ETV Bharat / state

குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ இலவச காய்கறி தொகுப்பு... அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

author img

By

Published : Apr 19, 2020, 10:22 AM IST

மதுரை: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ இலவச காய்கறி பை வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Minister RB Udhayakumar Inspects Paravai Vegetables Market in Midnight
Minister RB Udhayakumar Inspects Paravai Vegetables Market in Midnight

மதுரை புறநகர் பகுதியான பரவை காய்கறி சந்தையில் நள்ளிரவு 11 மணியளவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மதுரையில் ரேபிட் கிட் மூலம் முதல்கட்டமாக கரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் என 70 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை.

ஆய்வு மேற்கொண்ட   அமைச்சர் ஆர் பி உதயகுமார்
ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர் பி உதயகுமார்

நாள் ஒன்றுக்கு 10,000 குடும்பங்கள் என மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ இலவச காய்கறி பை வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் 10,000 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகள் வழங்கவுள்ளோம். மதுரை மாவட்டத்தில் இறைச்சி, மீன் கடைகள் இன்று திறக்கக் கூடாது, விற்பனை செய்யவும் கூடாது. இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'', என்றார்.

இதையும் படிங்க: ‘சித்திரை திருவிழா நடைபெற வாய்ப்பில்லை’ - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை புறநகர் பகுதியான பரவை காய்கறி சந்தையில் நள்ளிரவு 11 மணியளவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மதுரையில் ரேபிட் கிட் மூலம் முதல்கட்டமாக கரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் என 70 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை.

ஆய்வு மேற்கொண்ட   அமைச்சர் ஆர் பி உதயகுமார்
ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர் பி உதயகுமார்

நாள் ஒன்றுக்கு 10,000 குடும்பங்கள் என மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ இலவச காய்கறி பை வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் 10,000 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகள் வழங்கவுள்ளோம். மதுரை மாவட்டத்தில் இறைச்சி, மீன் கடைகள் இன்று திறக்கக் கூடாது, விற்பனை செய்யவும் கூடாது. இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'', என்றார்.

இதையும் படிங்க: ‘சித்திரை திருவிழா நடைபெற வாய்ப்பில்லை’ - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.