ETV Bharat / state

'சரியான தலைமை இல்லாவிட்டால் வருங்காலம் இருண்ட காலமாகிவிடும்' - EPS-OPS

மதுரை: அதிமுகவில் ஆளுமையுடைய தலைமை இல்லாவிட்டால் வருங்காலம் இருண்ட காலமாக மாறிவிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்வரன் தெரிவித்தார்.

EX ADMK MP
author img

By

Published : Jun 11, 2019, 12:09 PM IST

மதுரையில் அண்ணா திராவிட கழகத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜேஷ்வரன் செய்தியாளர்களை நேற்று (ஜூன் 10) சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணா திராவிட கழகம் ஆனது தேசிய தேர்தல் ஆணையத்தின் பதிவு பெற்ற கட்சியாக கடந்த வாரம் அங்கீகாரம் பெற்றுள்ளது. இன்றைய சூழ்நிலையில் அண்ணா திராவிட கழகமானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் கொண்ட கட்சியாக உள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்வரன்

நடந்து முடிந்த தேர்தலில் டிடிவி தினகரனின் சாயம் வெளுத்துவிட்டது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாழ்க்கை இன்றைக்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது. தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் கதை என்ன ஆனது எனத் தெரியவில்லை.

அதிமுகவுக்கும் மக்கள் ஒரு நல்ல அறிவுரையை வழங்கியிருக்கிறார்கள். அது ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதாகும். அதிமுகவுக்கு தலைமை குறித்து ராஜன் செல்லப்பா கூறிய கருத்துக்கு நான் வரவேற்பு அளிக்கிறேன்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக செயல்பட்டு நல்ல தலைமையை தேர்ந்தெடுத்து உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற வேண்டும். வலிமையான தலைமை இல்லாத சூழல் உருவாகும்போது நிச்சயமாக அழிவை சந்திக்க நேரிடும்.

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி என்று ஒன்று கிடையாது. இரு அணிகள் மட்டுமே. தமிழ்நாட்டை என்றும் ஆளும் கட்சியின் கூட்டணி ஆரோக்கியமாக இருப்பதைப் பொறுத்துதான் தேர்தலில் வெற்றி நிர்ணயிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரையில் அண்ணா திராவிட கழகத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜேஷ்வரன் செய்தியாளர்களை நேற்று (ஜூன் 10) சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணா திராவிட கழகம் ஆனது தேசிய தேர்தல் ஆணையத்தின் பதிவு பெற்ற கட்சியாக கடந்த வாரம் அங்கீகாரம் பெற்றுள்ளது. இன்றைய சூழ்நிலையில் அண்ணா திராவிட கழகமானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் கொண்ட கட்சியாக உள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்வரன்

நடந்து முடிந்த தேர்தலில் டிடிவி தினகரனின் சாயம் வெளுத்துவிட்டது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாழ்க்கை இன்றைக்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது. தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் கதை என்ன ஆனது எனத் தெரியவில்லை.

அதிமுகவுக்கும் மக்கள் ஒரு நல்ல அறிவுரையை வழங்கியிருக்கிறார்கள். அது ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதாகும். அதிமுகவுக்கு தலைமை குறித்து ராஜன் செல்லப்பா கூறிய கருத்துக்கு நான் வரவேற்பு அளிக்கிறேன்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக செயல்பட்டு நல்ல தலைமையை தேர்ந்தெடுத்து உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற வேண்டும். வலிமையான தலைமை இல்லாத சூழல் உருவாகும்போது நிச்சயமாக அழிவை சந்திக்க நேரிடும்.

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி என்று ஒன்று கிடையாது. இரு அணிகள் மட்டுமே. தமிழ்நாட்டை என்றும் ஆளும் கட்சியின் கூட்டணி ஆரோக்கியமாக இருப்பதைப் பொறுத்துதான் தேர்தலில் வெற்றி நிர்ணயிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
10.06.2019

*அதிமுக ஆளுமையுடைய தலைமை இல்லாவிட்டால் வருங் காலம் இருண்ட காலமாக மாறி விடும் : முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்*

அண்ணா திராவிட கழகத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்வரன் செய்தியாளர்களை சந்தித்து போது கூறியது,

அண்ணா திராவிட கழகத்தினுடைய மாநில அமைப்பு செயலாளர் என்ற முறையில் இரண்டாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா திராவிட கழகம் ஆனது தேசிய தேர்தல் ஆணையத்தின் பதிவு பெற்ற கட்சியாக கடந்த வாரம் அங்கீகாரம் பெற்றுள்ளது அறிவிக்கப்பட்டது.

இன்றைய சூழ்நிலையில் அண்ணா திராவிட கழகமானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் கொண்ட கட்சியாக உள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் டிடிவி இன் சாயம் வெளுத்து விட்டது மக்களிடையே தொடர்ந்து பொய்களை கூறி வந்த நிலையில் அவைகள் அனைத்துமே பொய்கள் என்று நிரூபணமானது.

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிந்து பார்த்த விளையாட்டுக்கள் அனைத்தும் மக்களிடையே இனிமேல் அவரது பொய்யான சொற்கள் எடுபட போவதில்லை.

18 சட்டமன்ற உறுப்பினர்களின் வாழ்க்கை இன்றைய இன்றைக்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது முழு காரணம் டிடிவி தினகரன் அவர்களே. தங்கம் தமிழ்ச்செல்வன் இன்று எங்கு உள்ளார் என்பது கூட யாருக்கும் தெரியவில்லை.

வெற்றிவேலின் கதையும் என்ன ஆனது என்று தெரியவில்லை முடிவில் மக்கள் அவர்களுக்கு நல்ல பாடத்தை கற்பித்துள்ளனர் தொடர்ந்து மக்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதையும் உணர்த்தி உள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வறுமையான திறமையான இயக்கக்கூடிய தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

நோஞ்சான் குழந்தையாக ஏற்றுக்கொள்ளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் நல்ல தலைமை தற்போது இல்லை.

புதிய உள்ள நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக செயல்பட்டு நல்ல தலைமையை தேர்ந்தெடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற வேண்டும்.

சட்டமன்றத்தில் ஜெயலலிதா அவர்கள் கூறியது போன்று நூறாண்டு காலம் வாழ வேண்டிய கட்சி இதேபோன்று வலிமையான தலைமை இல்லாத சூழல் உருவாகும் ஆயின் நிச்சயமாக அழிவை சந்திக்க நேரிடும்.

தமிழகத்தில் என்றுமே மூன்றாவது அணி என்று ஒன்றுமே கிடையாது இரு அணிகள் மட்டுமே தமிழகத்தை என்றும் ஆளும் அவற்றுடன் கூட்டணியை ஆரோக்கியமானதே பொறுத்து தான் தேர்தலில் வெற்றி நிர்ணயிக்கப்படும் என்று கூறினார்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_06_10_PRESS MEET NEWS_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.