ETV Bharat / state

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

author img

By

Published : Mar 8, 2020, 9:37 AM IST

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம், சாலையோர தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

college-student-killed-in-two-wheeler-accident
college-student-killed-in-two-wheeler-accident

மதுரை திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரி தடுப்பு சுவரில், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அதே கல்லூரியைச் சேர்ந்த அர்பித் சிங் என்கிற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், அவருடன் வந்த சஞ்சு என்கிற மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பதும், விபத்தில் உயிரிழந்த அர்பித் சிங் என்பவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் விபத்தில் சிக்கிய சஞ்சு என்பவர் மேகாலயா மநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் பலி

மேலும், இருவரும் இன்று அவருடன் படித்துக் கொண்டிருந்த மோகித் என்பவரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அவனியபுரம் சென்றதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு சக்கர வாகனம் விபத்துகுள்ளாகி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடமும், கல்லூரி மாணவர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி கலவரம்: வாழ்க்கையை முடித்த வதந்தி.!

மதுரை திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரி தடுப்பு சுவரில், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அதே கல்லூரியைச் சேர்ந்த அர்பித் சிங் என்கிற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், அவருடன் வந்த சஞ்சு என்கிற மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பதும், விபத்தில் உயிரிழந்த அர்பித் சிங் என்பவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் விபத்தில் சிக்கிய சஞ்சு என்பவர் மேகாலயா மநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் பலி

மேலும், இருவரும் இன்று அவருடன் படித்துக் கொண்டிருந்த மோகித் என்பவரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அவனியபுரம் சென்றதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு சக்கர வாகனம் விபத்துகுள்ளாகி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடமும், கல்லூரி மாணவர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி கலவரம்: வாழ்க்கையை முடித்த வதந்தி.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.