ETV Bharat / state

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பொதுக்கூட்டங்களுக்கு டிஜிபி அனுமதி வழங்கக் கூடாது -உயர் நீதிமன்றம் - உயர் நீதிமன்றம்

மதுரை: தேர்தல் முடியும் வரை நகர்ப்புறங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Mar 24, 2019, 9:41 AM IST

தூத்துக்குடியைச் சேர்ந்த நாராயணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்குஒன்றைத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயில் பிரசித்திப்பெற்றது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். விழா நாட்கள்தவிரபிற நாட்களில் பக்தர்கள் கோயில் அருகே வரைவாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி ஆகிய வீதிகள்மூலமாகக்கோயிலைச்சென்றடைய இயலும். இந்த வீதிகளில் ஏராளமான மக்கள் குடியிருந்துவருகின்றனர். ஆகையால் பொதுவாகவே இந்த தெருக்கள் எப்போதும் மக்கள் நெருக்கம் மிகுந்தபகுதியாகக்காணப்படுகிறது. இந்த தெருக்களைத்தவிரகோயிலுக்குசெல்ல வேறுவழிகளும் இல்லை.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தப் பகுதிகளில் அரசியல் கட்சியினரின் பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுவருகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தெருக்களை ஆக்கிரமித்து பெரிய மேடை அமைப்பது, ஃபிளக்ஸ்போர்டுகள், பேனர்கள் வைப்பது போன்ற செயல்களால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அவசரக்காலங்களில்ஆம்புலன்ஸ்கூட செல்லமுடியாத வகையில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், பக்தர்களைஏற்றிச் செல்லும் பேருந்துகளும் அந்த வழிகளில் பயணிக்க இயலாத நிலை உருவாகிறது. இதனால், மூன்று கி.மீ., தூரம் வயதான பக்தர்கள் உள்பட அனைவரும் நடந்தே செல்ல வேண்டிய நிலை உருவாகிறது.

பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் அரசியல்கட்சியினர்பொதுக்கூட்டம் நடத்த வேறு இடங்கள் இருப்பினும், அவற்றை அவர்கள் பெரும்பாலும் கருத்தில் கொள்வதில்லை.

தேர்தல் தொடங்கவுள்ள நிலையில்இந்த நிலை தொடர்கதையாக மாறிவிடும். இதுதொடர்பாக நடவடிக்கைக் கோரி மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே திருச்செந்தூரின் கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதிகளில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள்நடத்தத்தடை விதிக்க வேண்டும்"எனகூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, இந்த வழக்கில் தமிழக உள்துறைச் செயலர், காவல்துறை காவல் தலைமை இயக்குநர் ஆகியோரைவழக்கில் தாமாக முன்வந்துஎதிர் மனுதாரராகச்சேர்த்தனர்.

தொடர்ந்து, தேர்தல் முடியும் வரைநகர்ப்புறங்களில் பொதுமக்களுக்குஇடையூறுஏற்படுத்தும் விதமாக அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக்கூடாதுஎனகாவல்துறைதலைமை இயக்குநருக்குஉத்தரவிட்டனர்.

பொதுவான மைதானங்கள் மற்றும்புறநகர்ப்பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம்எனதெரிவித்தனர்.

இதுதொடர்பாகக்காவல்துறை தலைமை இயக்குநர், தமிழகஉள்துறைச்செயலர்ஆகியோர்பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டுவாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த நாராயணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்குஒன்றைத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயில் பிரசித்திப்பெற்றது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். விழா நாட்கள்தவிரபிற நாட்களில் பக்தர்கள் கோயில் அருகே வரைவாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி ஆகிய வீதிகள்மூலமாகக்கோயிலைச்சென்றடைய இயலும். இந்த வீதிகளில் ஏராளமான மக்கள் குடியிருந்துவருகின்றனர். ஆகையால் பொதுவாகவே இந்த தெருக்கள் எப்போதும் மக்கள் நெருக்கம் மிகுந்தபகுதியாகக்காணப்படுகிறது. இந்த தெருக்களைத்தவிரகோயிலுக்குசெல்ல வேறுவழிகளும் இல்லை.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தப் பகுதிகளில் அரசியல் கட்சியினரின் பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுவருகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தெருக்களை ஆக்கிரமித்து பெரிய மேடை அமைப்பது, ஃபிளக்ஸ்போர்டுகள், பேனர்கள் வைப்பது போன்ற செயல்களால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அவசரக்காலங்களில்ஆம்புலன்ஸ்கூட செல்லமுடியாத வகையில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், பக்தர்களைஏற்றிச் செல்லும் பேருந்துகளும் அந்த வழிகளில் பயணிக்க இயலாத நிலை உருவாகிறது. இதனால், மூன்று கி.மீ., தூரம் வயதான பக்தர்கள் உள்பட அனைவரும் நடந்தே செல்ல வேண்டிய நிலை உருவாகிறது.

பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் அரசியல்கட்சியினர்பொதுக்கூட்டம் நடத்த வேறு இடங்கள் இருப்பினும், அவற்றை அவர்கள் பெரும்பாலும் கருத்தில் கொள்வதில்லை.

தேர்தல் தொடங்கவுள்ள நிலையில்இந்த நிலை தொடர்கதையாக மாறிவிடும். இதுதொடர்பாக நடவடிக்கைக் கோரி மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே திருச்செந்தூரின் கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதிகளில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள்நடத்தத்தடை விதிக்க வேண்டும்"எனகூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, இந்த வழக்கில் தமிழக உள்துறைச் செயலர், காவல்துறை காவல் தலைமை இயக்குநர் ஆகியோரைவழக்கில் தாமாக முன்வந்துஎதிர் மனுதாரராகச்சேர்த்தனர்.

தொடர்ந்து, தேர்தல் முடியும் வரைநகர்ப்புறங்களில் பொதுமக்களுக்குஇடையூறுஏற்படுத்தும் விதமாக அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக்கூடாதுஎனகாவல்துறைதலைமை இயக்குநருக்குஉத்தரவிட்டனர்.

பொதுவான மைதானங்கள் மற்றும்புறநகர்ப்பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம்எனதெரிவித்தனர்.

இதுதொடர்பாகக்காவல்துறை தலைமை இயக்குநர், தமிழகஉள்துறைச்செயலர்ஆகியோர்பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டுவாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Intro:Body:

Hc on election campaign


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.