உணவு பொருள் வியாபாரியான சக்கரவர்த்தி என்பவர் கடந்த 29.11.2019ஆம் தேதியன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் தனது இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4,47,500-ஐ தவற விட்டுவிட்டார்.
இது தொடர்பாக சி.சி.டி. வி. பதிவுகளை சேகரித்து சக்கரவர்த்தி சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். தெப்பக்குளம் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். பின்னர் அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மதுரை பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த பூபாலன் என்பவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலையில் கிடந்த பணப் பையை கொண்டுவந்து சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பூபாலனைப் வெகுவாக பாராட்டினார்.
இதையும் படிங்க: திருப்பதின்னா மட்டுமில்ல... மதுரைன்னாலும் இனிமே லட்டு தான்! - மகிழ்ச்சியில் மதுரைவாசிகள்!