ETV Bharat / state

ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்புடைய கொலை வழக்கு; மூன்று மாதத்தில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Oct 2, 2019, 12:12 AM IST

மதுரை: அமைச்சர்  ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்புடைய கொலை வழக்கில் வேறு அரசு வழக்கறிஞரை நியமிக்க கோரப்பட்ட மனுவை ரத்து செய்து, வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai Court

விருதுநகர், ராஜபாளையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இக்கொலையில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இக்கொலைக்கும் தொடர்புள்ளதாக தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி சர்சையை கிளப்பியது.

இதனால், அவர்மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு 2016ஆம் ஆண்டு தொடங்கிய இவ்வழக்கு இன்னும் முடியவில்லை.

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலஜிக்கு நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் முத்துபாண்டியன், அவருக்கு நெருக்கமானவர் எனக்கூறி வேறு வழக்கறிஞரை நியமிக்குமாறு கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் சிவா சுப்புரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன்,ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை அவர்கள், இவ்வழக்கு விசாரணை இன்னும் தொடங்காத நிலையில் அரசு வழக்கறிஞரை மாற்ற இயலாது.மேலும் வழக்கில் அரசு வழக்கறிஞருடன் மனுதாரரின் வழக்கறிஞரையும் நியமித்து, வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:

திருவாடுதுறை ஆதீன நிலங்கள் மீட்பு வழக்கு - மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர், ராஜபாளையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இக்கொலையில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இக்கொலைக்கும் தொடர்புள்ளதாக தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி சர்சையை கிளப்பியது.

இதனால், அவர்மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு 2016ஆம் ஆண்டு தொடங்கிய இவ்வழக்கு இன்னும் முடியவில்லை.

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலஜிக்கு நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் முத்துபாண்டியன், அவருக்கு நெருக்கமானவர் எனக்கூறி வேறு வழக்கறிஞரை நியமிக்குமாறு கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் சிவா சுப்புரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன்,ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை அவர்கள், இவ்வழக்கு விசாரணை இன்னும் தொடங்காத நிலையில் அரசு வழக்கறிஞரை மாற்ற இயலாது.மேலும் வழக்கில் அரசு வழக்கறிஞருடன் மனுதாரரின் வழக்கறிஞரையும் நியமித்து, வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:

திருவாடுதுறை ஆதீன நிலங்கள் மீட்பு வழக்கு - மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Intro:அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்புடைய கொலை வழக்கில் வேறு அரசு வழக்கறிஞரை நியமிக்க கோரிய வழக்கில் அரசு வழக்கறிஞர் உடன் வழக்கு தொடுத்த மனுதாரரின் வழக்கறிஞரையும் நியமித்து வழக்கை 3 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
Body:அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்புடைய கொலை வழக்கில் வேறு அரசு வழக்கறிஞரை நியமிக்க கோரிய வழக்கில் அரசு வழக்கறிஞர் உடன் வழக்கு தொடுத்த மனுதாரரின் வழக்கறிஞரையும் நியமித்து வழக்கை 3 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சிவசுப்பரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், " கடந்த 2014 ம் ஆண்டு எனது சகோதரர் மீனாட்சி சுந்தரம் சிலரால் கொலை செய்யப்பட்டார். கொலை சம்பந்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி க்கு தொடர்பு உள்ளதாக ஒரு தொலைபேசி உரையாடல் வெளியானது.இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.வழக்கு கடத்த 2016 ம் ஆண்டு ராஜபாளையம் ஜே. எம். முன்பு விசாரணைக்கு வந்த போது,வழக்கை 6 மாதத்தில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை வழக்கு விசாரணையை முடிக்கவில்லை. இந்நிலையில் வழக்கின் அரசு வழக்கறிஞராக அதிமுக வை சேர்ந்த முத்துபாண்டியன் எனபவரை நியமிக்கப்பட்டுள்ளார். அரசு வழக்கறிஞர் முத்துபாண்டியன் அமைச்சர் ராஜேந்திர பாலஜிக்கு மிக நெருக்கமானவர். தற்போது வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே வழக்கின் அரசு வழக்கறிஞராக வேறு வழக்கறிஞரை நியமித்து உத்தவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன்,ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு விசாரணை இன்னும் தொடங்காத நிலையில் அரசு வழக்கறிஞரை மாற்ற இயலாது.மேலும் வழக்கில் அரசு வழக்கறிஞர் உடன் மனுதாரரின் வழக்கறிஞரை நியமித்து, வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.