ETV Bharat / state

’உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்’ - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

author img

By

Published : Dec 11, 2019, 6:30 PM IST

கிருஷ்ணகிரி: உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிகளை முறையாகப் பின்பற்றி, அமைதியான தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

krishnagiri
krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆட்சியர், ”கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிராம ஊராட்சிகள் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதில், 12 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகள் பதிவு செய்யும் வகையில் தனித்தனி நிறங்களில் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்

வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களிலேயே ஊர்வலங்கள், பரப்புரைகள் குறித்த அனுமதியினை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 தினங்களில் செலவுக் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். மீறுவோர் மீது மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடாத வகையில், தேர்தல் ஆணையத்தால் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்புக்காகக் காணொலிப் பதிவு, இணையவழி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். தேர்தல் புகார்களை 24 மணிநேரமும் தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம். தேர்தல் நடத்தை விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்றி அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம்: செல்ஃபோனில் வீடியோ எடுத்ததால் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆட்சியர், ”கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிராம ஊராட்சிகள் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதில், 12 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகள் பதிவு செய்யும் வகையில் தனித்தனி நிறங்களில் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்

வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களிலேயே ஊர்வலங்கள், பரப்புரைகள் குறித்த அனுமதியினை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 தினங்களில் செலவுக் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். மீறுவோர் மீது மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடாத வகையில், தேர்தல் ஆணையத்தால் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்புக்காகக் காணொலிப் பதிவு, இணையவழி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். தேர்தல் புகார்களை 24 மணிநேரமும் தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம். தேர்தல் நடத்தை விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்றி அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம்: செல்ஃபோனில் வீடியோ எடுத்ததால் பரபரப்பு!

Intro:உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்றி அமைதியான தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- அனைத்து கட்சியின் பிரமுகர்கள் கூட்டத்தில் ஆட்சித் தலைவர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்தார்.Body:உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்றி அமைதியான தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- அனைத்து கட்சியின் பிரமுகர்கள் கூட்டத்தில் ஆட்சித் தலைவர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்தார்.


கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்ற அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றிய ஆட்சித் தலைவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதில் 12 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் உள்ளனர். ஒவ்வொரு வாக்காளர்களும் 4 வாக்குகள் பதிவு செய்யும் வகையில் தனி தனி நிறங்களில் வாக்கு சீட்டுகள் வழங்கப் பட உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களிலேயே ஊர்வலங்கள், பிரச்சாரங்கள் குறித்த அனுமதியினை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்ட 30 தினங்களில் செலவுக் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். மீறுவோர் மீது மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடாத வகையில் தேர்தல் ஆணையத்தால் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க படும்.பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதிகப் பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள், வீடியோ பதிவு மற்றும் இணைய வழி கண்காணிப்பு மேற்கொள்ளப் படும். தேர்தல் புகார்களை 24 மணிநேரமும் தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம். தேர்தல் நடத்தை விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்றி அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.