ETV Bharat / state

சாத்தான்குளம் கொலை: சிபிஐ தாக்கல் செய்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு!

author img

By

Published : Jun 25, 2021, 10:45 PM IST

உரிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

sathankulam
sathankulam

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீதும் 120 பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தாக்கல் செய்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ ஏடிஎஸ்பி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் கடந்தாண்டு ஜூன் 19-ல் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் என 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்கு பதிந்தது. இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. 2020 செப். 25-இல் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

குற்றச்சாட்டு பதிவின் போது ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீதும் இபிகோ 120 பி (கூட்டு சதி) பிரிவில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் மறுத்தது. இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த பிரிவுகளில் குற்றம் புரிந்தமைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது இபிகோ 120 பி பிரிவிலும், மற்றவர்கள் மீது விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சதிகுமார் சுகுமாரா குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் உரிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீதும் 120 பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தாக்கல் செய்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ ஏடிஎஸ்பி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் கடந்தாண்டு ஜூன் 19-ல் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் என 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்கு பதிந்தது. இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. 2020 செப். 25-இல் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

குற்றச்சாட்டு பதிவின் போது ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீதும் இபிகோ 120 பி (கூட்டு சதி) பிரிவில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் மறுத்தது. இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த பிரிவுகளில் குற்றம் புரிந்தமைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது இபிகோ 120 பி பிரிவிலும், மற்றவர்கள் மீது விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சதிகுமார் சுகுமாரா குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் உரிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.