ETV Bharat / state

திண்டுக்கல்லில் சுண்ணாம்புக்கல் நிறுவனத்தை ஆணையம் அமைத்து ஆய்வு செய்வது தொடர்பாக பதிலளிக்க உத்தரவு! - திண்டுக்கல்லில் சுண்ணாம்புக்கல் எடுக்க அனுமதி

திண்டுக்கல் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் எடுக்கும் நிறுவனத்தை வழக்கறிஞர் ஆணையம் அமைத்து ஆய்வு செய்யக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

order to Dindigul Collector to respond inspect limestone mining company
order to Dindigul Collector to respond inspect limestone mining company
author img

By

Published : Mar 16, 2021, 2:18 PM IST

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை தாலுகாவைச் சேர்ந்த அழகேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "1989ஆம் ஆண்டு தொழில் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு திண்டுக்கல் மாவட்டம், குஜிலம்பாறை தாலுகா பகுதியிலுள்ள கரிகாலி, பாளையம் மற்றும் டோலிபட்டி ஆகிய பகுதிகளில் சுண்ணாம்புக்கல் எடுப்பதற்காக செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு 20 ஆண்டுகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஓடைகள், கண்மாய்கள் நிரந்தரமாக இருக்கும் கோயில்கள் ஆகியவை பாதிப்பு இல்லாதவாறு சுண்ணாம்புக்கல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2002 மற்றும் 2003 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைப் படி அதே தனியார் நிறுவனத்திற்கு புறம்போக்கு இடங்களில் சுண்ணாம்புக்கல் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக சுண்ணாம்புக்கல் எடுக்கப்படுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றி நீர் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பல்வேறு இடங்களில் நீர் வாய்க்கால்கள் அழிக்கப்பட்டுள்ளது. தெய்வானைகுளம் கண்மாய் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஞ்சிகிணத்துப்பட்டி கிராமத்திற்கு செல்லக்கூடிய மாட்டு வண்டிப் பாதைகள் முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டு கிராம மக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமத்திலுள்ள மக்கள் பல கிலோமீட்டர் சுற்றி கிராமத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லை. எனவே, வழக்கறிஞர் ஆணையம் அமைத்து சட்டவிரோதமாக சுண்ணாம்புக்கல் எடுக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யவும், இஞ்சிகிணத்துப்பட்டி கிராமத்திற்கு சொல்லக்கூடிய மாட்டுவண்டி பாதை சேதப்படுத்திய அடைக்கப்பட்டதை ஆய்வு செய்யவும், தெய்வானைகுளம் கண்மாய் மற்றும் அதன் கால்வாய்கள் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை தாலுகாவைச் சேர்ந்த அழகேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "1989ஆம் ஆண்டு தொழில் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு திண்டுக்கல் மாவட்டம், குஜிலம்பாறை தாலுகா பகுதியிலுள்ள கரிகாலி, பாளையம் மற்றும் டோலிபட்டி ஆகிய பகுதிகளில் சுண்ணாம்புக்கல் எடுப்பதற்காக செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு 20 ஆண்டுகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஓடைகள், கண்மாய்கள் நிரந்தரமாக இருக்கும் கோயில்கள் ஆகியவை பாதிப்பு இல்லாதவாறு சுண்ணாம்புக்கல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2002 மற்றும் 2003 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைப் படி அதே தனியார் நிறுவனத்திற்கு புறம்போக்கு இடங்களில் சுண்ணாம்புக்கல் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக சுண்ணாம்புக்கல் எடுக்கப்படுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றி நீர் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பல்வேறு இடங்களில் நீர் வாய்க்கால்கள் அழிக்கப்பட்டுள்ளது. தெய்வானைகுளம் கண்மாய் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஞ்சிகிணத்துப்பட்டி கிராமத்திற்கு செல்லக்கூடிய மாட்டு வண்டிப் பாதைகள் முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டு கிராம மக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமத்திலுள்ள மக்கள் பல கிலோமீட்டர் சுற்றி கிராமத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லை. எனவே, வழக்கறிஞர் ஆணையம் அமைத்து சட்டவிரோதமாக சுண்ணாம்புக்கல் எடுக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யவும், இஞ்சிகிணத்துப்பட்டி கிராமத்திற்கு சொல்லக்கூடிய மாட்டுவண்டி பாதை சேதப்படுத்திய அடைக்கப்பட்டதை ஆய்வு செய்யவும், தெய்வானைகுளம் கண்மாய் மற்றும் அதன் கால்வாய்கள் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.