ETV Bharat / state

பாஜகவுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை - சீதாராம் யெச்சூரி

author img

By

Published : Mar 31, 2022, 6:31 AM IST

பாஜகவுக்கு மக்கள் நலன் குறித்து கொஞ்சமும் அக்கறை இல்லை என்றும், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே அக்கட்சியின் நோக்கம் என சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

சீதாராம் யெச்சூரி பேச்சு
சீதாராம் யெச்சூரி பேச்சு

மதுரை: மதுரையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநில மாநாடு மார்ச் 30 முதல் எப்ரல் 1 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்று(மார்ச் 30) மாநாட்டில் கலந்து கொண்டு சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். அப்போது "பாஜக இந்துத்துவ கொள்கையை அமலாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்ய முடியவில்லை. நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பாஜகவின் எதிரிகளை அச்சுறுத்தி வருகிறது.

நாட்டின் பொதுத்துறையை கார்ப்பரேட்டுகளுக்கு விற்க முயல்கின்றனர். கார்ப்பரேட்டுகள் நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கின்றனர். ஜனநாயக, குடிமையியல் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

இந்திய மக்களின் உரிமைகளை பறிக்கிறது. கொடுமையான சட்டங்களை இயற்றி மக்களை துன்புறுத்துகிறது. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

உரிமைகள் பறிக்கப்படுகின்றன: நாட்டின் அடிப்படை ஜனநாயக அம்சமான சிஏஏ, காஷ்மீர் வழக்குகள் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. நாட்டின் அடிப்படை அமைப்புகள் தகர்க்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பெறப்பட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னெடுக்கிறோம். நாட்டின் அடிப்படையான 4 தூண்களை தகர்த்து எறிகிறது. கூட்டாட்சி தத்துவம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

நாட்டின் பன்முக கலாச்சார, மொழிகளை காக்கும் அரசியல் சட்டத்தை இந்திய அரசின் ஒருமைப்பாட்டை தாக்கும் வகையில் ஒற்றை நாடாக மாற்ற முயல்கிறது மத்திய அரசு. கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தியுள்ளது. சிஏஏ சட்டத்தை இயற்றியபோது மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை கொண்டு வந்தபோது மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டம் என்றவுடன் சட்டத்தை திரும்ப பெற்றது. மத்திய அரசை கண்டித்து 4 முறை பொதுவேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையிலும் பாஜக மீண்டும் ஏன் வெற்றி பெறுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.

ஜனநாயகத்திற்கு எதிரானது பாஜக, மாநிலங்கள் கலாச்சார பண்பாட்டை அழித்து ஒற்றைக் கலாச்சாரத்தை புகுத்த முயல்கின்றனர். ஒன்றிய அரசு என்பதையே ஏற்க மறுக்கிறது.

மத்திய அரசு இந்துத்துவா என்பதை முன்னிலைப்படுத்துகிறது. நாட்டின் விலைவாசி, வேலையின்மை குறித்து பேசுவதில்லை. மக்களை மத ரீதியாக பிரிக்கும் பேச்சுகளை பேசி வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வு : சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்து மக்களை இணைக்க முயல்கின்றனர். இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை புகுத்தி தாக்குதல் நடத்துகின்றனர். இந்துத்துவ கொள்கைகளை எடுத்துரைத்து மக்களின் பிரச்சனைகளை மறைத்து வருகின்றனர்.

சீதாராம் யெச்சூரி பேச்சு

புதிய கல்வி கொள்கை திட்டத்தின் மூலம் தங்களது கொள்கைகளை புகுத்துகின்றனர். காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் 90களில் நடைபெற்ற காஷ்மீர் பண்டீட்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் சார்ந்த படம். 90 கலவரத்தில் 89 காஷ்மீர் பண்டீட்கள் கொல்லப்பட்டதாக ராணுவ தகவல் உள்ள நிலையில், 1600 இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அதை மறைத்து இந்துகள் கொல்லப்பட்டதாக கூறி இந்து-முஸ்லீம் மோதலை உருவாக்குகிறது.

வன்முறை தத்துவத்தை கொண்டு செல்ல முயற்சி : விலை மதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க வேண்டும் அதற்கு தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு ஒற்றுமை வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக பாஜக அரசு மக்களை பிரித்தாள்கிறது.

அதற்காக தான் இது போன்ற மதவாத முயற்சிகளை கையில் எடுக்கிறது. காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்க்காதவர் தேச பக்தி அற்றவர்கள் என கூறுவது நாட்டின் தேச பக்தியை இந்த அளவிற்கு தான் எடுத்துரைக்கிறது. மதசார்பற்ற அடிப்படையை தகர்க்க வேண்டும் என்ற நோக்கில் பகவத் கீதையை பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்கின்றனர்.

பகவத்கீதை மூலமாக வன்முறை தத்துவத்தை கொண்டு செல்ல பாஜக முயல்கிறது. பாஜக பகவத் கீதையை ஏன் முன்னுறுத்துகின்றனர் என்றால் சாதி ரீதியான அடுக்குகளை நியாயப்படுத்துவதை அந்த நூல் காட்டுகிறது. மேல் சமூகத்தில் பிறந்தவர்களுக்கு கீழ் சமூகத்தில் பிறந்தவர்கள் சேவை ஆற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் பகவத்கீதை போதனைகள் உள்ளன.

சாதிய கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் பகவத் கீதை உள்ளது. பெண் என்றால் தந்தை, கணவனுக்கு பணியாற்றி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என பகவத்கீதை கூறுகிறது. பகவத் கீதையை முன்னிறுத்தி பாஜகவின் கட்டமைப்பை கொண்டு செல்ல முயல்கின்றனர்.

இந்துத்துவ சக்திகளை வீழ்த்த வேண்டும் : இந்துத்துவா அமைப்புகளின் இது போன்றவற்றை எதிர்க்க வேண்டிய நிலை உள்ளது. மார்க்சிஸ்ட் மற்றும் இடது சாரி இயக்கங்கள் மோடி அரசை வீழ்த்த வேண்டும். கொள்கைகள் என்றால் நம்மால் தான் முடியும், இதனை மோடி புரிந்து வைத்துள்ளார்.

பாஜக எம்பிகளிடம் பேசியபோது இடதுசாரிகள் குறித்து பேசி வருகிறார்.கொள்கை ரீதியாக எதிர்த்து நிற்கும் இயக்கம். தத்துவார்த்த ரீதியாக எதிர்த்து முறியடிக்க முடியும்.

உழைப்பாளிகளை திரட்டி மோடிக்கு எதிராக போராடுகிறோம், எந்தவித அச்சுறுத்தல் இன்றி போராடுகிறோம். கேரள, மேற்குவங்கத்தில் வர்க்க எதிரிகளை எதிர்த்து அச்சமின்றி செயல்படுகிறோம். இடதுசாரிகளால் மட்டுமே எதிர்சக்திகளை வீழ்த்த இயலும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரி சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும். தேர்தலின்போது எதேச்சாதிகார சக்திகளை வீழ்த்த மதசார்பற்றவர்களை இணைத்து இந்துத்துவ சக்திகளை வீழ்த்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'இப்படிப்பேசினால் தான் மோடிக்குப் புரியும்' - ஹிந்தியில் முழங்கிய விஜயகாந்த் மகன்!

மதுரை: மதுரையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநில மாநாடு மார்ச் 30 முதல் எப்ரல் 1 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்று(மார்ச் 30) மாநாட்டில் கலந்து கொண்டு சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். அப்போது "பாஜக இந்துத்துவ கொள்கையை அமலாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்ய முடியவில்லை. நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பாஜகவின் எதிரிகளை அச்சுறுத்தி வருகிறது.

நாட்டின் பொதுத்துறையை கார்ப்பரேட்டுகளுக்கு விற்க முயல்கின்றனர். கார்ப்பரேட்டுகள் நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கின்றனர். ஜனநாயக, குடிமையியல் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

இந்திய மக்களின் உரிமைகளை பறிக்கிறது. கொடுமையான சட்டங்களை இயற்றி மக்களை துன்புறுத்துகிறது. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

உரிமைகள் பறிக்கப்படுகின்றன: நாட்டின் அடிப்படை ஜனநாயக அம்சமான சிஏஏ, காஷ்மீர் வழக்குகள் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. நாட்டின் அடிப்படை அமைப்புகள் தகர்க்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பெறப்பட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னெடுக்கிறோம். நாட்டின் அடிப்படையான 4 தூண்களை தகர்த்து எறிகிறது. கூட்டாட்சி தத்துவம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

நாட்டின் பன்முக கலாச்சார, மொழிகளை காக்கும் அரசியல் சட்டத்தை இந்திய அரசின் ஒருமைப்பாட்டை தாக்கும் வகையில் ஒற்றை நாடாக மாற்ற முயல்கிறது மத்திய அரசு. கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தியுள்ளது. சிஏஏ சட்டத்தை இயற்றியபோது மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை கொண்டு வந்தபோது மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டம் என்றவுடன் சட்டத்தை திரும்ப பெற்றது. மத்திய அரசை கண்டித்து 4 முறை பொதுவேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையிலும் பாஜக மீண்டும் ஏன் வெற்றி பெறுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.

ஜனநாயகத்திற்கு எதிரானது பாஜக, மாநிலங்கள் கலாச்சார பண்பாட்டை அழித்து ஒற்றைக் கலாச்சாரத்தை புகுத்த முயல்கின்றனர். ஒன்றிய அரசு என்பதையே ஏற்க மறுக்கிறது.

மத்திய அரசு இந்துத்துவா என்பதை முன்னிலைப்படுத்துகிறது. நாட்டின் விலைவாசி, வேலையின்மை குறித்து பேசுவதில்லை. மக்களை மத ரீதியாக பிரிக்கும் பேச்சுகளை பேசி வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வு : சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்து மக்களை இணைக்க முயல்கின்றனர். இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை புகுத்தி தாக்குதல் நடத்துகின்றனர். இந்துத்துவ கொள்கைகளை எடுத்துரைத்து மக்களின் பிரச்சனைகளை மறைத்து வருகின்றனர்.

சீதாராம் யெச்சூரி பேச்சு

புதிய கல்வி கொள்கை திட்டத்தின் மூலம் தங்களது கொள்கைகளை புகுத்துகின்றனர். காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் 90களில் நடைபெற்ற காஷ்மீர் பண்டீட்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் சார்ந்த படம். 90 கலவரத்தில் 89 காஷ்மீர் பண்டீட்கள் கொல்லப்பட்டதாக ராணுவ தகவல் உள்ள நிலையில், 1600 இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அதை மறைத்து இந்துகள் கொல்லப்பட்டதாக கூறி இந்து-முஸ்லீம் மோதலை உருவாக்குகிறது.

வன்முறை தத்துவத்தை கொண்டு செல்ல முயற்சி : விலை மதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க வேண்டும் அதற்கு தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு ஒற்றுமை வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக பாஜக அரசு மக்களை பிரித்தாள்கிறது.

அதற்காக தான் இது போன்ற மதவாத முயற்சிகளை கையில் எடுக்கிறது. காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்க்காதவர் தேச பக்தி அற்றவர்கள் என கூறுவது நாட்டின் தேச பக்தியை இந்த அளவிற்கு தான் எடுத்துரைக்கிறது. மதசார்பற்ற அடிப்படையை தகர்க்க வேண்டும் என்ற நோக்கில் பகவத் கீதையை பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்கின்றனர்.

பகவத்கீதை மூலமாக வன்முறை தத்துவத்தை கொண்டு செல்ல பாஜக முயல்கிறது. பாஜக பகவத் கீதையை ஏன் முன்னுறுத்துகின்றனர் என்றால் சாதி ரீதியான அடுக்குகளை நியாயப்படுத்துவதை அந்த நூல் காட்டுகிறது. மேல் சமூகத்தில் பிறந்தவர்களுக்கு கீழ் சமூகத்தில் பிறந்தவர்கள் சேவை ஆற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் பகவத்கீதை போதனைகள் உள்ளன.

சாதிய கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் பகவத் கீதை உள்ளது. பெண் என்றால் தந்தை, கணவனுக்கு பணியாற்றி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என பகவத்கீதை கூறுகிறது. பகவத் கீதையை முன்னிறுத்தி பாஜகவின் கட்டமைப்பை கொண்டு செல்ல முயல்கின்றனர்.

இந்துத்துவ சக்திகளை வீழ்த்த வேண்டும் : இந்துத்துவா அமைப்புகளின் இது போன்றவற்றை எதிர்க்க வேண்டிய நிலை உள்ளது. மார்க்சிஸ்ட் மற்றும் இடது சாரி இயக்கங்கள் மோடி அரசை வீழ்த்த வேண்டும். கொள்கைகள் என்றால் நம்மால் தான் முடியும், இதனை மோடி புரிந்து வைத்துள்ளார்.

பாஜக எம்பிகளிடம் பேசியபோது இடதுசாரிகள் குறித்து பேசி வருகிறார்.கொள்கை ரீதியாக எதிர்த்து நிற்கும் இயக்கம். தத்துவார்த்த ரீதியாக எதிர்த்து முறியடிக்க முடியும்.

உழைப்பாளிகளை திரட்டி மோடிக்கு எதிராக போராடுகிறோம், எந்தவித அச்சுறுத்தல் இன்றி போராடுகிறோம். கேரள, மேற்குவங்கத்தில் வர்க்க எதிரிகளை எதிர்த்து அச்சமின்றி செயல்படுகிறோம். இடதுசாரிகளால் மட்டுமே எதிர்சக்திகளை வீழ்த்த இயலும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரி சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும். தேர்தலின்போது எதேச்சாதிகார சக்திகளை வீழ்த்த மதசார்பற்றவர்களை இணைத்து இந்துத்துவ சக்திகளை வீழ்த்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'இப்படிப்பேசினால் தான் மோடிக்குப் புரியும்' - ஹிந்தியில் முழங்கிய விஜயகாந்த் மகன்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.