ETV Bharat / state

சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையை  தாக்கல்செய்ய உத்தரவு

author img

By

Published : Sep 28, 2020, 10:51 PM IST

மதுரை: சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை  தாக்கல்செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள காவலர் முருகன், தாமஸ், பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் பிணை வழங்கக்கோரி இரண்டாவது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது காவலர்கள் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், சம்பவம் நடந்த அன்று காவல் நிலையத்தில் இரவு முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்று சொல்லக்கூடிய ஐந்து நபர்கள் உள்ளிருந்து உள்ளனர்.

இதில் காவலர் முருகன் தனது வாக்குமூலத்தில், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்தான் தந்தை, மகனை தாக்கியதாகத் தெரிவித்துள்ள நிலையில், சிபிஐ அலுவலர்கள் சம்பந்தப்பட்டவர்களை இதுவரை விசாரிக்கவும் இல்லை குற்றப்பத்திரிகையில் அவர்கள் குறித்து எதுவும் சேர்க்கவும் இல்லை.

எனவே இதில் உள்நோக்கம் உள்ளது. பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நபர்களையும் விசாரணைக்குள்படுத்த வேண்டும்" என்று வாதிட்டார். சிபிஐ தரப்பில், இவர்களுக்குப் பிணை வழங்க கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, "தற்போதுதான் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணையை தொடங்க உள்ளது. தற்போது இவர்களுக்குப் பிணை வழங்கினால் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளது" என்றார்.

மேலும் இந்த வழக்கின் முக்கியமாக கருதக்கூடிய பெண் காவலர்கள் இருவருடைய சிபிஐ தரப்பு சாட்சியங்கள் நீதிமன்றத்திற்கு தேவை. எனவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்செய்ய வேண்டும் என சிபிஐ-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேபோல் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி சிறையில் உள்ள ஒன்பது காவலர்களுக்கும் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள காவலர் முருகன், தாமஸ், பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் பிணை வழங்கக்கோரி இரண்டாவது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது காவலர்கள் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், சம்பவம் நடந்த அன்று காவல் நிலையத்தில் இரவு முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்று சொல்லக்கூடிய ஐந்து நபர்கள் உள்ளிருந்து உள்ளனர்.

இதில் காவலர் முருகன் தனது வாக்குமூலத்தில், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்தான் தந்தை, மகனை தாக்கியதாகத் தெரிவித்துள்ள நிலையில், சிபிஐ அலுவலர்கள் சம்பந்தப்பட்டவர்களை இதுவரை விசாரிக்கவும் இல்லை குற்றப்பத்திரிகையில் அவர்கள் குறித்து எதுவும் சேர்க்கவும் இல்லை.

எனவே இதில் உள்நோக்கம் உள்ளது. பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நபர்களையும் விசாரணைக்குள்படுத்த வேண்டும்" என்று வாதிட்டார். சிபிஐ தரப்பில், இவர்களுக்குப் பிணை வழங்க கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, "தற்போதுதான் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணையை தொடங்க உள்ளது. தற்போது இவர்களுக்குப் பிணை வழங்கினால் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளது" என்றார்.

மேலும் இந்த வழக்கின் முக்கியமாக கருதக்கூடிய பெண் காவலர்கள் இருவருடைய சிபிஐ தரப்பு சாட்சியங்கள் நீதிமன்றத்திற்கு தேவை. எனவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்செய்ய வேண்டும் என சிபிஐ-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேபோல் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி சிறையில் உள்ள ஒன்பது காவலர்களுக்கும் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.