு எனப் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஆட்டோ, ரிக்சாக்கள் மூலம் என்ன விதிமுறை உள்ளது. இது மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது எனக்கூறி,

வழக்கு குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: இயற்கை புகையிலை விற்பனைக்குத் தடையில்லை - உயர் நீதிமன்றக்கிளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.