ETV Bharat / state

மதுரையில் மூதாட்டி வீடின்றி கழிப்பறையில் 20 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் அவலம்!

author img

By

Published : Aug 23, 2019, 7:50 AM IST

மதுரை: அனுப்பானடி சிந்தாமணி சாலையில் மூதாட்டி ஒருவர் வீடில்லாமல் ஆதரவற்ற நிலையில் கழிப்பறை வளாகத்தில் 20 ஆண்டு காலமாக வாழ்ந்துவருகிறார்.

madurai old woman living in the toilet

மதுரை அனுப்பானடி சிந்தாமணி சாலையில் உள்ள மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் தங்கி, யாருடைய ஆதரவும் இல்லாமல் 60 வயதுடைய மூதாட்டி கருப்பாயி வாழ்ந்துவருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஆதரவற்ற நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மதுரைக்கு புலம்பெயர்ந்த கருப்பாயிக்கு இந்த கழிவறை வளாகமே அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.

இது குறித்து நமது செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில், திருப்புவனம் பக்கத்தில் இருக்கிற பனையூர் ரெட்ட குளம்தான் எனது சொந்த ஊர். அங்கேயே பிறந்து வளர்ந்து என் உறவினர் ஒருவரையே திருமணம் முடித்து வாழ்ந்துவந்தேன். என் கணவர் இறந்த பிறகு மதுரைக்கு வந்தேன். அவரை இழந்த பிறகு வாடகை கொடுக்க வழியில்லாத நிலையில் இந்தக் கழிப்பறை கட்டடத்திற்குள் குடிபுகுந்தேன்.

கழிப்பறையில் வாழ்ந்துவரும் மூதாட்டி

இந்தக் கழிப்பறையை பயன்படுத்த வருபவர்களிடமிருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் பெற்று அந்த வருமானத்தில் எனது வாழ்க்கை ஓடுகிறது. நாள் ஒன்றுக்கு 50லிருந்து 70 ரூபாய்வரை எனக்குக் கிடைக்கும். இதில் வரும் தொகையிலிருந்து மின்சாரக் கட்டணம் செலுத்தி, இந்தக் கழிப்பறை வளாகத்தை சுத்தம் செய்து பராமரித்துவருகிறேன்.

என்னுடைய உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாமல் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்துவருகிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முதியோர் உதவித்தொகை வாங்கித்தருவதாக ஒருவர் என்னிடமிருந்த ஐந்தாயிரம் ரூபாயை வாங்கினார். ஆனால் இதுவரை முதியோர் உதவித்தொகை வாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டார்.

எழுத படிக்கத்தெரியாததால் முதியோர் உதவித்தொகை வாங்குவது பற்றி எனக்குத் தெரியவில்லை. இந்த வளாகத்தில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தற்போது என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அரசு எனக்கு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்" என உருக்கமாக வேண்டுகோள்விடுத்தார்.

இருபது ஆண்டுகளாக கண்ணீரும் கம்பலையுமாக ஆதரவற்ற நிலையில் கழிவறைக்குள் தனது வாழ்க்கையை கழித்துக்கொண்டு இருக்கின்ற கருப்பாயிக்கு அரசோ மதுரை மாவட்ட நிர்வாகமோ கை கொடுத்து காப்பற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பம்.

மதுரை அனுப்பானடி சிந்தாமணி சாலையில் உள்ள மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் தங்கி, யாருடைய ஆதரவும் இல்லாமல் 60 வயதுடைய மூதாட்டி கருப்பாயி வாழ்ந்துவருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஆதரவற்ற நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மதுரைக்கு புலம்பெயர்ந்த கருப்பாயிக்கு இந்த கழிவறை வளாகமே அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.

இது குறித்து நமது செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில், திருப்புவனம் பக்கத்தில் இருக்கிற பனையூர் ரெட்ட குளம்தான் எனது சொந்த ஊர். அங்கேயே பிறந்து வளர்ந்து என் உறவினர் ஒருவரையே திருமணம் முடித்து வாழ்ந்துவந்தேன். என் கணவர் இறந்த பிறகு மதுரைக்கு வந்தேன். அவரை இழந்த பிறகு வாடகை கொடுக்க வழியில்லாத நிலையில் இந்தக் கழிப்பறை கட்டடத்திற்குள் குடிபுகுந்தேன்.

கழிப்பறையில் வாழ்ந்துவரும் மூதாட்டி

இந்தக் கழிப்பறையை பயன்படுத்த வருபவர்களிடமிருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் பெற்று அந்த வருமானத்தில் எனது வாழ்க்கை ஓடுகிறது. நாள் ஒன்றுக்கு 50லிருந்து 70 ரூபாய்வரை எனக்குக் கிடைக்கும். இதில் வரும் தொகையிலிருந்து மின்சாரக் கட்டணம் செலுத்தி, இந்தக் கழிப்பறை வளாகத்தை சுத்தம் செய்து பராமரித்துவருகிறேன்.

என்னுடைய உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாமல் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்துவருகிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முதியோர் உதவித்தொகை வாங்கித்தருவதாக ஒருவர் என்னிடமிருந்த ஐந்தாயிரம் ரூபாயை வாங்கினார். ஆனால் இதுவரை முதியோர் உதவித்தொகை வாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டார்.

எழுத படிக்கத்தெரியாததால் முதியோர் உதவித்தொகை வாங்குவது பற்றி எனக்குத் தெரியவில்லை. இந்த வளாகத்தில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தற்போது என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அரசு எனக்கு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்" என உருக்கமாக வேண்டுகோள்விடுத்தார்.

இருபது ஆண்டுகளாக கண்ணீரும் கம்பலையுமாக ஆதரவற்ற நிலையில் கழிவறைக்குள் தனது வாழ்க்கையை கழித்துக்கொண்டு இருக்கின்ற கருப்பாயிக்கு அரசோ மதுரை மாவட்ட நிர்வாகமோ கை கொடுத்து காப்பற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பம்.

Intro:Body:

கழிப்பறையில் வாழ்க்கை நடத்தும் தாழ்த்தப்பட்ட பெண்மணி கருப்பாயி - முதியோர் உதவித் தொகைக்காக ஏங்கும் அவலம்



குடும்பத்தாரால் உறவினர்களால் கைவிடப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்மணி கருப்பாயி கடந்த 20 ஆண்டுகளாக மாநகராட்சி கழிப்பறையில் வாழ்ந்து வரும் அவலம் முதியோர் உதவித் தொகைக்காக தற்போது வரை போராடி வருகிறார்.

Body:கழிப்பறையில் வாழ்க்கை நடத்தும் தாழ்த்தப்பட்ட பெண்மணி கருப்பாயி - முதியோர் உதவித் தொகைக்காக ஏங்கும் அவலம்



குடும்பத்தாரால் உறவினர்களால் கைவிடப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்மணி கருப்பாயி கடந்த 20 ஆண்டுகளாக மாநகராட்சி கழிப்பறையில் வாழ்ந்து வரும் அவலம் முதியோர் உதவித் தொகைக்காக தற்போது வரை போராடி வருகிறார்.



மதுரை அருகே அனுப்பானடி சிந்தாமணி சாலையில் உள்ள மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் தங்கி, யாருடைய ஆதரவும் இல்லாத நிலையில் 60 வயது தாழ்த்தப்பட்ட முதிய பெண்மணி கருப்பாயி வாழ்ந்து வருகிறார்.



கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக யாருமற்ற அநாதையாய் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு புலம்பெயர்ந்த கருப்பாயிக்கு இந்த கழிவறை வளாகமே அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.



இதுகுறித்து நமது etv bharat ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், திருப்புவனம் பக்கத்தில் இருக்கிற பனையூர் ரெட்ட குளம் தான் எனது சொந்த ஊர் அங்கேயே பிறந்து எனது சொந்தக்காரர் ஒருவருக்கு வாக்கப்பட்டு வாழ்ந்து வந்தேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை அவருக்கு திருமணம் முடித்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என் கணவர் இறந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன யாருமற்ற இந்நிலையில் நாங்கள் இந்த பகுதிக்கு வந்தோம் என் கணவரை இழந்த பிறகு வாடகை கொடுக்க வழியில்லாத நிலையில் அருகில் இருந்த இந்த கழிப்பறை கட்டிடத்திற்கு நான் குடி புகுந்தேன்.



இது கட்டண கழிப்பறை வளரும் என்பதால் இங்கு கடன் கழிக்க வருகின்ற அவர்களிடமிருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் பெற்று அந்த வருமானத்தில் எனது வாழ்க்கை ஓடுகிறது நாள் ஒன்றுக்கு 50 லிருந்து 70 ரூபாய் எனக்கு கிடைக்கும் இதில் மின்சார கட்டணம் கட்டி இந்த வளாகத்தை சுத்தமாக பராமரிப்பது எனது வேலையாகும் எனக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது என் மகள் எங்கு இருக்கிறார் என்பது கூட எனக்குத் தெரியாது உறவினர்கள் சொந்தக்காரர்கள் என யாருடைய ஆதரவும் இல்லை இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முதியோர் உதவித் தொகைக்காக ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாந்துவிட்டேன் இன்றுவரை முதியோர் உதவித்தொகை எனக்கு கிடைக்கவில்லை இங்கு கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் என் வாழ்க்கை பாடு ஓடிக்கொண்டிருக்கிறது என்றார்.



கண்ணீரும் கம்பலையுமாக கழிவறைக்குள் தனது வாழ்க்கையை கழித்துக் கொண்டு இருக்கின்ற கருப்பாயிக்கு அரசாங்கம் ஏதேனும் உதவி செய்தாகவேண்டும் ஆதரவற்ற பெண்மணி கருப்பாயிக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் கை கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.Conclusion:


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.