ETV Bharat / state

பிளேடால் கிழிக்கப்பட்ட பள்ளி மாணவரின் முதுகு... மீண்டும் தலையெடுக்கும் சாதியம்? - palamedu student attacked by co student

மதுரை: பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவனின் முதுகு பிளேடால் கிழிக்கப்பட்டிருப்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

alamedu government school student attacked
author img

By

Published : Oct 13, 2019, 4:12 PM IST

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மறவபட்டியைச் சேர்ந்த சரவணகுமார் என்ற மாணவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் பள்ளியில் படிக்கும் சக மாணவர் ஒருவர், இவரின் புத்தகப் பையை மறைத்துவைத்து விளையாடியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த மாணவர் சரவணகுமார், புத்தகப் பையை வைத்து ஏன் விளையாடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர்களிடையே மோதல்

இதில், ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன் என்ற மாணவர் சரவணக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமின்றி சாதியைக் கூறி திட்டிவிட்டு சரவணகுமாரின் முதுகில் பிளேடால் கிழித்துவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை, தனது மகன் மீது சாதிய வன்மத்தால் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர் சரவணகுமாருக்கு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுவரும் நிலையில், இச்சம்பவம் குறித்து பாலமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழர்கள் எழுத்தறிவு உள்ள சமூகமாக வாழ்ந்துள்ளனர் - கீழடி ஆய்வு குறித்து வைகோ பெருமிதம்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மறவபட்டியைச் சேர்ந்த சரவணகுமார் என்ற மாணவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் பள்ளியில் படிக்கும் சக மாணவர் ஒருவர், இவரின் புத்தகப் பையை மறைத்துவைத்து விளையாடியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த மாணவர் சரவணகுமார், புத்தகப் பையை வைத்து ஏன் விளையாடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர்களிடையே மோதல்

இதில், ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன் என்ற மாணவர் சரவணக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமின்றி சாதியைக் கூறி திட்டிவிட்டு சரவணகுமாரின் முதுகில் பிளேடால் கிழித்துவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை, தனது மகன் மீது சாதிய வன்மத்தால் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர் சரவணகுமாருக்கு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுவரும் நிலையில், இச்சம்பவம் குறித்து பாலமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழர்கள் எழுத்தறிவு உள்ள சமூகமாக வாழ்ந்துள்ளனர் - கீழடி ஆய்வு குறித்து வைகோ பெருமிதம்

Intro:*மதுரை அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவனை பிளேடால் கிழித்த சக மாணவன் காயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி*Body:*மதுரை அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவனை பிளேடால் கிழித்த சக மாணவன் காயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி*

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மறவ பட்டியை சேர்ந்த மாணவன் சரவணகுமார்

இவருடன் பள்ளியில் படிக்கும் சக மாணவரின் புத்தக பையை மற்றொரு மாணவன் பள்ளி வகுப்பறைக்குள் மறைத்து வைத்து விளையாடியதாக தெரிகிறது

இதனால் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது

மீண்டும் மாலை பள்ளி முடிந்தவுடன் இந்த பிரச்சனை பெரியதாகியுள்ளது இதில் சரவணகுமார் ஏன் புத்தக பையை வைத்து விளையாடுகிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளார்

இதனால் ஆத்திரமுற்ற மாணவர் மகா ஈஸ்வரன் என்ற மாணவர் சரவணகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி மறைத்து வைத்திருந்த பிளேடால் சரவணகுமாரின் முதுகில் பிளேடால் கிழித்து விட்டு தப்பியோடியதாக தெரிகிறது

ரத்தம் சிந்திய நிலையில் மாணவன் வீடு திரும்பி பெற்றோரிடம் கூறிவிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த சம்பவம் குறித்து பாலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பள்ளி மாணவர்கள் மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

பேட்டி: ராமு (பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.