ETV Bharat / state

கி.பி. 16ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டெடுப்பு - கிபி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டெடுப்பு

மதுரை உவரி பெரிய கண்மாய் கலிங்கில் 500 ஆண்டுகள் பழமையான நீர்ப் பங்கீடு முறையை பறைசாற்றும் கலிங்கு கல்வெட்டு ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிபி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த  கலிங்கு கல்வெட்டு கண்டெடுப்பு
கிபி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டெடுப்பு
author img

By

Published : Jun 29, 2022, 5:44 PM IST

மதுரை: கள்ளிக்குடியை அடுத்த வில்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும்,‌ பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் அனந்த குமரன், தங்கப்பாண்டி, அஜய் ஆகியோர் உவரி பெரிய கண்மாயில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கலிங்கு பகுதியில் லிங்க வடிவ தனி தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த கல்வெட்டை மை படி எடுத்து, ஆய்வு செய்தபோது கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர்ப்பங்கீடு முறை கல்வெட்டு என்பதைக் கண்டறிந்தார்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டெடுப்பு

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியதாவது, "பண்டையத்தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். மழைநீரைச் சேமித்ததுடன், சேமித்த நீரைத் திறம்பட பயன்படுத்த ஆயிரக்கணக்கான நீர் நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிற கட்டுமானங்களை உருவாக்கினார்கள். நீர்ப்பங்கீடு முறை சங்க காலம் முதல் தொன்றுதொட்டு இன்றளவும் பின்பற்றி வருகிறோம்.

கலிங்கு என்றால் என்ன?: கலிங்கு என்பது கண்மாய், ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகளில் நீரை முறைப்படுத்தி வெளியேற்றுவதற்கு கற்களைக்கொண்டு அமைக்கப்படும் கட்டுமானம் கலிங்கல், கலிஞ்சு என்று அழைக்கப்படும். கலிங்குகளில் வரிசையாக குத்துக்கற்களை ஊன்றி உள் பகுதியில் ஒரே மாதிரியான இடைவெளி விட்டு பலகை, மணல் மூட்டைகளைக் கொண்டு சொருகப்படுவதால் கண்மாய் நிரம்பிய பிறகு மறுகால் பாயும் இடத்தில் கலிங்கு அமைந்திருக்கும். நீர் வெளியேறும் அளவு முறையும் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

கிபி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த  கலிங்கு கல்வெட்டு கண்டெடுப்பு
கிபி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டெடுப்பு
சில இடங்களில் கண்மாய் வரத்துக் கால்வாய் பகுதியில் கலிங்கு அமைந்திருப்பதால் அடுத்தடுத்து நீர் நிலைகளுக்கு நீரை திருப்பிவிட்டு பங்கீடு செய்வதற்கு ஏதுவாக அமைகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நீர்ப்பங்கீடு முறையை ஊராட்சி அமைப்புகளின் மூலம் உருவாக்கி மேலாண்மை செய்வதற்கு தனியாக கலிங்கு வாரியம் என்ற குழுவை ஏற்படுத்தி நிர்வாகம் செய்தார்கள்.

நீர் பாணிக்கர்: உவரி பெரிய கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கிழக்குப்பகுதியில் லிங்க வடிவம் கொண்ட தனி தூண் கல்லில் 5 அடி உயரம், 1 அடி அகலம், 6 வரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. இக்கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்தபோது முதல் இரண்டு வரிகள் முற்றிலும் தேய்மானம் ஏற்பட்டு சிதிலமடைந்து காணப்பட்டது.

'காணியம் நீர் அளித்த பாணிக்கர் செய்த' என்ற எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. உவரி பெரிய கண்மாயில் இருந்து நீர் நிரம்பிய பிறகு அருகே உள்ள தென்னமநல்லூர், புளியங்குளம் கண்மாய்க்கு நீரோடை வழியாக நீர் செல்லும். இவ்வூருக்கு நீர் பாணிக்கர் என்ற இனக்குழுவினரால் சரிபாதியாக நீர் பிரித்து கொடுக்கப்பட்டது என்பதை இக்கல்வெட்டு மூலம் அறியலாம்.

தற்போது கண்மாயிலிருந்து கலிங்கு வழியாக மறுகால் பாய்ந்தாலும் ஒரே மாதிரியான நீர் வெளியேறும் கட்டுமானம் அமைந்து இருப்பது மற்றொரு சிறப்பு" என்றார்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் கள ஆய்வில் கண்டுபிடிப்பு

மதுரை: கள்ளிக்குடியை அடுத்த வில்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும்,‌ பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் அனந்த குமரன், தங்கப்பாண்டி, அஜய் ஆகியோர் உவரி பெரிய கண்மாயில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கலிங்கு பகுதியில் லிங்க வடிவ தனி தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த கல்வெட்டை மை படி எடுத்து, ஆய்வு செய்தபோது கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர்ப்பங்கீடு முறை கல்வெட்டு என்பதைக் கண்டறிந்தார்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டெடுப்பு

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியதாவது, "பண்டையத்தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். மழைநீரைச் சேமித்ததுடன், சேமித்த நீரைத் திறம்பட பயன்படுத்த ஆயிரக்கணக்கான நீர் நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிற கட்டுமானங்களை உருவாக்கினார்கள். நீர்ப்பங்கீடு முறை சங்க காலம் முதல் தொன்றுதொட்டு இன்றளவும் பின்பற்றி வருகிறோம்.

கலிங்கு என்றால் என்ன?: கலிங்கு என்பது கண்மாய், ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகளில் நீரை முறைப்படுத்தி வெளியேற்றுவதற்கு கற்களைக்கொண்டு அமைக்கப்படும் கட்டுமானம் கலிங்கல், கலிஞ்சு என்று அழைக்கப்படும். கலிங்குகளில் வரிசையாக குத்துக்கற்களை ஊன்றி உள் பகுதியில் ஒரே மாதிரியான இடைவெளி விட்டு பலகை, மணல் மூட்டைகளைக் கொண்டு சொருகப்படுவதால் கண்மாய் நிரம்பிய பிறகு மறுகால் பாயும் இடத்தில் கலிங்கு அமைந்திருக்கும். நீர் வெளியேறும் அளவு முறையும் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

கிபி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த  கலிங்கு கல்வெட்டு கண்டெடுப்பு
கிபி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டெடுப்பு
சில இடங்களில் கண்மாய் வரத்துக் கால்வாய் பகுதியில் கலிங்கு அமைந்திருப்பதால் அடுத்தடுத்து நீர் நிலைகளுக்கு நீரை திருப்பிவிட்டு பங்கீடு செய்வதற்கு ஏதுவாக அமைகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நீர்ப்பங்கீடு முறையை ஊராட்சி அமைப்புகளின் மூலம் உருவாக்கி மேலாண்மை செய்வதற்கு தனியாக கலிங்கு வாரியம் என்ற குழுவை ஏற்படுத்தி நிர்வாகம் செய்தார்கள்.

நீர் பாணிக்கர்: உவரி பெரிய கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கிழக்குப்பகுதியில் லிங்க வடிவம் கொண்ட தனி தூண் கல்லில் 5 அடி உயரம், 1 அடி அகலம், 6 வரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. இக்கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்தபோது முதல் இரண்டு வரிகள் முற்றிலும் தேய்மானம் ஏற்பட்டு சிதிலமடைந்து காணப்பட்டது.

'காணியம் நீர் அளித்த பாணிக்கர் செய்த' என்ற எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. உவரி பெரிய கண்மாயில் இருந்து நீர் நிரம்பிய பிறகு அருகே உள்ள தென்னமநல்லூர், புளியங்குளம் கண்மாய்க்கு நீரோடை வழியாக நீர் செல்லும். இவ்வூருக்கு நீர் பாணிக்கர் என்ற இனக்குழுவினரால் சரிபாதியாக நீர் பிரித்து கொடுக்கப்பட்டது என்பதை இக்கல்வெட்டு மூலம் அறியலாம்.

தற்போது கண்மாயிலிருந்து கலிங்கு வழியாக மறுகால் பாய்ந்தாலும் ஒரே மாதிரியான நீர் வெளியேறும் கட்டுமானம் அமைந்து இருப்பது மற்றொரு சிறப்பு" என்றார்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் கள ஆய்வில் கண்டுபிடிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.