ETV Bharat / state

தப்பை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக்கொன்ற கும்பல்!

author img

By

Published : Oct 1, 2019, 10:31 AM IST

மதுரை : சட்டத்துக்குப் புறம்பாக போதைப் பொருள் விற்றுவந்ததை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக்கொன்ட கும்பல்

மதுரை மாவட்டம், மேலவாசல் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி மாரிச்செல்வம், தற்போது திருந்தி ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் . அதே பகுதியைச் சேர்ந்த ஜெபமணி என்பவர் சட்டத்துக்கு புறம்பாக போதைப் பொருள் விற்று வந்துள்ளார். இதனைக கண்டித்து ஜெபமணியின் தாயாரிடம் மாரிச்செல்வம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மாரிச்செல்வம்
கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மாரிச்செல்வம்

இதனால், ஆத்திரமடைந்த ஜெபமணி, அவரது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று நள்ளிரவு திடீர்நகர் காவல் நிலையம் எதிரே மாரிச்செல்வத்தை ஓட ஓட விரட்டி கொடூரமாக குத்திக் கொலை செய்தார்.

பின்பு, ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த மாரிசெல்வத்தை மீட்ட அப்பகுதி மக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மாரிச்செல்வம்
ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்

இச்சம்பவம் தொடர்பாக ஜெபமணி, ஜெபமணியின் தாயார் விஜயா, அய்யம்மாள், முத்துக்குமார் ஆகிய நான்கு பேரையும் திடீர்நகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : வழிவிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதம்; கட்டட கரண்டியால் ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை - அதிர்ச்சி வீடியோ

மதுரை மாவட்டம், மேலவாசல் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி மாரிச்செல்வம், தற்போது திருந்தி ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் . அதே பகுதியைச் சேர்ந்த ஜெபமணி என்பவர் சட்டத்துக்கு புறம்பாக போதைப் பொருள் விற்று வந்துள்ளார். இதனைக கண்டித்து ஜெபமணியின் தாயாரிடம் மாரிச்செல்வம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மாரிச்செல்வம்
கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மாரிச்செல்வம்

இதனால், ஆத்திரமடைந்த ஜெபமணி, அவரது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று நள்ளிரவு திடீர்நகர் காவல் நிலையம் எதிரே மாரிச்செல்வத்தை ஓட ஓட விரட்டி கொடூரமாக குத்திக் கொலை செய்தார்.

பின்பு, ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த மாரிசெல்வத்தை மீட்ட அப்பகுதி மக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மாரிச்செல்வம்
ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்

இச்சம்பவம் தொடர்பாக ஜெபமணி, ஜெபமணியின் தாயார் விஜயா, அய்யம்மாள், முத்துக்குமார் ஆகிய நான்கு பேரையும் திடீர்நகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : வழிவிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதம்; கட்டட கரண்டியால் ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை - அதிர்ச்சி வீடியோ

Intro:காவல் நிலையம் எதிரே ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை - மதுரையில் பரபரப்பு

மதுரையில் காவல் நிலையம் எதிரே ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Body:காவல் நிலையம் எதிரே ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை - மதுரையில் பரபரப்பு

மதுரையில் காவல் நிலையம் எதிரே ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேலவாசல் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மாரிச்செல்வம்
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெபமணி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது,

இந்த நிலையில் இருவருக்கும் இடையே இரவு ஏற்பட்ட தகராறில் ஜெபமணி மாரி செல்வத்தை ஓட ஓட விரட்டி கொடுரமாக குத்தி கொலை செய்துள்ளார், ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த மாரி செல்வத்தை மீட்டு அந்த பொதுமக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திடீர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்,

காவல் நிலையத்துக்கு எதிரே நடைபெற்ற இந்த கொலை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.