ETV Bharat / state

ஆதீனமட நிலங்கள் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறை இணை ஆணையருக்கு நோட்டீஸ்! - நீதிமன்றம்

மதுரை : ஆதீன மடத்திற்கு தானமாக வழங்கப்பட்ட பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது சம்பந்தமான மனு மீதான விசாரணையில் அறநிலையத்துறை இணை ஆணையர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் மதுரை கிளை
author img

By

Published : Sep 21, 2019, 9:44 AM IST

மதுரை ஆதீன மட மேலாளர், ஆதீன மேலாளர் கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குச மாரவர்மனால் மதுரை ஆதீன மடத்திற்கு பல ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலங்கள் தற்போது பலர் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், ஆதீன மடத்திற்கு எந்த வருவாயும் இல்லை.

உயர்நீதிமன்றம் மதுரை கிளை
சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

எனவே, ஆக்கிரமிப்பு செய்தவர்களை வெளியேற்றி மடத்திற்குச் சொந்தமான நிலத்தை ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி அறநிலையத் துறை இணை ஆணையரிடம் மனு அளித்தோம். சம்பந்தப்பட்ட நிலத்தை 15 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் யாரும் காலி செய்யவில்லை. அதே நேரம் அறநிலையத் துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, நீதிமன்றம் தலையிட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி சம்பந்தப்பட்ட நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம். கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை தரப்பில் கூறுகையில், ஆதீன மடத்தினரின் மனுவில் சில விBரங்கள் இல்லை. எனவே, அவற்றை சரி செய்து தருமாறு திரும்ப அளித்துள்ளோம் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மனுதாரர் தரப்பில் தங்களது கோரிக்கை தொடர்பாக இரண்டு வாரத்தில் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை அறநிலையத் துறை இணை ஆணையர் இரண்டு மாதத்தில் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

மதுரை ஆதீன மட மேலாளர், ஆதீன மேலாளர் கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குச மாரவர்மனால் மதுரை ஆதீன மடத்திற்கு பல ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலங்கள் தற்போது பலர் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், ஆதீன மடத்திற்கு எந்த வருவாயும் இல்லை.

உயர்நீதிமன்றம் மதுரை கிளை
சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

எனவே, ஆக்கிரமிப்பு செய்தவர்களை வெளியேற்றி மடத்திற்குச் சொந்தமான நிலத்தை ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி அறநிலையத் துறை இணை ஆணையரிடம் மனு அளித்தோம். சம்பந்தப்பட்ட நிலத்தை 15 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் யாரும் காலி செய்யவில்லை. அதே நேரம் அறநிலையத் துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, நீதிமன்றம் தலையிட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி சம்பந்தப்பட்ட நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம். கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை தரப்பில் கூறுகையில், ஆதீன மடத்தினரின் மனுவில் சில விBரங்கள் இல்லை. எனவே, அவற்றை சரி செய்து தருமாறு திரும்ப அளித்துள்ளோம் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மனுதாரர் தரப்பில் தங்களது கோரிக்கை தொடர்பாக இரண்டு வாரத்தில் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை அறநிலையத் துறை இணை ஆணையர் இரண்டு மாதத்தில் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Intro:மதுரை ஆதீன மட நிலங்கள் ஆக்கிரமிப்பு வழக்கில் அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நோட்டீஸ்

மதுரை ஆதீன மடத்திற்கு தானமாக வழங்கப்பட்ட. பல. ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தால் , ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட கோரிய மனு மீதான விசாரணையில், கோரிக்கை தொடர்பாக மனுதாரர், 2 வாரத்தில் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை அறநிலையத்துறை இணை ஆணையர் 2 மாதத்தில் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு ...
Body:மதுரை ஆதீன மட நிலங்கள் ஆக்கிரமிப்பு வழக்கில் அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நோட்டீஸ்

மதுரை ஆதீன மடத்திற்கு தானமாக வழங்கப்பட்ட. பல. ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தால் , ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட கோரிய மனு மீதான விசாரணையில், கோரிக்கை தொடர்பாக மனுதாரர், 2 வாரத்தில் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை அறநிலையத்துறை இணை ஆணையர் 2 மாதத்தில் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு ...

மதுரை ஆதீன மட மேலாளர் , ஆதின மேலாளர் கார்த்திகேயன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:- மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குச மாரவர்மனால் மதுரை ஆதீன மடத்திற்கு பல ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலங்கள் தற்போது பலர் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனால், ஆதின மடத்திற்கு எந்த வருவாயும் இல்லை. எனவே, இவர்கள் ஆக்கிரமித்துள்ளதால் அவர்களை அகற்றி, மடத்திற்கு சொந்தமான நிலத்தை ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு அளித்தோம்.
சம்பந்தப்பட்ட நிலத்தை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் யாரும் காலி செய்யவில்லை. அதே நேரம் அறநிலையத்துறையினரும் எந்த நடவடிக்ைகயும் எடுக்க வில்லை.
எனவே, நீதிமன்றம் தலையிட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட. ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, சம்பந்தப்பட்ட நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


 இந்த மனு  நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை தரப்பில் கூறுகையில், ஆதீன மடத்தினரின் மனுவில் சில விபரங்கள் இல்லை. எனவே, அவற்றை சரி செய்து தருமாறு திரும்ப  அளித்துள்ளோம், என. கூறப்பட்டது.இதையடுத்து நீதிபதி , மனுதாரர் தரப்பில் தங்களது கோரிக்கை தொடர்பாக 2 வாரத்தில் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை அறநிலையத்துறை இணை ஆணையர் 2 மாதத்தில் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.