ETV Bharat / state

‘விமர்சனங்களை எதிர்கொள்ள ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ளார்’ - உதயகுமார்

author img

By

Published : Feb 7, 2020, 6:10 PM IST

மதுரை: கல்லுபட்டி அருகே அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயகுமார், விமர்சனங்களை எதிர்கொள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலைதா தங்களுக்குக் கற்றுக்கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளார்களை சந்தித்த உதயகுமார்
செய்தியாளார்களை சந்தித்த உதயகுமார்

மதுரை கல்லுபட்டி பேரூராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளி மாணவ, மணவியர்களுக்கு ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பில் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

முன்னதாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மின்கலன் மூலம் இயங்கும் வாகனங்களை கல்லுபட்டி பேருந்து நிலையத்தில் இருந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயகுமார் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்ட மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. தற்போது சாலை அமைக்கும் பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிதி உதவி செய்யும் ஜப்பானிய நிதி மானியக்குழுவும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. அந்த ஆய்வின் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசிய அமைச்சர் உதயகுமார்

எய்ம்ஸ் அமைப்பதற்கான திட்டப் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், ஏன் நிதிநிலை அறிக்கையில் அது இடம்பெறவில்லை என்றும், இப்போது ஏன் அறிவிக்கவில்லை என்றும், ஒவ்வொருவராக ஆடிட்டர் போன்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் அதற்கு விளக்கம் சொல்வதற்கு நேரமும், காலமும் இல்லை.

வனத்துறை அமைச்சர், பழங்குடியின சிறுவனை காலணியை கழற்ற சொல்லி நிகழ்வு குறித்து உரிய விளக்கமும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். முதுமையின் காரணமாக ஏற்பட்ட சம்பவம் குறித்து பெரிய அளவில் விமர்சனத்திற்கு கொண்டு சென்றதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயகுமார்

ஒருமுறை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சட்டப்பேரவையில் முதலமைச்சராக இருந்தபோது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், நாங்க சாப்பிட்ட எச்சி இலையைத்தான் தற்போது நீங்கள் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றார். இதற்கு பதிலளித்த எம்ஜிஆர், நீங்கள் எவ்வளவு மக்கள் பணத்தை சாப்பிட்டு உள்ளீர்கள் என்ற கணக்கைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று பதிலடி கொடுத்தார்.

எம்ஜிஆர் குறித்து பேசிய அமைச்சர்

ஆகையால் ஒருவருக்கு ஒருவர் சலிக்காமல் அனைவரும் கைதேர்ந்தவர்கள். பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனத்தை எதிர்கொள்வதற்கான பாடத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ளார். விமர்சனங்களை எண்ணி பொது வாழ்க்கையில் இருந்து விலகிவிட முடியாது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ரஜினி குறித்தெல்லாம் கருத்து கூறமுடியாது' - அமைச்சர் உதயகுமார்

மதுரை கல்லுபட்டி பேரூராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளி மாணவ, மணவியர்களுக்கு ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பில் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

முன்னதாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மின்கலன் மூலம் இயங்கும் வாகனங்களை கல்லுபட்டி பேருந்து நிலையத்தில் இருந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயகுமார் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்ட மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. தற்போது சாலை அமைக்கும் பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிதி உதவி செய்யும் ஜப்பானிய நிதி மானியக்குழுவும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. அந்த ஆய்வின் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசிய அமைச்சர் உதயகுமார்

எய்ம்ஸ் அமைப்பதற்கான திட்டப் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், ஏன் நிதிநிலை அறிக்கையில் அது இடம்பெறவில்லை என்றும், இப்போது ஏன் அறிவிக்கவில்லை என்றும், ஒவ்வொருவராக ஆடிட்டர் போன்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் அதற்கு விளக்கம் சொல்வதற்கு நேரமும், காலமும் இல்லை.

வனத்துறை அமைச்சர், பழங்குடியின சிறுவனை காலணியை கழற்ற சொல்லி நிகழ்வு குறித்து உரிய விளக்கமும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். முதுமையின் காரணமாக ஏற்பட்ட சம்பவம் குறித்து பெரிய அளவில் விமர்சனத்திற்கு கொண்டு சென்றதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயகுமார்

ஒருமுறை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சட்டப்பேரவையில் முதலமைச்சராக இருந்தபோது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், நாங்க சாப்பிட்ட எச்சி இலையைத்தான் தற்போது நீங்கள் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றார். இதற்கு பதிலளித்த எம்ஜிஆர், நீங்கள் எவ்வளவு மக்கள் பணத்தை சாப்பிட்டு உள்ளீர்கள் என்ற கணக்கைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று பதிலடி கொடுத்தார்.

எம்ஜிஆர் குறித்து பேசிய அமைச்சர்

ஆகையால் ஒருவருக்கு ஒருவர் சலிக்காமல் அனைவரும் கைதேர்ந்தவர்கள். பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனத்தை எதிர்கொள்வதற்கான பாடத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ளார். விமர்சனங்களை எண்ணி பொது வாழ்க்கையில் இருந்து விலகிவிட முடியாது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ரஜினி குறித்தெல்லாம் கருத்து கூறமுடியாது' - அமைச்சர் உதயகுமார்

Intro:*எய்ம்ஸ் குறித்து; ஏன் நிதிநிலை அறிக்கையில் கொடுக்கவில்லை என்றும், இப்போது ஏன் அறிவிக்கவில்லை என்றும், ஒவ்வொருவராக ஆடிட்டர் போன்று கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தால் அதற்கு விளக்கம் சொல்வதற்கு நேரமும் காலமும் இல்லை - அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*Body:*எய்ம்ஸ் குறித்து; ஏன் நிதிநிலை அறிக்கையில் கொடுக்கவில்லை என்றும், இப்போது ஏன் அறிவிக்கவில்லை என்றும், ஒவ்வொருவராக ஆடிட்டர் போன்று கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தால் அதற்கு விளக்கம் சொல்வதற்கு நேரமும் காலமும் இல்லை - அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*

மதுரை கல்லுபட்டி பேரூராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் மாணவ, மணவியர்களுக்கு 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் மிதிவண்டி வழங்கும் விழாவை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மீட்புதுறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்று, மானக்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

முன்னதாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மின்கலன் மூலம் இயங்கும் வாகனங்களை கல்லுபட்டி பேருந்து நிலையத்தில் இருந்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் துவக்கிவைத்தார்.

*தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;*

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் அமைச்சர் பெருமக்கள் இணைந்து மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. தற்போது சாலை கட்டமைப்பு காண சாலை அமைக்கும் பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

நிதி உதவி செய்யும் ஜப்பானிய நிதி மானியக்குழுவும் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

இந்தநிலையில் நிதிநிலை அறிக்கையில் ஏன் கொடுக்கவில்லை?, ஏன் இப்போது அறிவிக்கவில்லை? என்று ஒரு சில பேர் ஐயம் எழுப்பி வருகின்றனர். முன்னதாக நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் எனவே அதற்கான பூர்வாங்க பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். சந்தேகம் என்று கூறி அச்சத்தையும், பீதியையும் மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த யாரும் முயல வேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எய்ம்ஸ் அமைப்பதற்கான திட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், ஏன் நிதிநிலை அறிக்கை கொடுக்கவில்லை என்றும், இப்போது ஏன் அறிவிக்கவில்லை என்றும், ஒவ்வொருவராக ஆடிட்டர் போன்று கேள்வி கேட்டு இருந்தால் அதற்கு விளக்கம் சொல்வதற்கு நேரமும் காலமும் இல்லை. நிச்சயமாக மருத்துவமனை அமையவேண்டும்.

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி நடப்பது குறித்து ஒன்றும் கூற இயலாது. வருமான வரி சோதனைகும், வருவாய் துறைக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. எனக்கு ஏதும் தெரியாது எனக்கும் வருமானவரி சோதனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

டிஎன்பிசி குரூப் தேர்வில் முறைகேடு குறித்த சம்பந்தப்பட்ட அமைச்சர் உரிய விளக்கம் அளித்துக் கொண்டு வருகிறார்.

வனத்துறை அமைச்சர் பழங்குடியின சிறுவனை காலணியை கழற்ற சொல்லி அதுகுறித்து உரிய விளக்கம் மற்றும் வருத்தத்தை தெரிவித்துள்ளார். முதுமையின் காரணமாக ஏற்பட்ட சம்பவம் குறித்து இதனை பெரிய அளவில் விமர்சனம் தெற்கு கொண்டு சென்றதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் அதனை விவாதமாக தொடர்வது சரியாக இருக்காது.

தொடர்ச்சியான இதுபோன்ற சர்ச்சையில் ஈடுபடுத்த எதிர்க்கட்சியினர் முயன்று தோற்றுப் போகிறார்கள். குறிப்பாக ஒருமுறை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் சட்டசபையில் முதல்வராக இருக்கும் பொழுது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நாங்க சாப்பிட்ட எச்சி இலையைத்தான் தற்போது நீங்கள் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிதற்க்கு, அன்றைய முதல்வர் நீங்கள் எவ்வளவு மக்கள் பணத்தை சாப்பிட்டு உள்ளீர்கள் என்ற கணக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று பதில் கூறினார்.

ஆகையால் ஒருவருக்கு ஒருவர் சலிக்காமல் அனைவரும் கைதேர்ந்தவர்கள் தான். ஆகவே இதுபோன்று எங்களை கோமாளியாக காட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனத்தை எதிர்கொள்வதற்கான பாடத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார். விமர்சனங்களை எண்ணி பொது வாழ்க்கையில் இருந்து விலகி விட முடியாது.

வருமான வரி வருவாய் துறையின் பணிகள் பட்டா,சிட்டா வழங்குவது போன்றவைகள்தான், வருவாய் துறைக்கும் வருமான வரித்துறைக்கு முடிச்சு போட நினைக்கவேண்டாம். இரண்டும் வெவ்வேறு துறையாகத்தான் இருக்கும் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.