ETV Bharat / state

ஜிஎஸ்டி குழு அமைப்பு: வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் வரவேற்பு

author img

By

Published : Apr 5, 2022, 4:14 PM IST

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) கடைப்பிடிப்பதிலும், ஜிஎஸ்டி வரி வீதங்களிலும் உள்ள பிரச்சினைகளையும், சிரமங்களையும் பரிசீலிக்க தமிழ்நாடு அரசு ஓர் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது குறித்து வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

மதுரை: வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் நீண்ட காலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி வரியை கடைப்பிடிப்பதில் உள்ள பிரச்சினைகளையும், பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி வீதங்கள் விதிப்பதில் தொழில், வணிகத்துறை எதிர்கொண்டு வரும் சிரமங்களை அடையாளம் கண்டு ஜிஎஸ்டி கவுன்சிலின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி. டட்டார் தலைமையில் ஓர் ஆலோசனைக் குழு அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் மிக்க நன்றி. ஜிஎஸ்டி வரி ஓர் முற்போக்கான வரிமுறை என்ற காரணத்தால், இது சிறந்த எளிமையான வரிமுறையாக (Good and Simple Tax) இருக்கும் எனக் கருதி தொழில் வணிகத் துறையினர் இவ்வரிமுறைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அறிக்கை, விளக்கம், திருத்தம் என ஜிஎஸ்டி சட்ட அமலாக்கத்தை குழப்பிவிட்ட காரணத்தினால், ஜிஎஸ்டி வரிமுறை ஓர் 'பயங்கரவாத வரிமுறையாக' மாறிவிட்டது.

இதனால் சிறு வணிகர்கள் பலர் சட்ட விதிகளைப் புரிந்துகொள்ள முடியாமல் பெரும் தொகையை அபராதமாகவும், வரியாகவும், வட்டியாகவும் செலுத்த வேண்டி வருமோ என அஞ்சி தங்கள் வணிகத்தையே நிறுத்தி விட்டார்கள்.

தொழில் வணிகத் துறையினர் பயன்: இந்தநிலையில், தமிழ்நாடு அரசு ஆலோசனைக் குழு அமைத்துள்ளது. பெரிய தொழிற்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), சேவைத் துறையினர் மற்றும் நுகர்வோர் இவ்வரிச் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் சந்திக்கும் பிரச்சனைகளை மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று அறிவித்திருப்பதன் காரணமாகத் தொழில் வணிகத் துறையினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தினால் மிகுந்த சிரமங்களைச் சந்தித்துத் தத்தளித்துக் கொண்டிருப்போர் அதிலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளனர்.

வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல்
வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல்

மூத்த வழக்கறிஞர் டட்டார் குழு பணி வரம்பில் 'வணிகர்கள்' என்று குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை எனினும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் கீழ் வணிகர்கள் பிரச்சினைகளும் பரிசீலிக்கப்படும் எனக் கருதுகிறோம்.

இக்குழுவானது தமிழ்நாட்டின் அனைத்துத் தொழில் வணிக மையங்களுக்கும் சென்று அங்குள்ள முக்கியமான தொழில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டைப் பின்பற்றி பிற மாநிலங்களும் இதுபோன்று குழு அமைத்தால் ஜிஎஸ்டி கவுன்சிலில் எழுப்பப்படும் பிரச்சினைகளில் கருத்தொற்றுமை ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வருவாய், வரிவிதிப்பிற்கான கூட்டாட்சி நிதிக் கட்டமைப்பிற்கான நிபுணர்கள் அடங்கிய குழு அமைப்பு - அரசாணை வெளியீடு

மதுரை: வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் நீண்ட காலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி வரியை கடைப்பிடிப்பதில் உள்ள பிரச்சினைகளையும், பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி வீதங்கள் விதிப்பதில் தொழில், வணிகத்துறை எதிர்கொண்டு வரும் சிரமங்களை அடையாளம் கண்டு ஜிஎஸ்டி கவுன்சிலின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி. டட்டார் தலைமையில் ஓர் ஆலோசனைக் குழு அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் மிக்க நன்றி. ஜிஎஸ்டி வரி ஓர் முற்போக்கான வரிமுறை என்ற காரணத்தால், இது சிறந்த எளிமையான வரிமுறையாக (Good and Simple Tax) இருக்கும் எனக் கருதி தொழில் வணிகத் துறையினர் இவ்வரிமுறைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அறிக்கை, விளக்கம், திருத்தம் என ஜிஎஸ்டி சட்ட அமலாக்கத்தை குழப்பிவிட்ட காரணத்தினால், ஜிஎஸ்டி வரிமுறை ஓர் 'பயங்கரவாத வரிமுறையாக' மாறிவிட்டது.

இதனால் சிறு வணிகர்கள் பலர் சட்ட விதிகளைப் புரிந்துகொள்ள முடியாமல் பெரும் தொகையை அபராதமாகவும், வரியாகவும், வட்டியாகவும் செலுத்த வேண்டி வருமோ என அஞ்சி தங்கள் வணிகத்தையே நிறுத்தி விட்டார்கள்.

தொழில் வணிகத் துறையினர் பயன்: இந்தநிலையில், தமிழ்நாடு அரசு ஆலோசனைக் குழு அமைத்துள்ளது. பெரிய தொழிற்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), சேவைத் துறையினர் மற்றும் நுகர்வோர் இவ்வரிச் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் சந்திக்கும் பிரச்சனைகளை மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று அறிவித்திருப்பதன் காரணமாகத் தொழில் வணிகத் துறையினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தினால் மிகுந்த சிரமங்களைச் சந்தித்துத் தத்தளித்துக் கொண்டிருப்போர் அதிலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளனர்.

வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல்
வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல்

மூத்த வழக்கறிஞர் டட்டார் குழு பணி வரம்பில் 'வணிகர்கள்' என்று குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை எனினும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் கீழ் வணிகர்கள் பிரச்சினைகளும் பரிசீலிக்கப்படும் எனக் கருதுகிறோம்.

இக்குழுவானது தமிழ்நாட்டின் அனைத்துத் தொழில் வணிக மையங்களுக்கும் சென்று அங்குள்ள முக்கியமான தொழில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டைப் பின்பற்றி பிற மாநிலங்களும் இதுபோன்று குழு அமைத்தால் ஜிஎஸ்டி கவுன்சிலில் எழுப்பப்படும் பிரச்சினைகளில் கருத்தொற்றுமை ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வருவாய், வரிவிதிப்பிற்கான கூட்டாட்சி நிதிக் கட்டமைப்பிற்கான நிபுணர்கள் அடங்கிய குழு அமைப்பு - அரசாணை வெளியீடு

For All Latest Updates

TAGGED:

Gst council
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.