ETV Bharat / state

போலி வீடியோ விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டமா? - ஆளுநர் மாளிகை விளக்கம்

author img

By

Published : May 11, 2023, 7:12 PM IST

Updated : May 13, 2023, 12:27 PM IST

தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த மணீஷ் காஷ்யப் என்பவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஓராண்டு சிறையில் அடைக்க என்எஸ்ஏ(National Security Agency) பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதாக வெளியான தகவலுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

போலி வீடியோ பரப்பிய மணீஷ் காஸ்யப்பை தேசிய பாதுகாப்புச் சட்டப்படி சிறையில் அடைக்க ஆளுநர் ஒப்புதல்
போலி வீடியோ பரப்பிய மணீஷ் காஸ்யப்பை தேசிய பாதுகாப்புச் சட்டப்படி சிறையில் அடைக்க ஆளுநர் ஒப்புதல்

மதுரை: கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த மணீஷ் காஷ்யப் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற சித்தரிப்பு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியில் இது கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டவை என தமிழ்நாட்டு காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, இதனை பரப்புவோர் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அடையும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இதுகுறித்து போலி வீடியோக்களைப் பரப்பிய 4 பேர் மீது தமிழ்நாட்டு காவல் துறை அதிரடியாக வழக்குகளைப் பதிவு செய்தது. இதுபோன்ற போலி வீடியோக்களைப் பகிர்ந்த மணீஷ் காஷ்யப் (32) என்ற யூ டியூபர் மீது மதுரை மாவட்டம், பெருங்குடியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.

இதன் அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மணீஷ் காஷ்யப் (32) என்ற யூ டியூபர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மணீஷ் காஷ்யப்பை தமிழ்நாட்டு காவல் துறை கைது செய்து தமிழ்நாடு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 12 மாதங்கள் மணீஷ் காஷ்யப்பை சிறையிலடைக்க ஒப்புதல் அளித்ததாக கடந்த 11ம் தேதி தகவல் பரவியது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை மே 12ம் தேதி விளக்கம் அளித்துள்ளது. ஆளுநர் இத்தகைய உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை எனவும், இது குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'கிரவுண்ட்க்கு வெளியே உட்கார்ந்து நிறைய கமெண்ட் அடிக்கலாம்... ஆனால்' - KGF ஸ்டைலில் டிஆர்பி ராஜா பேட்டி

மதுரை: கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த மணீஷ் காஷ்யப் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற சித்தரிப்பு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியில் இது கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டவை என தமிழ்நாட்டு காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, இதனை பரப்புவோர் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அடையும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இதுகுறித்து போலி வீடியோக்களைப் பரப்பிய 4 பேர் மீது தமிழ்நாட்டு காவல் துறை அதிரடியாக வழக்குகளைப் பதிவு செய்தது. இதுபோன்ற போலி வீடியோக்களைப் பகிர்ந்த மணீஷ் காஷ்யப் (32) என்ற யூ டியூபர் மீது மதுரை மாவட்டம், பெருங்குடியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.

இதன் அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மணீஷ் காஷ்யப் (32) என்ற யூ டியூபர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மணீஷ் காஷ்யப்பை தமிழ்நாட்டு காவல் துறை கைது செய்து தமிழ்நாடு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 12 மாதங்கள் மணீஷ் காஷ்யப்பை சிறையிலடைக்க ஒப்புதல் அளித்ததாக கடந்த 11ம் தேதி தகவல் பரவியது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை மே 12ம் தேதி விளக்கம் அளித்துள்ளது. ஆளுநர் இத்தகைய உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை எனவும், இது குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'கிரவுண்ட்க்கு வெளியே உட்கார்ந்து நிறைய கமெண்ட் அடிக்கலாம்... ஆனால்' - KGF ஸ்டைலில் டிஆர்பி ராஜா பேட்டி

Last Updated : May 13, 2023, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.