ETV Bharat / state

கோயிலுக்கு வழிபடச் சென்ற பெண் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

author img

By

Published : Feb 7, 2020, 2:36 PM IST

கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே வனப்பகுதியில் உள்ள கோயிலுக்கு வழிபட சென்ற பெண், காட்டுயானை தாக்கி உயிரிழந்தார்.

wild elephant attack kills women in krishnagiri, கிருஷ்ணகிரி கோயில் வழிபாடு
wild elephant attack kills women in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. கூலித் தொழிலாளியான இவர், நேற்று மரகட்டா கிராமம் அருகே வனப் பகுதியில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு வழிபடச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, சரஸ்வதியை ஒற்றை காட்டு யானை தூக்கி வீசியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.

மரகட்டா வனப் பகுதியில் பெண் உயிரிழந்திருப்பதாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : விமானத்தில் வந்த 645 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத் துறை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. கூலித் தொழிலாளியான இவர், நேற்று மரகட்டா கிராமம் அருகே வனப் பகுதியில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு வழிபடச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, சரஸ்வதியை ஒற்றை காட்டு யானை தூக்கி வீசியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.

மரகட்டா வனப் பகுதியில் பெண் உயிரிழந்திருப்பதாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : விமானத்தில் வந்த 645 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத் துறை

Intro:ஓசூர் அருகே வனப்பகுதியில் உள்ள கோவிலில் வழிபட சென்ற பெண், காட்டுயானை தாக்கி உயிரிழப்பு சம்பவ இடத்திடல் வனத்துறையினர் விசாரணை.Body:ஓசூர் அருகே வனப்பகுதியில் உள்ள கோவிலில் வழிபட சென்ற பெண், காட்டுயானை தாக்கி உயிரிழப்பு சம்பவ இடத்திடல் வனத்துறையினர் விசாரணை.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரகட்டா கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி என்பவர் கூலி,வேலை செய்து வந்துள்ளார்.

இன்று, மரகட்டா கிராமத்தின் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோவிலில் வழிபட சென்றதாக கூறப்படுகிறது

அவ்வாறு சென்ற சரஸ்வதியை ஒற்றை காட்டுயானை தூக்கி வீசியதில், உடலில் காயங்களுடன் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மரகட்டா வனப்பகுதியில் பெண் உயிரிழந்திருப்பதாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்திருந்த சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.