ETV Bharat / state

முறைகேடாக வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணத்தை திரும்ப வழங்கக் கோரி வழக்கு!

author img

By

Published : Feb 11, 2021, 6:33 PM IST

முறைகேடாக வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தை திரும்ப வழங்கக் கோரி மதுரை மாநகராட்சிக்கு எதிராக தொடப்பட்ட வழக்கில், மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: போக்குவரத்து நெரிசலை குறைக்க மதுரை உத்தங்குடி முதல் கப்பலூர்வரை சுற்றுச்சாலைகள் அமைக்கப்பட்டன. இதற்காக உலக வங்கியிடமிருந்து கடன் பெறப்பட்டு இந்த சுற்றுச்சாலைகளை அமைக்கப்பட்டன. இந்த சுற்றுச்சாலைகளில் ஐந்து இடங்களில் சுங்கச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

இதில், கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை 15 ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்ய மதுரை மாநகராட்சிக்கு, அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. அனுமதி காலம் முடிந்தும் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டதால், சட்டவிரோதமாக சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது, எனவே சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற பல்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவைகளை விசாரணை செய்த தனி நீதிபதி, சுங்கக் கட்டண மையங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என 2016ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 5 சுங்கச்சாவடி மையங்களையும் உடனடியாக மாநகராட்சி அகற்றியது.

இந்நிலையில் அரசின் உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மாநகராட்சியால் வசூல் செய்யப்பட்ட சுங்கக் கட்டணம் ரூ.35 கோடி பணத்தை வாகன உரிமையாளரிடம் திரும்ப செலுத்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, கண்ணம்மாள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசின் அனுமதி இல்லாமலும் கால அவகாசம் முடிந்தும் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 35 கோடி ரூபாய் சட்டவிரோதமாக சுங்கச்சாவடிகள் மையத்தின் மூலம் கட்ணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. வசூல் செய்த பணத்தை மீண்டும் வாகன உரிமையாளரிடம் திரும்ப செலுத்த உத்தரவிட வேண்டும் . வசூல் செய்யப்பட்ட பணம் வேறு எந்த திட்டங்களுக்கும் செலவிடக் கூடாது. சுங்கக் கட்டணங்கள் சாலையின் மேம்பாட்டிற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. எனவே கட்டணத்தை திரும்ப செலுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.

மாநகராட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கூடுதலாக வசூல் செய்யப்பட்ட சுங்க கட்டணம் மாநகராட்சியின் பல்வேறு நலத் திட்டங்களுக்காக செலவு செய்யப்பட்டு விட்டது. இதற்கான அரசின் அனுமதியும் உள்ளது எனவே பணத்தை திரும்ப செலுத்த முடியாது எனத் தெரிவித்தார்.

இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வசூல் செய்யப்பட்ட பணத்தை மாநகராட்சி எந்த திட்டங்களுக்காக செலவுகள் செய்தது. அதற்கான அரசின் அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்யவும், மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கின் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சார்பு ஆய்வாளர்களை தேர்தல் நடைபெறும்போது வேறு மாவட்டத்திற்கு பணிமாற்ற தடை கோரிய வழக்கு

மதுரை: போக்குவரத்து நெரிசலை குறைக்க மதுரை உத்தங்குடி முதல் கப்பலூர்வரை சுற்றுச்சாலைகள் அமைக்கப்பட்டன. இதற்காக உலக வங்கியிடமிருந்து கடன் பெறப்பட்டு இந்த சுற்றுச்சாலைகளை அமைக்கப்பட்டன. இந்த சுற்றுச்சாலைகளில் ஐந்து இடங்களில் சுங்கச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

இதில், கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை 15 ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்ய மதுரை மாநகராட்சிக்கு, அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. அனுமதி காலம் முடிந்தும் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டதால், சட்டவிரோதமாக சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது, எனவே சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற பல்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவைகளை விசாரணை செய்த தனி நீதிபதி, சுங்கக் கட்டண மையங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என 2016ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 5 சுங்கச்சாவடி மையங்களையும் உடனடியாக மாநகராட்சி அகற்றியது.

இந்நிலையில் அரசின் உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மாநகராட்சியால் வசூல் செய்யப்பட்ட சுங்கக் கட்டணம் ரூ.35 கோடி பணத்தை வாகன உரிமையாளரிடம் திரும்ப செலுத்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, கண்ணம்மாள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசின் அனுமதி இல்லாமலும் கால அவகாசம் முடிந்தும் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 35 கோடி ரூபாய் சட்டவிரோதமாக சுங்கச்சாவடிகள் மையத்தின் மூலம் கட்ணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. வசூல் செய்த பணத்தை மீண்டும் வாகன உரிமையாளரிடம் திரும்ப செலுத்த உத்தரவிட வேண்டும் . வசூல் செய்யப்பட்ட பணம் வேறு எந்த திட்டங்களுக்கும் செலவிடக் கூடாது. சுங்கக் கட்டணங்கள் சாலையின் மேம்பாட்டிற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. எனவே கட்டணத்தை திரும்ப செலுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.

மாநகராட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கூடுதலாக வசூல் செய்யப்பட்ட சுங்க கட்டணம் மாநகராட்சியின் பல்வேறு நலத் திட்டங்களுக்காக செலவு செய்யப்பட்டு விட்டது. இதற்கான அரசின் அனுமதியும் உள்ளது எனவே பணத்தை திரும்ப செலுத்த முடியாது எனத் தெரிவித்தார்.

இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வசூல் செய்யப்பட்ட பணத்தை மாநகராட்சி எந்த திட்டங்களுக்காக செலவுகள் செய்தது. அதற்கான அரசின் அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்யவும், மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கின் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சார்பு ஆய்வாளர்களை தேர்தல் நடைபெறும்போது வேறு மாவட்டத்திற்கு பணிமாற்ற தடை கோரிய வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.