ETV Bharat / state

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை - சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தீவிரம்! - Madurai latest news

மதுரை: தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

Madurai
author img

By

Published : Nov 25, 2019, 10:50 PM IST

Updated : Nov 25, 2019, 10:59 PM IST

மதுரை தோப்பூரில் ஆயிரத்து 264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 224.24 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் அறிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு தமிழ்நாடு சுகாதாரத் துறை அலுவலர்கள், மத்தியகுழு, ஜப்பானிய நிதிக்குழுவினர் நிலங்களை ஆய்வு செய்தனர்.

இத்திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார். பின்னர், சுகாதாரத்துறை அலுவலர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், மருத்துவ மனைக்கான சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.

மொத்தம் 224.24 ஏக்கர் பரப்பளவு கொண்ட திட்டத்தில் 199.24 ஏக்கரில் மருத்துவமனை, 20 ஏக்கரில் இந்தியன் எண்ணெய் நிறுவன குழாய் வழித்தடம், 5 ஏக்கரில் சாலைப் பணிகள் அமைக்கப்படுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள்

முதற்கட்டமாக மருத்துவமனைக்கு செல்வதற்கான கூத்தியார் குண்டு விளக்கிலிருந்து, கரடிக்கல் வரை மத்திய சாலை நிதித் திட்டத்தின் கீழ் ரூ.21 கோடியே 20 லட்சம் மதிப்பில் 6.4 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் 5.50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிக்க ரூ.10 கோடி மதிப்பீட்டில், ஈரோட்டை சேர்ந்த பி&சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு, கட்டுமான பணி குழுவினர் 224.24 ஏக்கருடன் கூடுதலாக 24 ஏக்கர் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் விரைவில் கூடுதலாக 24 ஏக்கர் சேர்த்து மொத்தம் 248.24 ஏக்கர் ஒதுக்கப்பட நடவடிக்கை எடுத்து அதற்கான வரைபடம் தயார் செய்து கொடுக்கப்படவுள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டிடப் பணிகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது. இதற்காக ஒப்பந்தம் விடப்பட்டுள்ள பி&சி நிறுவனம், சுற்றுச்சுவர் அமைப்பதற்கான கட்டுமான பணியை இன்று தொடங்கியுள்ளது. 12 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட 1500 கான்கிரீட் சிலாப்கள் தயாரிக்கப்பட்டு, சுற்றிலும் பதிக்கப்படுமெனவும் அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது எனவும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி விரைவில்...!'

மதுரை தோப்பூரில் ஆயிரத்து 264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 224.24 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் அறிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு தமிழ்நாடு சுகாதாரத் துறை அலுவலர்கள், மத்தியகுழு, ஜப்பானிய நிதிக்குழுவினர் நிலங்களை ஆய்வு செய்தனர்.

இத்திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார். பின்னர், சுகாதாரத்துறை அலுவலர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், மருத்துவ மனைக்கான சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.

மொத்தம் 224.24 ஏக்கர் பரப்பளவு கொண்ட திட்டத்தில் 199.24 ஏக்கரில் மருத்துவமனை, 20 ஏக்கரில் இந்தியன் எண்ணெய் நிறுவன குழாய் வழித்தடம், 5 ஏக்கரில் சாலைப் பணிகள் அமைக்கப்படுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள்

முதற்கட்டமாக மருத்துவமனைக்கு செல்வதற்கான கூத்தியார் குண்டு விளக்கிலிருந்து, கரடிக்கல் வரை மத்திய சாலை நிதித் திட்டத்தின் கீழ் ரூ.21 கோடியே 20 லட்சம் மதிப்பில் 6.4 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் 5.50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிக்க ரூ.10 கோடி மதிப்பீட்டில், ஈரோட்டை சேர்ந்த பி&சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு, கட்டுமான பணி குழுவினர் 224.24 ஏக்கருடன் கூடுதலாக 24 ஏக்கர் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் விரைவில் கூடுதலாக 24 ஏக்கர் சேர்த்து மொத்தம் 248.24 ஏக்கர் ஒதுக்கப்பட நடவடிக்கை எடுத்து அதற்கான வரைபடம் தயார் செய்து கொடுக்கப்படவுள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டிடப் பணிகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது. இதற்காக ஒப்பந்தம் விடப்பட்டுள்ள பி&சி நிறுவனம், சுற்றுச்சுவர் அமைப்பதற்கான கட்டுமான பணியை இன்று தொடங்கியுள்ளது. 12 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட 1500 கான்கிரீட் சிலாப்கள் தயாரிக்கப்பட்டு, சுற்றிலும் பதிக்கப்படுமெனவும் அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது எனவும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி விரைவில்...!'

Intro:Body:
*எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடக்கம்*

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் சுற்றுச்சுவர் பணிகள் தொடங்க உள்ள நிலையில் அதற்கான கட்டுமான பணிகளை தனியார் நிறுவனம் தொடங்கியது.

மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 1264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018ம் ஆண்டு ஜுன் மாதம் அறிவிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார்.

இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இதனை அடுத்து கடந்த ஜுன்மாதம் 10ம் தேதி தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் , மத்தியகுழு மற்றும் ஜப்பானிய நிதிக்குழுவினர் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் எனவே மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.

தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள 224. 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 199.24 ஏக்கரில் மருத்துவமனை அமைப்பதற்கும் 20 ஏக்கர் இந்தியன் எண்ணெய் நிறுவன குழாய் வழித்தடத்திற்கும் 5 ஏக்கர் நிலம் சாலைப் பணிகளுக்கு மான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருவாய்த்துறை தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்கு செல்வதற்கான சாலைப் பணிகள் கூத்தியார் குண்டு விலக்கிலிருந்து கரடிக்கல் வரை மத்திய சாலை நிதித் திட்டத்திலிருந்து ரூ.21 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 6.4 கி.மீ.நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

*மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூபாய் 10கோடி மதிப்பீட்டில் 5.50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காக ஈரோட்டை சேர்ந்த பி & சி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.* இதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் மின் இணைப்பு வழங்கப்படாததால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது மருத்துவமனை அமைய உள்ள பகுதிகளில் தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்கனவே பதிக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு சாலை பணிகள் நிறைவடைந்த உடன் மின் இணைப்பு கொடுக்கும் பணி தொடங்கும் என தெரிவித்தார்கள்.

மேலும் மின் இணைப்பு வழங்குவதற்கான திட்ட மதிப்பீடு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஒப்புதல் கிடைத்தவுடன் மின் இணைப்பு கொடுக்கும் பணி தொடங்கும் என தெரிவித்தனர். இப்பகுதியில் உள்ள மொத்த பரப்பளவான 250 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக தமிழக வருவாய்த்துறை மூலமாக ஏற்கனவே 224. 24 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவமனை அமையஉள்ள பகுதியின் வரைபடம் தயார் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு மற்றும் கட்டுமான பணி குழுவினர் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள 224.24 ஏக்கர் உடன் கூடுதலாக 24 ஏக்கர் வேண்டுமென வருவாய்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது, இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள் விரைவில் கூடுதலாக 24 ஏக்கர் சேர்த்து (மொத்தம் 248.24 ஏக்கர்) மருத்துவமனைக்காக மட்டும் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 199. 24 ஏக்கருடன் தனியாக 224. 24 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்கான வரைபடம் தயார் செய்து கொடுக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனை கட்டிடப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முதலில் தொடங்க உள்ளது இதற்காக ஒப்பந்தம் விடப்பட்டுள்ள பி & சி நிறுவனம் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான கட்டுமான பணியை இன்று தொடங்கியது. 12 அடி நீளம் 10 அடி உயரம் கொண்ட சிலாப்கள் தயாரிக்கப்பட்டு சுற்றிலும் பதிக்கப்படும் எனவும் இதற்காக 1500 சிலாப்கள் தயாரிக்கப்படுவதாகவும் அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது எனவும் இந்தப் பணியானது ஆறுமாதங்களுக்குள் முடிக்கப்படும் எனவும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.Conclusion:
Last Updated : Nov 25, 2019, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.