ETV Bharat / state

மதுபாட்டிலால் முதியவர் அடித்துக் கொலை; இளைஞர் வெறிச்செயல்!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பாகலூர் காவல் நிலையத்திற்கு பின் புறம் பணத் தகராறில் முதியவரை இளைஞர் மது பாட்டிலால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Old man beaten to death by alcohol Youth hysteria
author img

By

Published : Jul 23, 2019, 10:31 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பன்னப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கட்டராமப்பா (70) என்பவர் பாகலூர் காவல் நிலையத்திற்கு பின்புறம் பெரியார் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்துவந்துள்ளார்.

இவருக்கும், தேர்ப்பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் என்பருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சிக்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரத்குமார், முதியவரிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் குடிபோதையில் இருந்த சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலால் முதியவரின் தலையில் பலமாக அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுபாட்டிலால் முதியவர் அடித்து கொலை

இதைத் தொடர்ந்து மது போதையில் இருந்த சரத்குமார் பாகலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல் துறையினர் சரத்குமரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பன்னப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கட்டராமப்பா (70) என்பவர் பாகலூர் காவல் நிலையத்திற்கு பின்புறம் பெரியார் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்துவந்துள்ளார்.

இவருக்கும், தேர்ப்பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் என்பருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சிக்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரத்குமார், முதியவரிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் குடிபோதையில் இருந்த சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலால் முதியவரின் தலையில் பலமாக அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுபாட்டிலால் முதியவர் அடித்து கொலை

இதைத் தொடர்ந்து மது போதையில் இருந்த சரத்குமார் பாகலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல் துறையினர் சரத்குமரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காவல் நிலைத்தின் பின்புறம் முதியவர் மது பாட்டிலால் அடித்துக்கொலை : போதையில் இளைஞர் வெறிச்செயல் இளைஞர் கைது.Body:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காவல் நிலைத்தின் பின்புறம் முதியவர் மது பாட்டிலால் அடித்துக்கொலை : போதையில் இளைஞர் வெறிச்செயல் இளைஞர் கைது.

ஓசூர் அருகே பாகலூர் காவல் நிலையத்திற்கு பின் புறம் பணத்தகராறில் முதியவரை இளைஞர் ஒருவர் குடிபோதையில் மது பாட்டிலால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பன்னப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கட்டராமப்பா (70) என்பவர் பாகலூர் காவல் நிலையத்திற்கு பின்புறம் பெரியார் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் தேர்ப்பேட்டையை சேர்ந்த
சரத்குமார் என்பருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரத்குமார் , வெங்கட்டராமப்பா என்பருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகரில் குடி போதையில் இருந்த சரத்குமார் தான் மறைத்து வைத்து இருந்த மது பாட்டிலில் வெங்கட்டராமப்பாவின் தலையில் பலமாக அடித்தத்தில் வெங்கட்டராமப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதை தொடர்ந்து மது போதையில் இருந்த சரத்குமார் பாகலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.தொடர்ந்து உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சரத்குமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் நிலைத்தின் அருகமையிலேயே நடந்த இந்த கொலை சம்பவம் பாகலூர் பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.