ETV Bharat / state

டாஸ்மாக் ஊழியர்கள் பட்டினிப் போராட்டம்!

மதுரை: விற்பனை அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் டாஸ்மாக் ஊழியர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினர்.

author img

By

Published : Nov 15, 2019, 3:50 PM IST

protest

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் ஜெயம் திரையரங்கு அருகே டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனத்தின் சார்பாக பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத் தலைவர் லெனின் பேசுகையில், டாஸ்மாக் கடை ஊழியர்களிடையே, சுயவிருப்பு வெறுப்பின் காரணமாகவும், ஆதாயம் அடையும் நோக்கத்துடனும், பழிவாங்கும் நோக்குடன் நடந்துள்ள முறையற்ற ஆய்வின் அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.

கடை ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களிடம் பணம் பறிக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை, தேனி மாவட்டங்களில் எவ்வித அறிவிப்பும் இன்றி பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும். டாஸ்மாக் அலுவலர்களுக்கு மாமூல் வசூலித்துத் தரும் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

டாஸ்மாக் கடைகளின் விற்பனை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து பணி நிரப்ப வேண்டும் எனவும் அவர்களின் மருத்துவ சிகிச்சை நிதி, போக்குவரத்து படி, மின்சார காப்புத் தொகை ஆகியவற்றை நிறைவு இல்லாமல் உடனடியாக வழங்கவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாஸ்மாக் ஊழியர்கள்

அதேபோல், பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்களை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஊழியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிடவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: 30அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை ஊழியர்கள் சாலை மறியல்!

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் ஜெயம் திரையரங்கு அருகே டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனத்தின் சார்பாக பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத் தலைவர் லெனின் பேசுகையில், டாஸ்மாக் கடை ஊழியர்களிடையே, சுயவிருப்பு வெறுப்பின் காரணமாகவும், ஆதாயம் அடையும் நோக்கத்துடனும், பழிவாங்கும் நோக்குடன் நடந்துள்ள முறையற்ற ஆய்வின் அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.

கடை ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களிடம் பணம் பறிக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை, தேனி மாவட்டங்களில் எவ்வித அறிவிப்பும் இன்றி பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும். டாஸ்மாக் அலுவலர்களுக்கு மாமூல் வசூலித்துத் தரும் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

டாஸ்மாக் கடைகளின் விற்பனை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து பணி நிரப்ப வேண்டும் எனவும் அவர்களின் மருத்துவ சிகிச்சை நிதி, போக்குவரத்து படி, மின்சார காப்புத் தொகை ஆகியவற்றை நிறைவு இல்லாமல் உடனடியாக வழங்கவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாஸ்மாக் ஊழியர்கள்

அதேபோல், பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்களை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஊழியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிடவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: 30அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை ஊழியர்கள் சாலை மறியல்!

Intro:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
Body:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனத்தின் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் மதுரை பழங்காநத்தம் ஜெயம் திரையரங்கு அருகே நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதுரை விருதுநகர் திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்க தலைவர் லெனின் கூட்டத்தில் பேசும்போது, கடை ஊழியர்களிடையே பாகுபாடும் விருப்பு வெறுப்பு மற்றும் ஆதாயம் அடையும் நோக்கத்துடனும் பழிவாங்கும் நோக்குடன் நடந்துள்ள முறையற்ற கடை ஆய்வு அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் மேலும் கடை ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களிடம் பணம் பறிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரை தேனி மாவட்டங்களில் எவ்வித அறிவிப்பும் இன்றி பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மாமூல் வசூல் சித்தரும் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

மேலும் டாஸ்மாக் கடைகளின் விற்பனை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து பணி நிரவல் செய்ய வேண்டும் எனவும் அவர்களின் மருத்துவ சிகிச்சை நிதி போக்குவரத்து படி மின்சார காப்புத் தொகை ஆகியவற்றை நிறைவு இல்லாமல் உடனடியாக வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.

அதேபோன்று பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு காலதாமதமின்றி ஓய்வுகால பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் இளநிலை உதவியாளர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஊழியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிடவும் வலியுறுத்தினர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று மாலை 5 மணி வரை மதுரை பழங்காநத்தம் அருகே நடைபெறுகிறதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.