ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி மனு! - பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்த மனு

மதுரை : மதுரை மாநகராட்சியில் வார்டு மறுவரையறை முறையாக மேற்கொள்ளும் வரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Petition to ban the Election Commission for issuing a local election notice
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி மனு!
author img

By

Published : Mar 13, 2020, 9:51 PM IST

மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகராட்சிகளில் ஒன்றான, மதுரை மாநகராட்சியில் நான்கு மண்டலமாக 100 வார்டுகள் உள்ளன . இந்த வார்டுகளை மறு வரையறை செய்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. உரிய விதிகளை பின்பற்றி வார்டு மறுவரையறை செய்யப்படவில்லை. தமிழ்நாடு மறுவரையறை சட்டம், தமிழ்நாடு உள்ளாட்சி வரையறை ஒழுங்குமுறை சட்டம் 2017 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படி மதுரை மாநகராட்சியில் வார்டுகள் மறு வரையறை செய்யவில்லை. வரையறை செய்யும் பொழுது ஒரு வார்டில், மறு வரையரை செய்த பிறகு வரையறைக்கு முன்னதாக இருந்த வாக்காளர்களில் 10 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தொகை அதிகமாக இருக்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால் மதுரை மாநகராட்சியில் அவ்வாறு இல்லை.

ஒவ்வொரு வார்டிலும் ஒரே சராசரியான வாக்காளர்களை கொண்டு பிரிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஒரு வார்டில், மிக அதிக வாக்காளர்களும், ஒரு வார்டில் மிக குறைந்த வாக்காளர்களும், என வேறு பாடு உள்ளது.உதாரணமாக ஒரு வார்டில் 12, 875 வாக்காளர்களும், ஒரு வார்டில் 7,215 வாக்காளர்களும் உள்ளனர். அதிக பட்சமாக 100ஆவது வார்டில் 19, 818 வாக்காளர்கள் உள்ளனர்.எனவே புதிய விதிமுறையை பின்பற்றி இந்த வார்டு வரையறை செய்யவில்லை. ஆளும் கட்சியினுடைய அமைச்சர் தொகுதியில் வரையறை விதிகள் மீறப்பட்டுள்ளன.மதுரையில் மதுரை வடக்கு தொகுதியில், வரையரைக்கு முன்பு 18 வார்டுகள் இருந்தன. தற்போது 20 வார்டுகள் உள்ளன மறு வரையறைக்கு பின் இரண்டு வார்டுகள் அதிகமாகி உள்ளன.

மதுரை மத்திய தொகுதியில் வார்டு மறுவரையறை முன்பு 22 வார்டுகள் இருந்தன. தற்போது 16 வார்டுகள் உள்ளன, அதாவது அதில் 6 வார்டு குறைக்கப்பட்டுள்ளன. உரிய விதிமுறைப்படி, வார்டு மறு வரையறை பின்பற்ற வேண்டும். ஆனால் மதுரை மாநகராட்சி யில் வார்டுகள் மறுவரையறை மேற்கொள்ளவில்லை. எனவே, மதுரை மாநகராட்சியில் வார்டு மறு வரையறை முறையாக மேற்கொண்ட பிறகு, மதுரை மாநாகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும். அது வரை மாநாகராட்சியில் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி மனு!

இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டவர்கள், வார்டு மறு வரையறை குழுவின் தலைவர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, மார்ச் 20ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகராட்சிகளில் ஒன்றான, மதுரை மாநகராட்சியில் நான்கு மண்டலமாக 100 வார்டுகள் உள்ளன . இந்த வார்டுகளை மறு வரையறை செய்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. உரிய விதிகளை பின்பற்றி வார்டு மறுவரையறை செய்யப்படவில்லை. தமிழ்நாடு மறுவரையறை சட்டம், தமிழ்நாடு உள்ளாட்சி வரையறை ஒழுங்குமுறை சட்டம் 2017 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படி மதுரை மாநகராட்சியில் வார்டுகள் மறு வரையறை செய்யவில்லை. வரையறை செய்யும் பொழுது ஒரு வார்டில், மறு வரையரை செய்த பிறகு வரையறைக்கு முன்னதாக இருந்த வாக்காளர்களில் 10 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தொகை அதிகமாக இருக்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால் மதுரை மாநகராட்சியில் அவ்வாறு இல்லை.

ஒவ்வொரு வார்டிலும் ஒரே சராசரியான வாக்காளர்களை கொண்டு பிரிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஒரு வார்டில், மிக அதிக வாக்காளர்களும், ஒரு வார்டில் மிக குறைந்த வாக்காளர்களும், என வேறு பாடு உள்ளது.உதாரணமாக ஒரு வார்டில் 12, 875 வாக்காளர்களும், ஒரு வார்டில் 7,215 வாக்காளர்களும் உள்ளனர். அதிக பட்சமாக 100ஆவது வார்டில் 19, 818 வாக்காளர்கள் உள்ளனர்.எனவே புதிய விதிமுறையை பின்பற்றி இந்த வார்டு வரையறை செய்யவில்லை. ஆளும் கட்சியினுடைய அமைச்சர் தொகுதியில் வரையறை விதிகள் மீறப்பட்டுள்ளன.மதுரையில் மதுரை வடக்கு தொகுதியில், வரையரைக்கு முன்பு 18 வார்டுகள் இருந்தன. தற்போது 20 வார்டுகள் உள்ளன மறு வரையறைக்கு பின் இரண்டு வார்டுகள் அதிகமாகி உள்ளன.

மதுரை மத்திய தொகுதியில் வார்டு மறுவரையறை முன்பு 22 வார்டுகள் இருந்தன. தற்போது 16 வார்டுகள் உள்ளன, அதாவது அதில் 6 வார்டு குறைக்கப்பட்டுள்ளன. உரிய விதிமுறைப்படி, வார்டு மறு வரையறை பின்பற்ற வேண்டும். ஆனால் மதுரை மாநகராட்சி யில் வார்டுகள் மறுவரையறை மேற்கொள்ளவில்லை. எனவே, மதுரை மாநகராட்சியில் வார்டு மறு வரையறை முறையாக மேற்கொண்ட பிறகு, மதுரை மாநாகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும். அது வரை மாநாகராட்சியில் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி மனு!

இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டவர்கள், வார்டு மறு வரையறை குழுவின் தலைவர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, மார்ச் 20ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.