ETV Bharat / state

’பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுவது திமுக மரபு!'

author img

By

Published : Sep 9, 2020, 3:57 PM IST

மதுரை: திமுக ஆட்சியில் சத்யவாணி முத்து காலம் முதல் பட்டியலின மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுவருகின்றனர் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர் பி உதயகுமார்
அமைச்சர் ஆர் பி உதயகுமார்

உயிர் தொழில்நுட்ப மின்னணுவியல் வளர்ச்சியை மையமாகக் கொண்ட 11ஆவது மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை சார்பில் காணொலி காட்சி மூலம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டார்.

இதில், வரும் 2024ஆம் ஆண்டிற்குள் மின்னணு பொருள்கள் உற்பத்தி துறையின் மனிதவள தேவையை பூர்த்திசெய்யும் வகையில் ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மின்னணு துறையில் மதிப்புக்கூட்டு அளவினை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், பயிற்சிபெற்ற பெண் ஊழியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் பயிற்சி மானியம் வழங்கப்படும் என முடிவுசெய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கிசான் முறைகேடு தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண், வருவாய்த் துறை அலுவலர்கள் மூலம் உரிய விசாரணை நடத்தி முறைகேடாக பெறப்பட்ட பணம் முழுமையாக மீட்கப்படும்.

ஆளும் அரசு என்ற ஒன்று இருந்தால் எதிர்க்கட்சியும் இருக்கும். எதிர்க்கட்சிகளுக்கு ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அடிப்படை நோக்கம் இருப்பது இயல்பு.

இதற்காக, அதிமுக மீது சேற்றை வாரி இறைப்பது, அவதூறு பரப்புவதையே திமுக மரபாகக் கொண்டுள்ளனர். எனவே திமுகவிடமிருந்து புதிய அணுகுமுறையை எதிர்பார்க்க முடியாது. அதிமுக மீது அவதூறு பரப்புவதை காலங்காலமாக பின்பற்றி வரும் அணுகுமுறையை தற்போதும் ஸ்டாலின் தொடர்ந்து வருகிறார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசிய காணொலி

திமுகவின் பொதுக்குழு வசைபாடும் பொதுக்குழுவாக மட்டுமே இருக்குமே தவிர வாழ்த்தும் பொதுக்குழுவாக இருக்காது. அதிமுகவில் இன்றும் பட்டியலினத்தை சேர்ந்தவரே சபாநாயகராக உள்ளார். அதிமுகவை பொறுத்தவரை சமத்துவம் இருக்கும். திமுக ஆட்சியில் சத்யவாணி முத்து காலம் முதல் பட்டியலின மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்” என்றார்.

இதையும் படிங்க: டிஜிட்டல் தள குற்றங்களைத் தடுக்க சைபர் கிரைம் பிரிவு - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

உயிர் தொழில்நுட்ப மின்னணுவியல் வளர்ச்சியை மையமாகக் கொண்ட 11ஆவது மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை சார்பில் காணொலி காட்சி மூலம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டார்.

இதில், வரும் 2024ஆம் ஆண்டிற்குள் மின்னணு பொருள்கள் உற்பத்தி துறையின் மனிதவள தேவையை பூர்த்திசெய்யும் வகையில் ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மின்னணு துறையில் மதிப்புக்கூட்டு அளவினை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், பயிற்சிபெற்ற பெண் ஊழியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் பயிற்சி மானியம் வழங்கப்படும் என முடிவுசெய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கிசான் முறைகேடு தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண், வருவாய்த் துறை அலுவலர்கள் மூலம் உரிய விசாரணை நடத்தி முறைகேடாக பெறப்பட்ட பணம் முழுமையாக மீட்கப்படும்.

ஆளும் அரசு என்ற ஒன்று இருந்தால் எதிர்க்கட்சியும் இருக்கும். எதிர்க்கட்சிகளுக்கு ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அடிப்படை நோக்கம் இருப்பது இயல்பு.

இதற்காக, அதிமுக மீது சேற்றை வாரி இறைப்பது, அவதூறு பரப்புவதையே திமுக மரபாகக் கொண்டுள்ளனர். எனவே திமுகவிடமிருந்து புதிய அணுகுமுறையை எதிர்பார்க்க முடியாது. அதிமுக மீது அவதூறு பரப்புவதை காலங்காலமாக பின்பற்றி வரும் அணுகுமுறையை தற்போதும் ஸ்டாலின் தொடர்ந்து வருகிறார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசிய காணொலி

திமுகவின் பொதுக்குழு வசைபாடும் பொதுக்குழுவாக மட்டுமே இருக்குமே தவிர வாழ்த்தும் பொதுக்குழுவாக இருக்காது. அதிமுகவில் இன்றும் பட்டியலினத்தை சேர்ந்தவரே சபாநாயகராக உள்ளார். அதிமுகவை பொறுத்தவரை சமத்துவம் இருக்கும். திமுக ஆட்சியில் சத்யவாணி முத்து காலம் முதல் பட்டியலின மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்” என்றார்.

இதையும் படிங்க: டிஜிட்டல் தள குற்றங்களைத் தடுக்க சைபர் கிரைம் பிரிவு - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.