ETV Bharat / state

5ஆம் கட்ட கீழடி அகழாய்வு - நூலாக வெளியிட்ட தமிழ்நாடு தொல்லியல் துறை

author img

By

Published : Sep 19, 2019, 7:13 PM IST

மதுரை: கீழடி 5ஆம் கட்ட அகழாய்வு இந்த மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவடைவதை ஒட்டி, தமிழ்நாடு தொல்லியல் துறை, இந்த அகழாய்வில் கிடைத்த தொல்லியல் சின்னங்களைத் தொகுத்து சிறிய தொகுப்பாக 'கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

tamilnadu Archeology department releasing keezhadi book

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக தற்போது 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பணிகள் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.

இதனையடுத்து, தமிழ்நாடு தொல்லியல் துறை 6ஆம் கட்ட அகழாய்விற்கான மத்திய தொல்லியல் துறையின் அனுமதியையும், ஆய்வுப் பணிகளுக்கான நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூரை ஒட்டியுள்ள பகுதிகளில் இதற்கான ஆய்வுப்பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கவுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ்நாடு தொல்லியல் துறையின் இயக்குநர் த.உதயச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவ்விழாவில், 'கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்ற தலைப்பிலான சிறிய தொகுப்பு நூலினை வெளியிட்டுள்ளனர். இதில், கீழடியின் நாகரீகத்தின் பழமை, கட்டுமான அமைப்புகள், மக்களின் எழுத்தறிவு, கைவினைத் தொழில்கள், பொருளாதாரம், விளையாட்டுகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வணிகர்களுடன் வணிகத் தொடர்பு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

சில பகுப்பாய்வுகள் இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையிலும், எலும்புத் துண்டுகள் குறித்த பகுப்பாய்வு புனேவிலுள்ள முதுகலை மற்றும் ஆய்வு நிறுவனமான டெக்கான் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:கீழடியில் 2,000 ஆண்டுகள் பழமையான பன்றி முத்திரை பவளமணி!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக தற்போது 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பணிகள் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.

இதனையடுத்து, தமிழ்நாடு தொல்லியல் துறை 6ஆம் கட்ட அகழாய்விற்கான மத்திய தொல்லியல் துறையின் அனுமதியையும், ஆய்வுப் பணிகளுக்கான நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூரை ஒட்டியுள்ள பகுதிகளில் இதற்கான ஆய்வுப்பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கவுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ்நாடு தொல்லியல் துறையின் இயக்குநர் த.உதயச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவ்விழாவில், 'கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்ற தலைப்பிலான சிறிய தொகுப்பு நூலினை வெளியிட்டுள்ளனர். இதில், கீழடியின் நாகரீகத்தின் பழமை, கட்டுமான அமைப்புகள், மக்களின் எழுத்தறிவு, கைவினைத் தொழில்கள், பொருளாதாரம், விளையாட்டுகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வணிகர்களுடன் வணிகத் தொடர்பு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

சில பகுப்பாய்வுகள் இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையிலும், எலும்புத் துண்டுகள் குறித்த பகுப்பாய்வு புனேவிலுள்ள முதுகலை மற்றும் ஆய்வு நிறுவனமான டெக்கான் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:கீழடியில் 2,000 ஆண்டுகள் பழமையான பன்றி முத்திரை பவளமணி!

Intro:கீழடி 5-ஆம் கட்ட அகழாய்வு - நூலாகத் தொகுத்து வெளியிட்டுள்ள தமிழக தொல்லியல் துறை

கீழடி 5-ஆம் கட்ட அகழாய்வு இந்த மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைவதை ஒட்டி, தமிழக தொல்லியல் துறை, இந்த அகழாய்வில் கிடைத்த தொல்லியல் சின்னங்களைத் தொகுத்து சிறிய தொகுப்பாக 'கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
Body:கீழடி 5-ஆம் கட்ட அகழாய்வு - நூலாகத் தொகுத்து வெளியிட்டுள்ள தமிழக தொல்லியல் துறை

கீழடி 5-ஆம் கட்ட அகழாய்வு இந்த மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைவதை ஒட்டி, தமிழக தொல்லியல் துறை, இந்த அகழாய்வில் கிடைத்த தொல்லியல் சின்னங்களைத் தொகுத்து சிறிய தொகுப்பாக 'கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக தற்போது 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜூன் 13-ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த அகழாய்வுப் பணிகள் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகின்றன.

இதனையடுத்து தமிழக தொல்லியல்துறை 6-ஆம் கட்ட அகழாய்விற்கான ஆய்வுப் பணிகளையும், மத்திய தொல்லியல்துறையின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் துவங்கியுள்ளது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஒட்டியுள்ள பகுதிகளில் இதற்கான ஆய்வுப்பணிகளை தமிழக தொல்லியல் துறை துவங்கவுள்ளது.

இந்நிலையில் தமிழக தொல்லியல்துறையின் சார்பாக சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழக தொல்லியல்துறையின் இயக்குநர் த.உதயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவ்விழாவில், 'கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்ற தலைப்பிலான சிறிய தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில், கரிமப்பகுப்பாய்வின் மூலமாக கீழடியின் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு கிடைக்கப்பெற்றுள்ள கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளம். அப்போதே எழுத்தறிவு பெற்ற சமூகமாக வாழ்ந்துள்ளனர். தங்களின் கைவினைத் தொழில்களில் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். அதேநேரம் பொருளாதாரத்திலும் வளமையான சமூகமாக வாழ்ந்துள்ளனர். திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் விளையாட்டுகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வணிகர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

வடஇந்தியாவின் கங்கை சமவெளி பகுதி நகரமயமாதலும், வைகைக் கரையின் நகரமயமாதலும் கிமு 6-ஆம் நூற்றாண்டு வாக்கில் ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளன. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்தில் நடைபெற்ற கரிமப் பகுப்பாய்வின் மூலமாக கிமு 580 ஆண்டுகள் எனவும், தமிழி எழுத்துக்களின் காலம் கிமு 6ஆம் நூற்றாண்டு எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது.

இங்கு கிடைத்த திமிலுள்ள காளை, பசு, எருமை, ஆடு ஆகியவை மூலம் வேளாண்மைக்கு உறுதுணை செய்யும் வகையில் கால்நடைகள் வளர்க்கப்பட்டுள்ளன. களிமண், செங்கல், சுண்ணாம்பு சாந்து, இரும்பு ஆணிகள் பயன்பாடும் இங்கே இருந்துள்ளது. செங்கல் மற்றும் கூரையோடுகளில் 80 சதவிகிதம் சிலிக்கா, மற்றும் 7 சதவிகிதம் சுண்ணாம்பு கலவையும், சுண்ணாம்பு சாந்தில் 97 சதவிகிதம் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆதன், குவிரன் ஆத(ன்) என பானையோடுகளில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. வளமையை வெளிப்படுத்தும் தங்க அணிகலன்கள், உள்ளூர் மற்றும் வெளிமாநில மணிகள் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்தாம் கட்ட அகழாய்வில் தங்கத்தினாலான பொத்தான், தொங்கட்டான், மணி, வளையம், ஊசி மற்றும் தகடுகள் கிடைத்துள்ளன.

மேலும் அரவைக்கல், மண் குடுவை, தந்தத்தால் செய்யப்பட்ட சீப்பு, பகடைக்காய்கள், பெண்கள் விளையாடும் வட்டச்சில்லுகள், சக்கரங்கள் போன்றவையும், ரோம் நாட்டின் ரௌலட்டட் சாயல் கொண்ட பானைகள், அரிட்டைன் பானையோடுகள், மனித மற்றும் விலங்கு உருவங்கள், கூர்முனை கொண்ட எலும்பு கருவிகள், நூல் நூற்கும் தக்களிகள் ஆகியவை கிடைத்துள்ளதாக அந்நூல் குறிப்பிட்டுள்ளது.

பானையோட்டிற்கான பகுப்பாய்வு இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக் கழகத்தின் புவியியல் துறையிலும், எலும்புத் துண்டுகள் குறித்த பகுப்பாய்வு புனேவிலுள்ள முதுகலை மற்றும் ஆய்வு நிறுவனமான டெக்கான் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.