ETV Bharat / state

மாயமான மீனவர்களை மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு! - காணாமல் போன மீனவர்கள்

மதுரை: மீன்பிடிக்கச் சென்று படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவர்கள் மூவரை மீட்கக்கோரிய வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை
author img

By

Published : Jun 19, 2020, 4:26 PM IST

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகாய டெனிஸ் ரீஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "ஜூன் 13ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து 800 படகுகளில் சுமார் 3000 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில் ஆஸ்டின் சுசீந்தர், மலர்மன்னன், ரெசின் பாஸ்கர், இயேசு ஆகியோர் கரை திரும்பவில்லை. அதில் இயேசு மட்டும் கோட்டைப்பட்டினம் பகுதியில் கரை ஒதுங்கினார். கடலில் சென்றபோது படகு கவிழ்ந்ததில் 4 பேரும் நீரில் தத்தளித்ததாகவும், ஐஸ் பெட்டி ஒன்றை பிடித்து இயேசு கரை ஒதுங்கியதாகவும் கூறினார்.

போர் விமானம் மூலம் மாயமான 3 மீனவர்களையும் கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தற்போது வரை அது போன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. ஆகவே, மீன்பிடிக்கச் சென்று கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான 3 மீனவர்களையும் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறினார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாயமான மீனவர்களை தேடும் பணியில் அலுவலர்கள் உள்ளனர் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகாய டெனிஸ் ரீஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "ஜூன் 13ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து 800 படகுகளில் சுமார் 3000 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில் ஆஸ்டின் சுசீந்தர், மலர்மன்னன், ரெசின் பாஸ்கர், இயேசு ஆகியோர் கரை திரும்பவில்லை. அதில் இயேசு மட்டும் கோட்டைப்பட்டினம் பகுதியில் கரை ஒதுங்கினார். கடலில் சென்றபோது படகு கவிழ்ந்ததில் 4 பேரும் நீரில் தத்தளித்ததாகவும், ஐஸ் பெட்டி ஒன்றை பிடித்து இயேசு கரை ஒதுங்கியதாகவும் கூறினார்.

போர் விமானம் மூலம் மாயமான 3 மீனவர்களையும் கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தற்போது வரை அது போன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. ஆகவே, மீன்பிடிக்கச் சென்று கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான 3 மீனவர்களையும் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறினார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாயமான மீனவர்களை தேடும் பணியில் அலுவலர்கள் உள்ளனர் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.