ETV Bharat / state

சாலையில் கிடந்த ரூ. 4.5 லட்சம்; உரியவரிடம் ஒப்படைத்த மதுரைக்காரர்! - மதுரைவாசி

மதுரை: சாலையில் ரூ. 4.5 லட்சத்தை தவறவிட்ட நபரிடமே ஒப்படைத்த பூபாலன் என்பவரை மதுரை காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டியுள்ளார்.

Madurai Commissioner Congrats the person who handed over the Missing Amount
Madurai Commissioner Congrats the person who handed over the Missing Amount
author img

By

Published : Dec 4, 2019, 1:44 PM IST

உணவு பொருள் வியாபாரியான சக்கரவர்த்தி என்பவர் கடந்த 29.11.2019ஆம் தேதியன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் தனது இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4,47,500-ஐ தவற விட்டுவிட்டார்.

இது தொடர்பாக சி.சி.டி. வி. பதிவுகளை சேகரித்து சக்கரவர்த்தி சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். தெப்பக்குளம் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். பின்னர் அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிசிடிவி காட்சி

இந்நிலையில் மதுரை பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த பூபாலன் என்பவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலையில் கிடந்த பணப் பையை கொண்டுவந்து சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பூபாலனைப் வெகுவாக பாராட்டினார்.

இதையும் படிங்க: திருப்பதின்னா மட்டுமில்ல... மதுரைன்னாலும் இனிமே லட்டு தான்! - மகிழ்ச்சியில் மதுரைவாசிகள்!

உணவு பொருள் வியாபாரியான சக்கரவர்த்தி என்பவர் கடந்த 29.11.2019ஆம் தேதியன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் தனது இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4,47,500-ஐ தவற விட்டுவிட்டார்.

இது தொடர்பாக சி.சி.டி. வி. பதிவுகளை சேகரித்து சக்கரவர்த்தி சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். தெப்பக்குளம் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். பின்னர் அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிசிடிவி காட்சி

இந்நிலையில் மதுரை பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த பூபாலன் என்பவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலையில் கிடந்த பணப் பையை கொண்டுவந்து சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பூபாலனைப் வெகுவாக பாராட்டினார்.

இதையும் படிங்க: திருப்பதின்னா மட்டுமில்ல... மதுரைன்னாலும் இனிமே லட்டு தான்! - மகிழ்ச்சியில் மதுரைவாசிகள்!

Intro:சாலையில் கிடந்த நான்கரை லட்சம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த நபரை காவல் ஆணையர் பாராட்டினார்

சாலையில் கிடந்த நான்கரை லட்சம் ரூபாயை தவறவிட்ட நபரிடம் வந்து ஒப்படைத்த பூபாலன் என்பவரை மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.Body:சாலையில் கிடந்த நான்கரை லட்சம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த நபரை காவல் ஆணையர் பாராட்டினார்

சாலையில் கிடந்த நான்கரை லட்சம் ரூபாயை தவறவிட்ட நபரிடம் வந்து ஒப்படைத்த பூபாலன் என்பவரை மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.

உணவு பொருள் விற்பனை வியாபாரியான சக்கரவர்த்தி சக்கரவர்த்தி என்பவர் கடந்த 29.11.2019 அன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் தனது இரு சக்கர வாகனத்தில் தான் வைத்திருந்த ரூ 4,47,500-ஐ தவற விட்டு விட்டார்.

இது தொடர்பாக சி.சி.டி. வி. பதிவுகளை சேகரித்து சக்ரவர்த்தி சமுக வலை தளத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும் தெப்பக்குளம் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்

இந்நிலையில் மதுரை பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த பூபாலன் என்பவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலையில் கிடந்த பையை கொண்டுவந்து சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பூபாலனைப் பாராட்டினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.