ETV Bharat / state

மார்க்கண்டேயன் மரணம் நிரூபணம் - அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் - மார்க்கண்டேயன் மரணம்

மதுரை: விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மார்க்கண்டேயன் என்பவர் காவல்துறையினரின் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டது நிரூபணமாகியுள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

madurai high court bench
author img

By

Published : Jul 30, 2019, 2:20 AM IST

மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த பூமயில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் எனது கணவர் பெயர் மார்க்கண்டேயன், எனக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டில் எனது மூத்த மகள் திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக ஊமச்சிகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். காவல்துறையினர் என் கணவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் என் கணவர் காவல் நிலையத்தின் பின்புறம் தூக்கியிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அது உண்மையல்ல. காவல்துறையினர் என் கணவரை இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துள்ளார். என் கணவர் மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், உள்துறை செயலர் சார்பில் உள்துறை துணை செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரரின் கணவர் காவல் நிலையத்தில் தற்கொலை கொண்டுள்ளார்.

அவர் காவல்துறையினர் மனரீதியாக துன்புறுத்தப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஊமச்சிக்குளம் சரக டி.எஸ்.பி. தங்கவேலு, காவல் ஆய்வாளர் பாலாஜி, பெண் சார்பு ஆய்வாளர் ராதா மகேஷ், சிறப்பு எஸ்.ஐ. சி.ஜெயராமன் (அனைவரும் சஸ்பெண்ட்டில் உள்ளனர்). ஏட்டு சோலை மலை கண்ணன், ஏட்டு முருகன் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்க எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து விரைவில் இறுதி முடிவெடுக்கப்படும். இதனால் 2 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து இறுதி விசாரணைக்காக இந்த வழக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த பூமயில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் எனது கணவர் பெயர் மார்க்கண்டேயன், எனக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டில் எனது மூத்த மகள் திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக ஊமச்சிகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். காவல்துறையினர் என் கணவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் என் கணவர் காவல் நிலையத்தின் பின்புறம் தூக்கியிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அது உண்மையல்ல. காவல்துறையினர் என் கணவரை இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துள்ளார். என் கணவர் மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், உள்துறை செயலர் சார்பில் உள்துறை துணை செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரரின் கணவர் காவல் நிலையத்தில் தற்கொலை கொண்டுள்ளார்.

அவர் காவல்துறையினர் மனரீதியாக துன்புறுத்தப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஊமச்சிக்குளம் சரக டி.எஸ்.பி. தங்கவேலு, காவல் ஆய்வாளர் பாலாஜி, பெண் சார்பு ஆய்வாளர் ராதா மகேஷ், சிறப்பு எஸ்.ஐ. சி.ஜெயராமன் (அனைவரும் சஸ்பெண்ட்டில் உள்ளனர்). ஏட்டு சோலை மலை கண்ணன், ஏட்டு முருகன் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்க எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து விரைவில் இறுதி முடிவெடுக்கப்படும். இதனால் 2 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து இறுதி விசாரணைக்காக இந்த வழக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Intro:காவல்துறை துன்புறுத்தலால் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணம் அரசு தரப்பு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு

காவல்துறையின் துன்புறுத்தலினால் தான் மார்க்கண்டேயன் தற்கொலை செய்துகொண்டார். மதுரை காவல் நிலைய மரணத்தில்-அரசு தரப்பில் பதில் மனு தாக்கல்.Body:காவல்துறை துன்புறுத்தலால் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணம் அரசு தரப்பு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு

காவல்துறையின் துன்புறுத்தலினால் தான் மார்க்கண்டேயன் தற்கொலை செய்துகொண்டார். மதுரை காவல் நிலைய மரணத்தில்-அரசு தரப்பில் பதில் மனு தாக்கல்.

சம்பத்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த பூமயில், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், எனது கணவர் மார்க்கண்டேயன். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2011 ம் ஆண்டில் எனது மூத்த மகள் திடீரென காணாமல்போனார்.

இது தொடர்பாக ஊமச்சிகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். காவல்துறையினர் என் கணவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

மறுநாள் எங்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு வருமாறு காவல்துறையினர் அழைத்தனர். அங்கு சென்ற போது என் கணவர் சடலமாக கிடந்தார்.

விசாரித்த போது காவல் நிலையத்தின் பின்புறம் என் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அது உண்மையல்ல.

காவல்துறையினர் என் கணவரை இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துள்ளார்.

என் கணவர் மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. உள்துறை செயலர் சார்பில் உள்துறை துணை செயலர் தாக்கல் செய்த பதில் மனு:
மனுதாரரின் கணவர் காவல் நிலையத்தில் தற்கொலை கொண்டுள்ளார்.

அவர் காவல்துறையினர் மனரீதியாக துன்புறுத்தப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஊமச்சிக்குளம் சரக டி.எஸ்.பி. தங்கவேலு, காவல் ஆய்வாளர் பாலாஜி, பெண் சார்பு ஆய்வாளர் ராதாமகேஷ், சிறப்பு எஸ்.ஐ. சி.ஜெயராமன் (அனைவரும் சஸ்பெண்ட்டில் உள்ளனர்). ஏட்டு சோலை மலை கண்ணன், ஏட்டு முருகன் ஆகியோர் மீது துறைரீதியாக நடவடிக்க எடுக்க பரி்ந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் மீது விரைவில் இறுதி முடிவெடுக்கப்படும். இதனால் 2 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இறுதி விசாரணைக்காக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.