ETV Bharat / state

மதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

தமிழ்நாட்டில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வுமேற்கொண்டார்.

author img

By

Published : Feb 1, 2022, 3:27 PM IST

அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு
அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

மதுரை: கரோனா, ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரித்ததன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் தொற்றுப் பரவல் குறைந்துவருவதால், இன்று (பிப்ரவரி 1) முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டது.

இதையடுத்து மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. ஒத்தக்கடை அருகேயுள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வுமேற்கொண்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு
அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

வகுப்பறை கட்டடங்களின் உறுதித்தன்மை, கழிப்பறை வசதி, கிருமிநாசினி பயன்படுத்துதல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவைகள் குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவா, ஆசிரியர் மோசஸ் மங்கலராஜ் ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும் அப்பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு எப்போதும் செய்துதரும் என உறுதி அளித்தார்.

தமிழ்நாடு அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாவட்டம் முழுவழும் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.

அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு
அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

இதையும் படிங்க: கவுன்சிலர் வேட்பாளரான கல்லூரி மாணவி - வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சி

மதுரை: கரோனா, ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரித்ததன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் தொற்றுப் பரவல் குறைந்துவருவதால், இன்று (பிப்ரவரி 1) முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டது.

இதையடுத்து மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. ஒத்தக்கடை அருகேயுள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வுமேற்கொண்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு
அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

வகுப்பறை கட்டடங்களின் உறுதித்தன்மை, கழிப்பறை வசதி, கிருமிநாசினி பயன்படுத்துதல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவைகள் குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவா, ஆசிரியர் மோசஸ் மங்கலராஜ் ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும் அப்பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு எப்போதும் செய்துதரும் என உறுதி அளித்தார்.

தமிழ்நாடு அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாவட்டம் முழுவழும் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.

அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு
அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

இதையும் படிங்க: கவுன்சிலர் வேட்பாளரான கல்லூரி மாணவி - வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.