ETV Bharat / state

மதுரையில் கட்டுக்கடங்காத தீ! - ரூ.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் - madurai computer center fire accident

மதுரை: வடக்குவெளி வீதியில் ஜெகன்நாத் என்பவருக்குச் சொந்தமான 'ஏசியன் கம்யூட்டர்ஸ்' என்ற தனியார் கணினி விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

madurai computer center fire accident
author img

By

Published : Sep 9, 2019, 9:10 AM IST

மின்கசிவால் கணினி விற்பனை கடையில் தீ!

மதுரை வடக்குவெளி வீதியில் ஜெகன்நாத் என்பவருக்குச் சொந்தமான தனியார் கணினி விற்பனை நிறுவனத்தில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக கடை முழுவதிலும் தீ பரவி எரியத் தொடங்கியது.

அதிகரித்த தீயின் வீரியம்

கடை முழுவதும் மின்னணு பொருட்கள் என்பதால் தீயின் வீரியம் மேலும் அதிகரித்து அதிகளவில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதையடுத்து, அப்பகுதி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கட்டுக்கடங்காத தீ! 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரவழைப்பு

இருப்பினும், தீயை கட்டுப்படுத்த முடியாததால் மேலும் பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவ்வாகனங்கள் விரைந்துவந்து தீயை அணைக்க கடுமையாகப் போராடின.

மேலும், தீயானதும் அடுத்தடுத்த கட்டடங்களுக்கு பரவாமல் அணைக்கும் முயற்சியிலும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டனர். இதையடுத்து, இன்று காலை ஆறு மணியளவில் தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஐந்து கோடி மதிப்புள்ள கணினி பொருட்கள் எரிந்து நாசம்

இந்தத் தீ விபத்தில் நிறுவனத்திலுள்ள ஐந்து கோடி மதிப்புள்ள கணினி பொருட்கள், உபகரணங்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

மின்கசிவால் கணினி விற்பனை கடையில் தீ!

மதுரை வடக்குவெளி வீதியில் ஜெகன்நாத் என்பவருக்குச் சொந்தமான தனியார் கணினி விற்பனை நிறுவனத்தில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக கடை முழுவதிலும் தீ பரவி எரியத் தொடங்கியது.

அதிகரித்த தீயின் வீரியம்

கடை முழுவதும் மின்னணு பொருட்கள் என்பதால் தீயின் வீரியம் மேலும் அதிகரித்து அதிகளவில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதையடுத்து, அப்பகுதி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கட்டுக்கடங்காத தீ! 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரவழைப்பு

இருப்பினும், தீயை கட்டுப்படுத்த முடியாததால் மேலும் பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவ்வாகனங்கள் விரைந்துவந்து தீயை அணைக்க கடுமையாகப் போராடின.

மேலும், தீயானதும் அடுத்தடுத்த கட்டடங்களுக்கு பரவாமல் அணைக்கும் முயற்சியிலும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டனர். இதையடுத்து, இன்று காலை ஆறு மணியளவில் தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஐந்து கோடி மதிப்புள்ள கணினி பொருட்கள் எரிந்து நாசம்

இந்தத் தீ விபத்தில் நிறுவனத்திலுள்ள ஐந்து கோடி மதிப்புள்ள கணினி பொருட்கள், உபகரணங்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

Intro:மதுரையில் கணிணி விற்பனை நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து - 5கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

மதுரை வடக்குவெளி வீதியில் ஜெகன்நாத் என்பவருக்கு சொந்தமான ஏசியன் கம்யூட்டர்ஸ் என்ற தனியார் கணிணி விற்பனை நிறுவனம் செயல்பட்டுவருகிறது.
Body:மதுரையில் கணிணி விற்பனை நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து - 5கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

மதுரை வடக்குவெளி வீதியில் ஜெகன்நாத் என்பவருக்கு சொந்தமான ஏசியன் கம்யூட்டர்ஸ் என்ற தனியார் கணிணி விற்பனை நிறுவனம் செயல்பட்டுவருகிறது.

இங்கு பல கோடி மதிப்பிலான கணிணி மற்றும் கணிணி உபகரணங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன இந்நிலையில் இரவு 9 மணியளவில் திடிரென மின்கசிவு ஏற்பட்டு தீயானது கணிணிகள் முழுவதிலும் பரவி தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது.

முழுவதும் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் என்பதால் தீயீன் வேகம் அதிகரித்ததால் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. ரயில்நிலையம் செல்லும் சாலை என்பதால் கடுமையான புகைமூட்டம் காரணமாக வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன.

தீயானது கட்டுப்படுத்த முடியாத நிலையில் மதுரை மாநகரில் உள்ள 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. தீ விபத்து காரணமாக நிறுவனத்தில் உள்ள 5கோடி மதிப்பிலான கணிணி பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டன.

தொடர்ந்து தீயை அணைக்கும் பணியானது நடைபெற்றது.அடுத்தடுத்த கட்டிடங்களில் பல நிறுவனங்கள் செயல்பட்டுவருவதால் தீயை பரவாமால் தடுக்க தீயணைப்பு துறையினர் போராடினர்.

இன்று காலை 6 மணி அளவில் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.