ETV Bharat / state

மத்திய அரசின் நிதி 2ஆயிரம் கோடி இழப்பு - பழனிவேல் தியாகராஜன்

author img

By

Published : Nov 8, 2019, 11:07 AM IST

மதுரை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் மத்திய அரசின் நிதியை தமிழ்நாடு இழந்து வருவதாக சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

madurai-temple

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் பேவர் பிளாக் கற்களை அகற்றி கருங்கற்கள் பதிக்கின்ற பணியை மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வுசெய்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத சூழ்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றும்போது மக்கள் கருத்துகளை அறிய முடியாத நிலை இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன்

தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் மத்திய அரசு நிதி இரண்டாயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு இழந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகளின் கருத்துகளை கேட்க முடியாததால் பல்வேறு திட்டங்கள் தொழிநுட்ப குறைபாட்டுடன் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது?

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் பேவர் பிளாக் கற்களை அகற்றி கருங்கற்கள் பதிக்கின்ற பணியை மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வுசெய்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத சூழ்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றும்போது மக்கள் கருத்துகளை அறிய முடியாத நிலை இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன்

தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் மத்திய அரசு நிதி இரண்டாயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு இழந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகளின் கருத்துகளை கேட்க முடியாததால் பல்வேறு திட்டங்கள் தொழிநுட்ப குறைபாட்டுடன் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது?

Intro:உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் 2 ஆயிரம் கோடி இழப்பு - சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஆண்டிற்கு மத்திய அரசு நிதி 2000 கோடி ரூபாயை தமிழகம் இழந்து வருகிறது என மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
Body:உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் 2 ஆயிரம் கோடி இழப்பு - சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஆண்டிற்கு மத்திய அரசு நிதி 2000 கோடி ரூபாயை தமிழகம் இழந்து வருகிறது என மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் அகற்றி கருங்கற்கள் பதிக்கின்ற பணியை இன்று ஆய்வு செய்த மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத சூழ்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் இது போன்ற திட்டங்களை நிறைவேற்றும் போது மக்கள் கருத்துக்களை அறிய முடியாத நிலை இருக்கிறது .

ஆணையரே தனி அதிகாரியாக இருந்து திட்டங்களை செயல்படுத்தினால் கூட மக்கள் கருத்தறிய வாய்ப்பில்லாமல் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டால் மட்டுமே மத்திய அரசு வழங்குகின்ற நிதி தங்கு தடையின்றி கிடைக்கும்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஆண்டிற்கு மத்திய அரசு நிதி 2000 கோடி ரூபாயை தமிழகம் இழந்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட பிரநிதிகளின் கருத்துக்களை கேட்க முடியாததால் பல்வேறு திட்டங்கள் தொழிநுட்ப ரீதியான குறைபாட்டுடன் செயல்படுத்தப்படுகிறது. பேவர் பிளாக் கற்கள் அகற்றி விட்டு 4 இன்ச் கருங்கற்களை பதித்து வருகின்றனர் .இந்த கற்கள் வெப்பத்தை உள் வாங்கி நடந்து செல்கிறவர்க்ளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

ஆனால் இதனை தடுக்க மேட் அமைப்போம் என சொல்கிறார்கள். ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி அதனை தீர்க்க இப்படி ஒரு நடவடிக்கை அவசியம் தானா? இரண்டாவது முறையாக இந்தப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறேன். பொது கணக்கு குழு ஆய்வின் போதும் எனது கருத்துக்களை தெரிவித்து உள்ளேன்.

அகற்றப்பட்ட பேவர் பிளாக் கற்கள் மற்றும் அள்ளப்பட்ட மணல் மாநகராட்சியின் வேறு பணிகளுக்கு பயன்படுத்திட உள்ளதாக கூறுகின்றனர். இது எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை. வேறு ஏதேனும் திட்டங்களுக்கு பயன்படுத்திடலாமா என்பது குறித்தெல்லாம் ஆய்வு நடத்திட வேண்டும். எழுத்துபூர்வமாக திட்டங்கள் குறித்த அறிக்கை வெளியிட வேண்டும் .நான் ஏற்கனவே ஆய்வு செய்தவற்றையும் ,தற்போது ஆய்வு செய்தவற்றையும் தொகுத்து அறிக்கையாக விரைவில் வெளியிடுவேன் என்றார் .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.