ETV Bharat / state

’டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது வழக்கு பதியாதது ஏன்...’ - நீதிபதி கேள்வி

மதுபான பாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் காவல் துறையினர், மதுபான பாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

author img

By

Published : Sep 15, 2021, 7:26 PM IST

நீதிபதி கேள்வி
நீதிபதி கேள்வி

மதுரை: தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட காவல் சரகப் பகுதிகளில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இத்தகவலின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட காவல் துறையினர், சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட பலரைக் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பலரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான மனு இன்று (செப்.15) நீதிபதி புகழேந்தி முன்னர் விசாரணைக்கு வந்தது.

ஜாமீன் வழங்க அனுமதியும், மறுப்பும்...

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அரசு மதுபானக் கடைகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை அவர் வாங்கி, பதுக்கி, விற்பனை செய்துள்ளதாகவும் கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதி, வேறு நிலுவை வழக்குகள் இல்லாத மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கியும், ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ள மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் ஒரு நபருக்கு நூற்றுக்கணக்கில் மதுபானங்களை விற்பனை செய்தது யார், விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை உள்ளிட்ட பல கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.

குற்றவாளிகள் காவல் துறையினருக்கு தொடர்பு?

அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணையின்போது, வழக்கு குறித்த முழு தகவலையும் காவல் துறையினர் சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் வேறு ஏதேனும் தொடர்பு இருப்பின், சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்கும்படியும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு: பள்ளிக் கல்வித்துறை செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட காவல் சரகப் பகுதிகளில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இத்தகவலின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட காவல் துறையினர், சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட பலரைக் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பலரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான மனு இன்று (செப்.15) நீதிபதி புகழேந்தி முன்னர் விசாரணைக்கு வந்தது.

ஜாமீன் வழங்க அனுமதியும், மறுப்பும்...

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அரசு மதுபானக் கடைகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை அவர் வாங்கி, பதுக்கி, விற்பனை செய்துள்ளதாகவும் கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதி, வேறு நிலுவை வழக்குகள் இல்லாத மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கியும், ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ள மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் ஒரு நபருக்கு நூற்றுக்கணக்கில் மதுபானங்களை விற்பனை செய்தது யார், விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை உள்ளிட்ட பல கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.

குற்றவாளிகள் காவல் துறையினருக்கு தொடர்பு?

அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணையின்போது, வழக்கு குறித்த முழு தகவலையும் காவல் துறையினர் சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் வேறு ஏதேனும் தொடர்பு இருப்பின், சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்கும்படியும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு: பள்ளிக் கல்வித்துறை செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.