ETV Bharat / state

பண மோசடி வழக்கை ரத்து செய்ய கோரிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மனு தள்ளுபடி!

author img

By

Published : Feb 18, 2021, 6:32 AM IST

மதுரை: பண மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai high court bench
madurai high court bench

சென்னையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து ரூ.3 கோடி மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்த ராமநாதபுரம் காவல்துறை, ரூ.300 கோடி வரை மோசடி செய்ததாக பலர் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் என் பெயரும் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் என்னை விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி பஜார் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி எனது தரப்பில் விளக்கமளித்தேன். 'மகாமுனி' படத்திற்கான திரையரங்கு உரிமத்திற்காகவே ரூ.6.92 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.2 கோடி முன்பணமாக பெறப்பட்டு படத்திற்கான உரிமம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் எந்த ஒரு பண மோசடியும் நடைபெறவில்லை. எனவே இந்த பண மோசடிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் என்னை விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வழக்கில் இருந்து தவறுதலாக சேர்க்கப்பட்ட என்னுடைய பெயரை நீக்கம் செய்ய வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமலதா அமர்வு, ஞானவேல்ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் உறவினரின் 'செம திமிரு' இசை வெளியீடு!

சென்னையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து ரூ.3 கோடி மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்த ராமநாதபுரம் காவல்துறை, ரூ.300 கோடி வரை மோசடி செய்ததாக பலர் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் என் பெயரும் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் என்னை விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி பஜார் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி எனது தரப்பில் விளக்கமளித்தேன். 'மகாமுனி' படத்திற்கான திரையரங்கு உரிமத்திற்காகவே ரூ.6.92 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.2 கோடி முன்பணமாக பெறப்பட்டு படத்திற்கான உரிமம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் எந்த ஒரு பண மோசடியும் நடைபெறவில்லை. எனவே இந்த பண மோசடிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் என்னை விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வழக்கில் இருந்து தவறுதலாக சேர்க்கப்பட்ட என்னுடைய பெயரை நீக்கம் செய்ய வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமலதா அமர்வு, ஞானவேல்ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் உறவினரின் 'செம திமிரு' இசை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.