ETV Bharat / state

போலி வணிகவரித்துறை அலுவலர்கள் கைது!

author img

By

Published : Jul 25, 2020, 5:13 PM IST

மதுரை: வணிக வரித்துறை அலுவலர்கள் என்று கூறி வசூல் வேட்டை நடத்த முயன்ற மூன்று நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

போலி வணிகவரித்துறையினர்
போலி வணிகவரித்துறையினர்

மதுரை மாவட்டம் யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ ராஜா (55). 2019ஆம் ஆண்டு முதல் இவர் ஆண்டாள் கொட்டாரம் பகுதியில் நெய் உள்ளிட்ட பொருள்களை அனைத்து கடைகளுக்கும் நேரடியாக சென்று விற்பனை செய்யும் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

இன்று(ஜூலை 25) அவரது கடைக்கு வந்த மூன்று நபர்கள் தாங்கள் வருமான வரித்துறை அலுவலர்கள் என்று கூறி, தங்களது அடையாள அட்டையை காண்பித்து, கேசவ ராஜாவிடம் பணம் கேட்டுள்ளனர்.

அதற்கு கேசவ ராஜா முறையாக வரி கட்டி தொழில் நடத்தி வருகிறேன், ஆகையால் பணம் தரமுடியாது என்று வந்திருந்த நபர்களிடம் கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் மீது சந்தேகம் வரவே அவர்களை அமர வைத்துவிட்டு கேசவ ராஜா கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளார்.
உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அதில் இருவர் வருமான வரித்துறையில் கண்காணிப்பாளராகவும் உதவியாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றது தெரியவந்தது. அவர்களுக்கு உதவியாக சந்தானம் என்பவரும் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வருமானவரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முத்துக்குமார் (60), அசோக் குமார் (62) மற்றும் சந்தானம் ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மதுரையில் வருமான வரித்துறை என்று கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ ராஜா (55). 2019ஆம் ஆண்டு முதல் இவர் ஆண்டாள் கொட்டாரம் பகுதியில் நெய் உள்ளிட்ட பொருள்களை அனைத்து கடைகளுக்கும் நேரடியாக சென்று விற்பனை செய்யும் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

இன்று(ஜூலை 25) அவரது கடைக்கு வந்த மூன்று நபர்கள் தாங்கள் வருமான வரித்துறை அலுவலர்கள் என்று கூறி, தங்களது அடையாள அட்டையை காண்பித்து, கேசவ ராஜாவிடம் பணம் கேட்டுள்ளனர்.

அதற்கு கேசவ ராஜா முறையாக வரி கட்டி தொழில் நடத்தி வருகிறேன், ஆகையால் பணம் தரமுடியாது என்று வந்திருந்த நபர்களிடம் கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் மீது சந்தேகம் வரவே அவர்களை அமர வைத்துவிட்டு கேசவ ராஜா கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளார்.
உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அதில் இருவர் வருமான வரித்துறையில் கண்காணிப்பாளராகவும் உதவியாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றது தெரியவந்தது. அவர்களுக்கு உதவியாக சந்தானம் என்பவரும் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வருமானவரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முத்துக்குமார் (60), அசோக் குமார் (62) மற்றும் சந்தானம் ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மதுரையில் வருமான வரித்துறை என்று கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடையின் பூட்டை உடைத்து 17 செல்போன்கள் திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.