ETV Bharat / state

4,500 ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும் தன்னார்வல இளைஞர்கள்

மதுரை: மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிப் பெற்று 4,500 பேருக்கு தினமும் தன்னார்வலர்கள் உணவளித்துவருகின்றனர்.

author img

By

Published : Apr 16, 2020, 9:36 AM IST

மதுரை:ஆட்சியரிடம் அனுமதிப் பெற்று 4500 பேருக்கு தினமும் உணவளித்து வரும் தன்னார்வலர்கள்
மதுரை:ஆட்சியரிடம் அனுமதிப் பெற்று 4500 பேருக்கு தினமும் உணவளித்து வரும் தன்னார்வலர்கள்

நாடு முழுவதும் கரோனாவின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மத்திய அரசு மே 3ஆம் தேதிவரை 144 தடை உத்தரவை நீட்டித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள கூலித்தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனால் சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் என பலர் ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

4500 ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும் தன்னார்வல இளைஞர்கள்

அந்த வகையில் மதுரைக்கு அருகே உள்ள திருநகர் பகுதியைச் சோ்ந்த இளைஞர்கள் ஓன்றுகூடி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைக்கும் சுமார் 4,500 பேருக்கு உணவு அளித்துவருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று உணவு அளித்து வரும் இந்த இளைஞர்கள், திருநகர், திருப்பரங்குன்றம், தனக்கன்குளம், அரசு மருத்துவமனைகள், அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள், உள்ளிட்ட மதுரை முழுவதும் உள்ள அதரவற்றவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முதல் தினமும் உணவளித்து வருகின்றன்ர்.

இந்நிலையில் மத்திய அரசு மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதுவரை ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு தண்ணீர் பாட்டில்கள், உணவு வகைகளை வழங்குகின்றனர். ஆதரவற்றோருக்கு கருணைக் கரம் நீட்டும் இளைஞர்களின் செயலை பொதுமக்களும், மதுரை மாவட்ட நிர்வாகமும் உற்சாகப்படுத்தி பாராட்டியுள்ளது.

இதையும் படிக்க:தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்த மதுரை இளைஞர்கள்!

நாடு முழுவதும் கரோனாவின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மத்திய அரசு மே 3ஆம் தேதிவரை 144 தடை உத்தரவை நீட்டித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள கூலித்தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனால் சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் என பலர் ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

4500 ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும் தன்னார்வல இளைஞர்கள்

அந்த வகையில் மதுரைக்கு அருகே உள்ள திருநகர் பகுதியைச் சோ்ந்த இளைஞர்கள் ஓன்றுகூடி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைக்கும் சுமார் 4,500 பேருக்கு உணவு அளித்துவருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று உணவு அளித்து வரும் இந்த இளைஞர்கள், திருநகர், திருப்பரங்குன்றம், தனக்கன்குளம், அரசு மருத்துவமனைகள், அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள், உள்ளிட்ட மதுரை முழுவதும் உள்ள அதரவற்றவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முதல் தினமும் உணவளித்து வருகின்றன்ர்.

இந்நிலையில் மத்திய அரசு மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதுவரை ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு தண்ணீர் பாட்டில்கள், உணவு வகைகளை வழங்குகின்றனர். ஆதரவற்றோருக்கு கருணைக் கரம் நீட்டும் இளைஞர்களின் செயலை பொதுமக்களும், மதுரை மாவட்ட நிர்வாகமும் உற்சாகப்படுத்தி பாராட்டியுள்ளது.

இதையும் படிக்க:தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்த மதுரை இளைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.