ETV Bharat / state

மதுரையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் - தங்க கட்டிகள் கடத்திவருவதாக தகவல்

மதுரை: இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

ஜீன்ஸ் பேண்டில் மறைத்துவைத்திருந்த தங்க கட்டிகள்
author img

By

Published : Oct 2, 2019, 7:59 AM IST

மதுரை விமான நிலையத்திற்கு தங்கக் கட்டிகள் கடத்திவருவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணிகளிடம் அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், தனது ஜீன்ஸ் பேண்டில் சுமார் 706.31 கிராம் எடை கொண்ட 27 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.

ஜீன்ஸ் பேண்டில் மறைத்துவைத்திருந்த தங்க கட்டிகள்

இதனையடுத்து, சங்கரிடமிருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்!

மதுரை விமான நிலையத்திற்கு தங்கக் கட்டிகள் கடத்திவருவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணிகளிடம் அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், தனது ஜீன்ஸ் பேண்டில் சுமார் 706.31 கிராம் எடை கொண்ட 27 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.

ஜீன்ஸ் பேண்டில் மறைத்துவைத்திருந்த தங்க கட்டிகள்

இதனையடுத்து, சங்கரிடமிருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்!

Intro:*மதுரைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 27 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்*Body:*மதுரைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 27 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்*


*இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணியிடம் சோதனை செய்தபோது ஜீன்ஸ் பேன்டில் மறைந்து வைத்திருந்த களிமண்ணில் கடத்தி வரப்பட்ட ( 706.31 கிராம்) ரூ 27 லட்சத்து 31 ஆயிரம் கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.*

இலங்கையிலிருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லையன்ஸ் விமானத்தில்
வந்த பயணியிடம் இருந்து 27 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள 706.31 கிராம் எடையுள்ள ஜீன்ஸ் பேன்டில் மறைத்து வைத்திருந்த களிமண்ணில் இருந்த தங்க துகள்களை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர்.

மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய சுங்க இலகா நுண்ணறிவு பிரிவினர் உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இலங்கையில் இருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மதுரை மாவட்டத்தை சுப்பிரமன் என்பவரது மகன் சங்கர்
என்பவரது உடமைகளை சோதனை செய்த போது ஜீன்ஸ் பேண்டில் மறைத்துவைத்திருந்த களிமண் பாக்கெட்டில் தங்கத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டது இது சுமார் 706.31 கிராம் எடை கொண்ட ரூ.27 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்து தங்க துகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றி சங்கரை விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.