ETV Bharat / state

காலையில் டீ, காபி வேண்டாம்; பிராந்தி, விஸ்கி குடிக்கலாம்: செல்லூர் ராஜூ கிண்டல்!

author img

By

Published : Jul 12, 2023, 7:33 PM IST

காலையில் 7 மணிக்கு இனிமேல் டீ, காபி குடிக்க வேண்டாம், பிராந்தி, விஸ்கி குடிக்கலாம் என திமுகவை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேலியாக விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செந்தியாளர்கள் சந்திப்பு

மதுரை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஜூலை 12) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "அதிமுகவுக்கு ஏறு காலம் தொடங்கி இருக்கிறது. திமுகவுக்கு இனி இறங்கு காலம் தான். காலையில் 7 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்படுகிறது. மினி குவாட்டர் மக்களுக்கு கொடுக்க உள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலையில் 7 மணிக்கு காபி, டீ குடிக்க வேண்டாம் பிராந்தி, விஸ்கி குடிக்கலாம். திமுக அரசு எதை நோக்கி பயணிக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் இந்த தலைமுறையை கெடுத்தவர். தமிழ்நாடு மக்களை குடிகாரன் ஆக்கிய முதலமைச்சராக ஸ்டாலின் பெயர் எடுப்பார். பள்ளிக்கூடத்துக்கு போகும்போதே குடித்துவிட்டு போங்கள் மட்டையாகி விடுங்கள்" என்று கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கூலித் தொழிலாளர்கள், கட்டுமான பணியாளர்கள் காலையில் குடித்துவிட்டு வேலைக்குச் சென்றால் குடும்பத்திற்கு உத்தரவாதம் யார் கொடுப்பது? இது எங்களுக்கு மன வேதனையாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.‌ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.

வெங்காயம் விலை 240 ரூபாய் ஆகி விட்டது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும் வெங்காய விலையை கேட்டாலே இவர்கள் ஆட்சியில் கண்ணீர் வருகிறது. வீட்டு வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றுடன் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கும் மோசமாக உள்ளது. 2 கோடியே 25 லட்சம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தாலும் யாரும் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

இனி 90 மில்லி லிட்டர் சாராயம் ஏழு மணிக்கு கிடைக்கும். 7 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பு விரைவில் நடைமுறைப்படுத்துவார்கள். இதை கவனிக்கும் தாய்மார்கள் யாரும் ஓட்டு போட மாட்டார்கள் நாடாளுமன்றத் தேர்தல் எங்களுக்கு எளிதாகிவிடும். திமுகவின் துக்ளக் தர்பார் ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். கலைஞர் நூலக திறப்பு விழாவை மக்களைக் கூட்டி செயற்கையாக கூட்டத்தை கூட்ட நினைக்கிறார்கள். தக்காளியை ரேஷன் கடையில் விற்பது பெருமையா? நகரும் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும். திமுகவினர் செந்தில் பாலாஜியை சுதந்திரப் போராட்ட தியாகி போல் பார்க்கின்றனர்" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோருக்கு மன்னிப்புக் கடிதம் பொருந்துமா? - ஜெயக்குமாரின் பதிலென்ன?

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செந்தியாளர்கள் சந்திப்பு

மதுரை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஜூலை 12) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "அதிமுகவுக்கு ஏறு காலம் தொடங்கி இருக்கிறது. திமுகவுக்கு இனி இறங்கு காலம் தான். காலையில் 7 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்படுகிறது. மினி குவாட்டர் மக்களுக்கு கொடுக்க உள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலையில் 7 மணிக்கு காபி, டீ குடிக்க வேண்டாம் பிராந்தி, விஸ்கி குடிக்கலாம். திமுக அரசு எதை நோக்கி பயணிக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் இந்த தலைமுறையை கெடுத்தவர். தமிழ்நாடு மக்களை குடிகாரன் ஆக்கிய முதலமைச்சராக ஸ்டாலின் பெயர் எடுப்பார். பள்ளிக்கூடத்துக்கு போகும்போதே குடித்துவிட்டு போங்கள் மட்டையாகி விடுங்கள்" என்று கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கூலித் தொழிலாளர்கள், கட்டுமான பணியாளர்கள் காலையில் குடித்துவிட்டு வேலைக்குச் சென்றால் குடும்பத்திற்கு உத்தரவாதம் யார் கொடுப்பது? இது எங்களுக்கு மன வேதனையாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.‌ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.

வெங்காயம் விலை 240 ரூபாய் ஆகி விட்டது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும் வெங்காய விலையை கேட்டாலே இவர்கள் ஆட்சியில் கண்ணீர் வருகிறது. வீட்டு வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றுடன் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கும் மோசமாக உள்ளது. 2 கோடியே 25 லட்சம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தாலும் யாரும் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

இனி 90 மில்லி லிட்டர் சாராயம் ஏழு மணிக்கு கிடைக்கும். 7 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பு விரைவில் நடைமுறைப்படுத்துவார்கள். இதை கவனிக்கும் தாய்மார்கள் யாரும் ஓட்டு போட மாட்டார்கள் நாடாளுமன்றத் தேர்தல் எங்களுக்கு எளிதாகிவிடும். திமுகவின் துக்ளக் தர்பார் ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். கலைஞர் நூலக திறப்பு விழாவை மக்களைக் கூட்டி செயற்கையாக கூட்டத்தை கூட்ட நினைக்கிறார்கள். தக்காளியை ரேஷன் கடையில் விற்பது பெருமையா? நகரும் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும். திமுகவினர் செந்தில் பாலாஜியை சுதந்திரப் போராட்ட தியாகி போல் பார்க்கின்றனர்" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோருக்கு மன்னிப்புக் கடிதம் பொருந்துமா? - ஜெயக்குமாரின் பதிலென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.