ETV Bharat / state

மதுரையில் கணவன், மனைவி வெட்டிக் கொலை - போலீசார் விசாரணை

author img

By

Published : May 18, 2020, 10:02 AM IST

மதுரை: ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன், மனைவி வெட்டிக் கொலை
கணவன், மனைவி வெட்டிக் கொலை

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆயம்மாள். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்பவருக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிய நிலையில் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆயம்மாளுக்கு அதேபகுதியைச் சேர்ந்த அன்புநாதன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று இருவரும் திருவாதவூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் தெற்குத் தெரு திரும்பிக் கொண்டிருக்கும்போது, ஆண்டிப்பட்டி விலக்கில் உள்ள நல்லான்பெத்தான் கண்மாய் சாலையில் வரும்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வழி மறித்து கழுத்து, கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி படுகொலை செய்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து அவ்வழியே வந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையிலான காவல் துறையினர், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி கைரேகை மற்றும் தடயவியல் துறையினர் உதவியோடு விசாரணை நடத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட ஆயம்மாள், திமுக ஒன்றிய கவுன்சிலர் தமிழ்மாறனின் உடன்பிறந்த தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெண் சிசுக்கொலை: போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆயம்மாள். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்பவருக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிய நிலையில் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆயம்மாளுக்கு அதேபகுதியைச் சேர்ந்த அன்புநாதன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று இருவரும் திருவாதவூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் தெற்குத் தெரு திரும்பிக் கொண்டிருக்கும்போது, ஆண்டிப்பட்டி விலக்கில் உள்ள நல்லான்பெத்தான் கண்மாய் சாலையில் வரும்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வழி மறித்து கழுத்து, கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி படுகொலை செய்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து அவ்வழியே வந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையிலான காவல் துறையினர், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி கைரேகை மற்றும் தடயவியல் துறையினர் உதவியோடு விசாரணை நடத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட ஆயம்மாள், திமுக ஒன்றிய கவுன்சிலர் தமிழ்மாறனின் உடன்பிறந்த தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெண் சிசுக்கொலை: போலீசாரின் அதிரடி நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.