ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க நடவடிக்கை: செங்கோட்டையன்

மதுரை: அடுத்த கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Sep 21, 2019, 9:55 PM IST

minister sengottaiyan

மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படும் மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா விரகனூர் ரிங் ரோட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘20 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையும், 60 ஆயிரம் பள்ளிகளில் கணினியும், இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்படும்.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

மெட்ரிக் பள்ளிகளில் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படும். மெட்ரிக் பள்ளிகளில் கட்டப்பட்ட கட்டடங்களில் ஆய்வு செய்ய தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதனடிப்படையிலும், அங்கீகார ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 70 லட்சம் மாணவர்களின் கல்வியை செழுமைப்படுத்துவதற்கே அங்கீகார ஆணை வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளிடம் அரசு பாரபட்சம் காட்டவில்லை. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில் ஷூ, சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: எந்த அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை: செங்கோட்டையன்

மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படும் மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா விரகனூர் ரிங் ரோட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘20 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையும், 60 ஆயிரம் பள்ளிகளில் கணினியும், இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்படும்.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

மெட்ரிக் பள்ளிகளில் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படும். மெட்ரிக் பள்ளிகளில் கட்டப்பட்ட கட்டடங்களில் ஆய்வு செய்ய தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதனடிப்படையிலும், அங்கீகார ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 70 லட்சம் மாணவர்களின் கல்வியை செழுமைப்படுத்துவதற்கே அங்கீகார ஆணை வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளிடம் அரசு பாரபட்சம் காட்டவில்லை. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில் ஷூ, சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: எந்த அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை: செங்கோட்டையன்

Intro:அடுத்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ-சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.Body:அடுத்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ-சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ-சாக்ஸ் வழங்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்


மதுரை மற்றும் தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா விரகனூர் ரிங் ரோட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று நடந்தது.

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய நாடே திரும்பி பார்க்கும் சாதனைகளை தமிழகத்தில் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தற்போது பல சாதனைகளை செய்து வருகிறார்.


எடப்பாடி பழனிசாமி

விவசாய குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் தான் குடிமராமத்து பணிகளை முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.

நீரை சிக்கனமாக சேமிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தற்போது குடிமராமத்து பணிகளை செய்து வருகிறோம்.

20 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையும், 60 ஆயிரம் பள்ளிகளில் கணினியும், இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்படும்

துறைக்கு துறை போட்டி போட்டிக் கொண்டு பல நலத்திட்டப் பணிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் தொடங்க ஏதுவான, சாதகமான மாநிலமாக இந்தியாவில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முதல்வரின் நடவடிக்கைதான் காரணம். ரூ. 3 லட்சத்து, 431 கோடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுள்ளோம்.

ஜெயலலிதாவிற்கு பிறகு அரசு எவ்வாறு செயல்படும் என கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டவர்களுக்கு பதிலாக அ.தி.மு.க. அரசு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படும். மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஆய்வு செய்ய தமிழக முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதன் அடிப்படையிலும் அங்கீகார ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

70 லட்சம் மாணவர்களின் கல்வியை செழுமைப்படுத்துவதற்கே அங்கீகார ஆணை வழங்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளிடம் அரசு பாரபட்சம் காட்டவில்லை. அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு ஷூ, சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.